Wednesday, August 31, 2011

தாயைத் தந்தையை வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக...!

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக,
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்
திருமகன்(திருமகள்) நான் பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருகுருவின் அருள்பெறவே
திருமானின் அருள்பெறவே
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
தினம் தினம் வணங்குகின்றோம்
தாய்பூமியில் தவமிருந்தே
தரணிதனில் பக்குவத்தை
தன் உணர்வின் பொக்கிஷமாய்
தழைத்தோங்கும் உயர் ஞானமுடன்
தக்கதொரு செயலுருவாய்
திக்கெட்டும் சத்தியத்தின் சக்தி நிலை
திகழ்ந்தோடும் வளர்ச்சியில் யாம்
திகழ்ந்திடவே அருள் செய்வீர்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்


Wednesday, August 17, 2011

சகாதேவனின் சாஸ்திரமும், அமாவாசை முன்னுக்கு வந்த விதமும்..



பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடு தரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்த பின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.
கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.
பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.

நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.

அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.

அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.

ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறு நாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றி பெற முடியவில்லை.

ஓஷோவின் விளக்கம்


சந்தோஷம் பற்றி ஓஷோ
தியானம் சந்தோஷத்தை கொண்டு வருகிறது என்ற சிந்தனை ஏன் மக்களின் மனதில் எழுகிறது? உண்மையில் அவர்கள் சந்தோஷமான மனிதனை காணும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் ஒரு தியானதன்மையுள்ள மனதை அறிந்து வந்துள்ளனர். – இரண்டு விஷயங்கள் தொடர்பு பெற்று விட்டன. எப்போதெல்லாம் அவர்கள் ஒரு அழகான தியான ஒளிவட்டம் ஒரு மனிதனை சூழ்ந்திருப்பதை கண்டார்களோ, அந்த மனிதன் அதிக சந்தோஷத்தோடு இருப்பதை, பரவச அதிர்வோடு, பிரகாசமாக இருப்பதை அறிந்து வந்துள்ளனர். இரண்டு விஷயங்களும் தொடர்புள்ளவையாகிவிட்டன. நீ தியானதன்மையோடு இருக்கும்போது சந்தோஷம் வருவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே தலைகீழாக உள்ளது. நீ சந்தோஷமாக இருக்கும்போது தியானம் வருகிறது.
ஆனால் சந்தோஷமாக இருப்பது கடினம். தியானத்தை கற்றுக் கொள்வது எளிது. சந்தோஷமாக இருப்பது எனில் உன்னுடைய வாழ்க்கைமுறையில் ஒரு தடாலடி மாற்றம், ஒரு திருப்பம் – ஏனெனில் இழப்பதற்கு நேரம் இல்லை. ஒரு திடீர் மாற்றம் – ஒரு திடீர் இடி முழக்கம் – ஒரு தொடர்பறுந்த நிலை........
நீ திரும்பவும் பிறந்திருக்கிறாய். நீ திரும்பவும் வாழ்க்கையை உன்னுடைய பெற்றோர்கள் பழக்கவழக்கத்தை, உன்னுடைய சமுதாயம் உன்னுடைய நாடு, திணிக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்போது எப்படி வாழ்ந்திருப்பாயோ, உன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லாவிட்டால் எப்படி இருந்திருப்பாயோ, அப்படி வாழ தொடங்குகிறாய் ஆனால் நீ தொந்தரவு செய்யப்பட்டுவிட்டாய்.
உன்மேல் திணிக்கப்பட்ட அத்தனை பழக்க வழக்கங்களையும் நீ உதறியாக வேண்டும் மற்றும் நீ உன்னுடைய சொந்த ஒளியைக் கண்டறிய வேண்டும்.
பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே, ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய். பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி.
நான் பணத்திற்கு எதிரானவல்ல. என்னை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. நான் பணத்திற்கு எதிரானவல்ல, பணம் ஒரு அதிகரிக்கும்கருவி. நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷத்தை அடைவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷமற்ற தன்மையை அடைவாய். ஏனெனில் உன்னுடைய பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் - உன்னுடைய பணம் உன்னுடைய பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும். நீ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உன்னிடம் சக்தி உள்ளது, நீ உனது சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உன்னுடைய சக்தியை வைத்து மேலும் அதிக விஷத்தை உனக்கு நீயே கொடுத்துக் கொள்வாய். நீ மேலும் அதிக துன்பபடுவாய்.
பணம் சந்தோஷத்தை கொண்டு வரப் போகிறது என்பதைப் போல மக்கள் பணத்தை தேடுகிறார்கள். கௌரவம் சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்பதைப் போல மக்கள் கௌரவத்தைக் தேடுகிறார்கள். வேறு எங்காவது மேலும் அதிக பணம் கிடைக்குமென்றால் எந்த நொடியில் வேண்டுமானாலும் மக்கள் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள, அவர்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
முல்லா நசுரூதீன் மகள் வீட்டிற்கு வந்து அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் அந்த ஊரிலேயே மிகப் பணக்காரனாக உள்ளவன்தான் என்றும், அவன்தான் அந்த பிள்ளைக்கு தந்தை என்றும் கூறினாள். முல்லா நசுரூதீன் மிகவும் கோபமடைந்தார். அவர் அந்த பணக்காரனின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் விரைந்து சென்றார். அவர் அந்த பணக்காரனை ஒரு மூலையில் பிடித்து தள்ளி,இப்போது நீ உனது கடைசி மூச்சை விட்டுக் கொள், அல்லது கடவுளிடம் கூற வேண்டிய பிரார்த்தனை ஏதாவது இருந்தால் கூறிக்கொள் எனக் கூறினார்.
பணக்காரன் புன்சிரிப்புடன், நீங்கள் ஏதாவது கிறுக்குத்தனமாக செய்துவிடுமுன் கேளுங்கள். ஆமாம், உங்களுடைய மகள் என்னால் கர்ப்பமடைந்திருப்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பையன் பிறந்தால் அந்த பையனுக்காக வங்கியில் நான் ஒரு இலட்சரூபாய் போட்டு வைத்து விடுகிறேன், ஒரு பெண் பிறந்தால் அந்தப் பெண்ணுக்காக ஐம்பதினாயிரம் ரூபாய் நான் வங்கியில் போட்டு விடுகிறேன் எனக் கூறினான்.
முல்லா அவனுடைய துப்பாக்கியை எடுத்து விட்டு, ஐயா, ஏதாவது தவறு நடந்து கர்ப்பம் கலைந்துவிட்டால், அல்லது வேறு ஏதாவது நடந்துவிட்டால் நீங்கள் திரும்பவும் என் பெண்ணுக்கு ஒரு வாய்ப்புத் தர தயாரா?” எனக் கேட்டான்.
SOURCE : A SUDDEN CLESH OF THUNDER

ஓஷோ-சிந்தனைகள்-கோபம் மறைய

கோபம் கொள்ளும் போதெல்லாம் ஐந்து தடவை ஆழ்ந்துசுவாசியுங்கள்.இந்த எளிய 
பயிற்சி வெளிப்பார்வைக்கு கோபத்துடன்சம்பந்தம் இல்லாதது போலத்தோன்றும்.உணர்வற்றவராக நீங்கள்இருக்கும்போதே கோபம் வரும்.இப்பயிற்சி உணர்வுள்ள ஒருமுயற்சி.

இப் பயிற்சி உங்கள் மனதை உன்னிப்புடையதாகஆக்கும்.மனம் விழிப்படைகிறது
உடலும் விழிப்படைகிறது.இந்தவிழிப்பான கணத்தில் கோபம் மறைந்து விட்டிருக்கும்
இரண்டாவதாக,உங்கள் மனது ஒரு பக்கத்தில் மட்டுமே முனைப்பாகஇருக்க 
முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களை மனத்தால்சிந்திக்க முடியாதுகோபம் 
இருந்தால் அது மட்டுமே இருக்கிறதுமூச்சுப் பயிற்சியில் மனம் மூச்சு விடுவதோடு மட்டுமேஇருக்கிறது.அதாவது மனதின் கவனம் திரும்பி இருக்கிறது.இப்போதுஅது வேறு 
பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறதுமறுபடியும் நீங்கள்கோபிக்கத் திரும்பினாலும் 
பழைய மாதிரி உங்களால் கோபிக்கமுடியாதுதொடர்ந்து கோபம் வரும்போதெல்லாம் 
இப் பயிற்சியை செய்யுங்கள்
அப்போது அது ஒரு பழக்கமாக ஆகி விடுகிறதுஇனி நீங்கள் நினைத்துப் 
பார்க்காமலேயே கோபம் வரும்போதெல்லாம்உடனடியாக உங்கள் உடல் இயந்திரம் 
தானே வேகமாக ஆழ்ந்து மூச்சுவிட தொடங்குகிறது.சில ஆண்டுகளில் கோபம் உங்களிடமிருந்து மறைந்து விடும்

Tuesday, August 16, 2011

சொர்க்கம் செல்ல வழி..!

ஒரு பணக்காரன் வந்து குருவிடம் கேட்டான். 'ஸ்வாமி' சொர்க்கத்திற்குச் செல்ல ஒரு வழி கூறுங்கள்!' குரு சொன்னார் 'தினமும் தர்மம் செய்து வா.' ஒரு வாரம் கழித்து அவன் வந்து தான் தினமும் ஒரு கைபிடி அரிசி தர்மம் செய்து வருவதாகவும், தான் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி தானே எனவும் கேட்டான். அதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தோட்டத்திற்குச் சென்று மரத்தின் அடிபாகத்தை தன் நகத்தால் கீற ஆரம்பித்தார்.
அவர் என்ன செய்கிறார், எதாற்காக செய்கிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கடைசியில் பொறுமை இழந்து அவரிடமே கேட்டு விட்டான். அவர் சொன்னார், 'இப்படி நகத்தால் கீறியே இந்த மரத்தை சாய்க்க போகிறேன்'. அவருடைய செய்கை பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும் பணிவோடு 'ஸ்வாமி, இது நடக்கக் கூடிய காரியமா!?' எனக் கேட்டான்.
'ஒரு கைப்பிடி அரிசியை தர்மம் செய்து மோட்சத்தைப் பெற முடியுமானால், கையால் கீறி இந்த மரத்தைச் சாய்க்க முடியாதா?' அப்பொழுது தான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. தன் சொத்து முழுவதையுமே ஊர் மக்களுக்குக் கொடுத்து விட்டு அவருடைய சீடனாக ஆசிரமத்திலேயே தங்கி விட்டான்.

Monday, August 8, 2011

தமிழில் ஆதிசங்கரரின் ஆத்மபோதம்



ஆதி சங்கரரின் சமஸ்கிருத நூல்களில் ஒன்று ஆத்ம போதம்.

இந்நூலை ரமண மகரிஷி தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது, ஏனெனில்... இந்நூல் உருவான கதையை நீங்களே கேளுங்களேன்:

ஒருநாள் ரமணருக்கு தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்திருந்தன. ஒன்று சமஸ்கிருத மூல ஆத்ம போதம். மற்றொன்று ஆத்ம போதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. சமஸ்கிருதம் சற்றே தெரிந்த ஒரு இஸ்லாமிய தமிழ் அறிஞர்தான் மொழி பெயர்த்திருந்தார்!

ரமணர் அந்த புத்தகங்களை பார்த்துவிட்டு நூலகத்தில் வைக்கச்சொல்லி விட்டார். பின்னர் ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சமஸ்கிருத மூல ஆத்ம போதம் நூலைக் கொண்டு வரச் சொல்லி, அதை கொஞ்சம் படித்துப் பார்த்தார்.

பின்னர் முதல் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாய் எழுதி, அன்பர் ஒருவரிடம் காட்டினார். அவர் அந்த வெண்பாக்களை படித்து விட்டு, மீதமுள்ள 66 சுலோகங்களயும் வெண்பாக்களாக ரமணர் அருளினால் நன்றாக இருக்குமே என்று தன் ஆவலை வெளிப்படித்தினார். அதற்கு ரமணர் 'ஆமாம், ஆமாம், எதற்கு இதெல்லாம்?' என்று மட்டுமே சொன்னார்.

பின்னர் இரண்டு நாள் கழித்து இன்னமும் சில சுலோகங்களையும் பாக்களாக எழுதி இருந்தார் ரமணர். "எழுதாமல் அமைதியாய் இருக்கலாம் என்றால் இயலவில்லை. ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று - என தானே ஒவ்வொரு வெண்பாவாக வெளியே வந்து என் முன் நிற்பது போல இருக்கிறது" என்றாராம்!. இப்படியாக, சில தினங்களில் முழு நூலின் 68 சுலோகங்களையும் 68 வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

இப்படித்தான் தமிழில் பாக்களாய் மலர்ந்தது ஆத்ம போதம். ரமணர் தானாகவே எழிதிய புத்தகங்கள் மிகக் குறைவு. அவரவது உள் உந்துதலால் நமக்காக மலர்ந்தது, நமக்கான அருளல்லவோ!

நூலில் இருந்து சில பாக்களும், அதன் விரிவுரைகளும்:

பா 18.

உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

விடவேறாவட்றின் விருத்தி - யுடனே

எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

அவைக்கரசன் போல அறி.

உன் ஆன்மா என்பதாவது - உன் உடலல்ல. உன் அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா - அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை.



பா 19.

கருவிகள் இன்றொழில் காண்தவ விவேகி

கருத்தாண்போன்று ஆன்மாவைக் காண்பான் - துரிதமாய்

ஓடுமே கண்கண்டு உணர்வில் சந்திரனே

ஓடுகிறான் என்பதை யொத்து.

வானில் மேகங்களுக்கு நடுவே ஒளிந்து மறைந்து துரிதமாக சந்திரன் ஓடுவது போல தோற்றம் அளித்தாலும், வேகமாக ஓடுவது மேகங்களே. ஆனால் இதை அறியாத குழந்தைப் பருவத்தினர் சந்திரன் தான் விளையாட்டு காட்டுவதாக நினைப்பர்.

அதுபோல மனதில் தோன்றும் எண்ணங்களும், உடலின் அவையங்களால் உணரப்படும் உணர்வுகளும் ஆன்மாவின் செயல்கள் என்று நினைப்பர், மாயையினால்.



பா 20:

ஞானஒளி ஆன்மாவை எண்ணி உடல்பொறிகண்

மனதாம் புத்திஇவை எண்ணுதமக் - காணாதொழில்

ஆற்றிடும் ஆதித்த னொளியான் மாக்கதொழில்

ஆற்றுவது போற்றிலும் அறி.

உடல், காணும் கருவியாம் கண், மனம், புத்தி ஆகியவை ஆன்மாவின் ஞான ஒளிதனைப் பெற்று தத்தம் செயல்களை நடத்துகின்றன.

இது எதுபோல என்றால் - ஆதித்தன் பகலில் ஒளிரும் போழுது, அதன் ஓளியின் கீழ் மனிதன் செயல்களைச் செய்வது போலவாகுமாம்.

உடலுக்கும் அதன் அவையங்களுக்கும், புத்திக்கும் ஆன்மாவின் ஞான ஒளி குறையக் குறைய, செயல்கள் தீதில் முடியும். இதனால் ஆதவனாம் ஆன்மாவிற்கு ஏதும் பாதகம் இல்லை. செயல்களின் விளைவை உடல்தான் பெறுகிறது.



பா 21:

தேகம் பொறிகடிகாழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதானமாவில் - மோகத்தாற்

கற்பிப்பார் சுத்த வானத்தின் நீலமுதற்

கற்பித்தால் போலக் கருது.

தேகம், அதன் அவையங்கள், அவற்றில் ஒளிரும் குணங்கள், செயல்களின் விளைவுகள் - இவை யாவுமே ஆன்மாவினால் என்று நினைப்பர். இது வானமானது நீல நிறத்திலானதொரு பொருள் என்று எண்ணுவதைப் போலாகும்.

வானம் நீலமாக தெரிந்தாலும் நீலம் வானத்தின் குணமல்ல. பூமியில் இருந்து நாம் பார்க்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் நீல நிறத்தில் பிரிதலினால் வானம் நீலமாய் தெரிகிறது. நம் எந்த ஒரு குணமும் ஆன்மாவின் குணமல்ல.

(பி.கு: வெண்பாக்கள் சீர்களாக அல்லாமல் பிரித்து தரப்பட்டுள்ளது. பிரித்தலினால் பொருளில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி!)