Sunday, September 18, 2011

துடைப்பத்துக்கு மரியாதை கொடு



* அனைவருக்கும் அவரவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். துடைப்பமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதையைத் தரவேண்டும். எல்லா வேலைகளையும் பக்திபூர்வமாகச் செய்ய வேண்டும்.
* எதைச் சாப்பிட்டாலும், முதலில் அதைக் கடவுளுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும். கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யாத எதையும் உண்ணக்கூடாது.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து அமைவதில்லை. அப்பொருளை எவ்வளவு அன்புடன் கொடுக்கின்றனர். என்பதைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு உயரும்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல. நம் மனமும் கெட்டுவிடும். அதனால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். அதனால் நாம் நம் கடமையில் முழுமையாக நம்மை இணைத்துக் கொண்டு ஆர்வமுடன் செயல்படவேண்டும்.
* துன்பங்களால் நொந்து வருந்துபவர்கள் தங்கள் உள்ளங்களை இறைவனிடம் திறந்து காட்டுங்கள். ""இறைவா! எனக்கு அமைதி கொடு!'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

No comments:

Post a Comment