Wednesday, November 16, 2011

பூமியின் வரலாறு

இன்று நாம் வசிக்கும்  இந்த உலகம் ஒரு காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல இருந்ததில்லை. 
                                                         
அப்பொழுது அண்டவெளி எங்கும் ஒரே இருள்.  ஒரே அமைதி . 

ஆதியில் அணுவுக்கு அணுவாய் இருக்கும் பரமாணுக்களான
எலக்ட்ரான் , புரோட்டான், நீயூட்ரான்   போன்றவைகள்
அண்டவெளியில் செயலற்ற நிலையில் இருந்தன. 
அப்பொழுது அண்டவெளி முழுவதும் ஊடுருவி இருந்த மகாசக்தியானது 
( conversation of  energy ) தான்  இயக்கும் சக்தியாக மாறி  ( potential force ) 
அண்டவெளி முழுதும் பரவியிருந்த பரமாணுக்களை  இயங்கும் சக்தியாக
  ( kinetic force ) மாற்றி செயல்பட வைத்தது.
எப்படி காந்தமானது இரும்பு துகள்கள் பக்கம் வரும்பொழுது அவைகள் சலனமுற்று நகரத் தொடங்குவது போல.
            அதனால் பரமாணுக்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து
ஒரு அணு (atom ) என்பது உருவாயிற்று. இப்படி பலவிதங்களில்
பலவிதமான அணுக்கள் அண்டவெளியில்  உண்டாகி அசைந்து
நகரத் தொடங்கின.  பலகோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து கண்ணுக்குப் புலப்படாத தூசிகளாகவும், துகள்களாகவும்  அண்டவெளியில் உண்டாயிற்று.

                                     இப்படி உண்டான அணுக்கள் தன்னைத் தானே
சுற்றிக் கொண்டிருக்கும் பிற பொருட்களை தன்பால் ஈர்க்கும்
சக்தியினைக் கொண்டதாகவும் இருந்தன.

இந்த அண்டத் துகள்கள்  தன் ஈர்ப்பு சக்தியால் பல ஒன்றாகி மிகப் பிரம்மாண்டமான உருவம் கொள்ள ஆரம்பித்தது.
இப்படி கோடானு கோடி பொருட்கள் அண்டவெளியில் உருவானது . அவைகளில் மிகப் பெரிய பிரம்மாண்டமான இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று அண்டவெளியில் மோது வெடித்துச் சிதறியது.
அந்த வினாடியில் அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த வெப்பம்  ( Heat ) கொண்ட ஒளியும்  ( light )மற்றும் பேராற்றல் கொண்ட ஒலியும் (sound )உண்டாயிற்று. 
இந்த நிகழ்வினை  மகா வெடிப்பு  ( Big bang theory )என்று விஞ்ஞானம் கூறியது.
                   இப்படி வெடித்து சிதறிய பாகங்கள், மையப் பகுதியில் இருந்த பிரகாசமான ஒளியினைச் சுற்றி வர ஆரம்பித்தன. 
இந்த பிரகாசமான ஒளியினையும், அதீதமான வெப்பத்தையும் கொண்ட மையப் பகுதி சூரியன் என்றாயிற்று.  இந்த சூரியன் என்பது வாயுக்களால் ஆன ஒரு  நட்சத்திரமாகும்.
                                          சூரியன் மிகவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டது. அதாவது  பூமியைப் போல 10 லட்சம் பூமிகளை இந்த சூரியனில் பொருத்தலாம். 

சூரியன் அதன் மைய அச்சில் சுழல்கிறது.
ஒரு சூரிய சுழற்சி முடிவடைய 22 ஆண்டுகளாகும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியினை விட சூரியனின் ஈர்ப்பு சக்தி 28 மடங்கு அதிகமாகும்.
அதனால் மற்ற கோள்கள் தன்னை விட்டு விலகிப் போகாமல் வைத்துக் கொண்டது.

Thursday, November 10, 2011

உடலே மருந்து - போகரின் பொன்னூசி வைத்திய முறை




உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். இங்கே நாம் பேசப் போவது ‘உடலே மருந்து’ என்பதை!

‘‘உடல் எங்கேயாவது மருந்தாக செயல்படுமா? அதை என்ன கரைத்தா குடிக்க முடியும்?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடம்பைக் கரைத்துக் குடிக்க முடியாதுதான். நம்மால் மட்டுமல்ல… எந்த நோயாலும் நம் உடலையும் கரைத்துக் குடித்துவிட முடியாது. அந்த நோயை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி நம் உடலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. ஆஞ்சநேயர் போல தன் பலத்தை தானே அறியாமல் சோர்ந்திருக்கும் நம் உடலுக்கு அதன் பலத்தை நினைவுபடுத்த வேண்டியதுதான் நம் வேலை. மற்றவற்றை இயற்கையே பார்த்துக் கொள்ளும். இந்த புதுமை சிகிச்சைக்கு டாக்டரும் தேவையில்லை; மணிக்கணக்கில் காத்திருக்கவும் தேவையில்லை; பணமும் செலவழிக்கத் தேவையில்லை! உங்களுக்கு நீங்களே டாக்டர்…

அந்தக் காலத்தில் இன்றிருப்பது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஏது… மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஏது? தலைவலி, காய்ச்சல் என்றால், இஞ்சியையும் சுக்கையும் தட்டி வெந்நீரில் போட்டுக் குடித்து நிவாரணம் கண்டவர்கள் நம் முன்னோர். இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் என ஒன்றையும் விடவில்லை அவர்கள். தான் படைத்த எல்லாப் பொருளிலும் ஏதோவொரு மருந்தை மனிதனுக்காக வைத்திருந்தது இயற்கை. அந்த மருந்துகளுக்கெல்லாம் மாமருந்தை மனிதனின் உடலுக்குள் வைத்திருந்தது. அதைத்தான் இந்தத் தொடரில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாருங்கள். அவர் அப்படி இயங்குவது நல்ல ஆரோக்கியத்தையே காட்டுகிறது. அந்த ஆரோக்கியம் உடலினுடையதா; அல்லது அதன் ஒரு பகுதியான மூளையினுடையதா? பிரித்தறியக் கஷ்டமாக இருக்கிறதா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளை மந்தமாக இருக்காது. மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் உடலின் பொலிவு மற்றும் இயக்கத்திலிருந்தே அதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொடர்பில்தான் அடங்கியிருக்கிறது உடல் மருந்தாவதன் ரகசியம்.

தொடர்பு என வருகிறபோது இருதரப்பை இணைக்கிற ஒரு கருவி அங்கு முக்கியமாகிறது. நம்புங்கள்…
 நமது மூளையும் உடலின் மற்ற பாகங்களும் தோலின் வெளிப்பகுதிகளில் கண்ணுக்குப் புலப்படாத
 வகையில் விரவியிருக்கும் சிறுசிறு புள்ளிகள் மூலம்தான் பரஸ்பரம் உறவைக் கொண்டுள்ளன.
 ‘அக்கு புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன அந்தப் புள்ளிகள். ‘எண்சாண் உடம்புக்கு தோல்
அரண்’ என்றால் அந்த பார்டரில் நின்றபடி உடம்பைக் காக்கும் சிப்பாய்கள் இந்தப் புள்ளிகள்.
 உள்ளங்கை, பாதம், காது மடல்களில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் பரவலாகவும்
 காணப்படுகிற இந்த அக்கு புள்ளிகள் நம் உடலில் சுமார் 900க்கு மேல் உள்ளன. ‘இந்தப்
புள்ளிகளால் எந்த நோயையும் விரட்டலாம்’ என்பது நிரூபிக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.

‘அக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஊசியை வச்சுக் குத்துவாங்களே… அந்தச் சீன வைத்தியமா’
என்கிறார்கள் இங்கு. அக்கு புள்ளிகளை மெல்லிய ஊசிகளால் தூண்டி நோய்களுக்குத் தீர்வு காண்பது ‘
அக்குபஞ்சர்’; ஊசிகளுக்குப் பதில் விரல்களைப் பயன்படுத்துவது ‘அக்குபிரஷர்’. இதெல்லாமே
சீனாவின் கண்டுபிடிப்பு என்றே நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை
 இங்கேயிருந்து – குறிப்பாக தமிழ் மண்ணிலிருந்துதான் – அங்கே போயிருக்கிறது. ‘ஏழாம் அறிவு’
படம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ் மரபின் 18 சித்தர்களில் போகர் பிரபலமானவர். முருகனுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த அவர்,
 உயர்ந்த ரக சீனக் களிமண்ணுக்காக அங்கு சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அங்கு இனம் தெரியாத
 நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்திருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த பொன்னூசி வைத்திய
முறையில் அவர்களில் சிலரைக் குணப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த சிகிச்சையில் கிடைத்த
அற்புத நிவாரணம், சீனர்களை அதிசயிக்க வைத்தது. தங்களுக்கும் அதைச் சொல்லித் தரக்
கேட்டிருக்கிறார்கள். போகரும் சொல்லித் தந்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலக
அரங்கில் அதைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

இன்றைய நிலவரப்படி சீன மக்களில் 70 சதவீதம் பேர் எந்த நோய்க்கும் அக்கு சிகிச்சையே
எடுக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் உலகின் பல நாடுகளில்
இன்று இந்த சிகிச்சை பலருக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது