Wednesday, December 24, 2014

நாளை என்பது நம் கையில் இல்லை!

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக் கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், "என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்,'' என்றது.
இரக்கமில்லாத அந்தப் பறவை, ""அடேய், எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன்,'' என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.
கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், "வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும்' என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது.
"அடே பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஊஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான்,'' என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

Wednesday, December 3, 2014

கபீரும் குருபரரும்


கபீரும் குருபரரும் சொல்ல வருவது ஒன்றே. சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே.

Wednesday, November 12, 2014

என்னை மாற்றும் இந்த பதிவுகள்

மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது. நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்

“ஒருநாள் ஒரு நண்பர் மகரிஷி 
 ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.
“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிஷி .
“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”
“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”
“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”
“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்
நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”
இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.
ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.
உடனே மகரிஷி  “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.
அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.
மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரி
ஷியும் செய்துள்ளார்

Wednesday, October 1, 2014

கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் இருக்கிறதே.

 

அந்தச்சிலைகள் அங்கு நிற்பதன் தத்துவம் என்ன?
அவை துவாரபாலகர் சிலைகள். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபு. 

தர்ப்பத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம் -

அதில் உள்ள தேவதாம்ஸம், மகத்துவம், வேதத்தில் தர்ப்பம், உபயோகம், பவித்ரமும் அதன் ரூபமும், கூர்ச்சம், நியமங்கள், மற்ற உபயோகங்கள் போன்ற பல விஷயங்கள்
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். இதில் சந்தேகமே வேண்டாம். பாவங்களைப் போக்கக் கூடியது தர்ப்பம். நம்மைச் சுத்தமாக்கும் சக்தி இதற்குண்டு.
குச ப்ரசம்ஸை
தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன் ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர் வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.
தேவதாம்ஸம்
தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். ஹாரீதர், மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வ்யாஸர், சாதாதபர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பரத்வாஜர், சாலஸ்காயனர், யாக்ஞவல்க்யர், ஆஸ்வலாயனர், ஆபஸ்தம்பர் போன்ற மகரிஷிகள் தர்ப்பத்தின் விசேஷ தன்மை பற்றி அருள் செய்துள்ளனர். கர்மானுஷ்டானங்களிலும், தேவ, பித்ரு கார்யங்களிலும் தர்ப்பங்களை உபயோகப்படுத்தும் வழிகளில் ஓரிரு வித்யாசங்கள் இவர்களிடையே தென்பட்டாலும், பொதுவாக தர்ப்பத்தின் மகிமையை இம்மகான்கள் அருள் பாலித்துள்ள விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. இது நமது பாக்யமே.
வேதத்தில் தர்ப்பம்
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.
மேலும் ஸாரசமுச்சம், ஸம்ருதிஸாரம், ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி சந்தாமணி, ஸ்ம்ருதி பாஸ்கரம், விஷ்ணுபுராணம் போன்ற கிரந்தங்களிலும் தர்ப்பத்தின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.
தர்ப்பத்தைச் சுற்றி நிறைய புராண சம்பவங்களும் உண்டு.
மஹாபாரதம் (கருடன் & அம்ருதம் & நாகர்கள் சம்பவம்), ராமாயணம் (இந்த்ரபுத்ரன் ஜயந்தன் & காகம் & சீதாதேவி சம்பம்), கூர்மாவதாரம் (ஸமுத்ர மந்தன்), வானமாவதாரம் (மஹாபலியின் தான சம்பவம்) போன்றவைகள் சில உதாரணங்களாகும். புத்த சம்பிரதாயத்தில் தர்ப்ப அம்சம் உண்டு.
பவித்ரம்
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அணிந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே  ப்ராஹ்மணன் எப்பொழுதுமே பவித்ர பாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால் தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர்.
மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம் தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம் இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு  நாமே பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்
கர்மாவின் பெயர் ஸங்க்யை
ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்
ப்ரேத கார்யங்கள் 1 புல்
பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.
நியமங்கள்
பவித்ரம் அணிவதற்கு முன்பு ஆசமனம் சொல்லியுள்ளது. அதே மாதிரி கர்மா முடிவில் பவித்ர முடிச்சை அவிழ்த்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ஒன்றை கவனித்தல் நல்லது. முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பு பவித்ரத்தைக் காதில் வைத்துக் கொண்டு ஓர் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு பவித்ர கிரந்தியை அவிழ்த்துவிட்டு அதை கீழே «£ட்ட பிறகு மீண்டும் ஓர் ஆசமனம் செய்ய வேண்டும்.
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. அது மாத்திரம் அல்ல. எந்தத் தர்ப்பங்களை விஸர்ஜனம் செய்தாலும் (கையில் இடுக்கிக் கொண்டிருந்த தர்ப்பங்கள், பத்னியிடமிருந்து வாங்கும் தர்ப்பங்கள் முதலியவை) நிர்ருதி மூலையில்தான் போட வேண்டும். எந்தக் கர்மாவாக இருந்தாலும் இதுதான் விதி.
கையில் பவித்ரம் அணிந்திருக்கும் போது (கர்மா நடுவில்) நீர் அருந்த நேரிட்டால், பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு ஜலபாணம் செய்ய வேண்டும். பிறகு காதிலிருக்கும் பவிரத்தைத் தானே கையில் தரித்துக் கொண்டு கர்மாவைத் தொடர்ந்து செய்யலாம். (பவித்ரத்தை வலகு காதில் அல்லாது வேறு இடங்களில் வைப்பதோ, மற்றவர்களிடம் கொடுத்து வைப்பதோ உசிதமல்ல)
ப்ராஹ்மணர்களின் பாதங்களை அலம்பும் போதும். பவித்ரம் வலது காதில்தான் இருக்க வேண்டும்.
மற்ற உபயோகங்கள்
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது. கால் மதிபட்ட தர்ப்பங்கள். பரிஸ்தானம் போன்றவைகளில் உபயோகப்படுத்தப்பட்ட தர்ப்பங்களை வர்ஜிக்க வேண்டும். மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது.
தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.
மகத்துவம்
குச பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார் மகரிஷி ஹாரீதார். மற்றுமொரு ரிஷி குசத்தைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ரா£யுதம் போலவும், பிராஹ்மணன் கையில் குசமுள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்க்ள வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணன் கைவிரலில் உள்ள குசங்களைப் பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.
இப்பேர்ப் பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும். இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்கியத்துவத்தை  நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் தருமர் அளித்த விடைகளும் .........


12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.
யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.
யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.
யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.
யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.
யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.
யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.
யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.
யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.
யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.
யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.
யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.
யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.
யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.
யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.
யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.
யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.
யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.
யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.
யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.
யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.
யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.
யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.
யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.
யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.
யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.
யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்
யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.
யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.
யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.
யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.
யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.
யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.
யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.
யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.
யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.
யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.
இப்படி கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.
தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.
தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.
தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

அரசமரத்தின் முக்கியத்துவம் என்ன?


அரசமரத்தை காலையில் சுற்றுவது நல்லது. இதன் காற்று மலட்டுத்தன்மை, குஷ்டம் போன்ற நோய்களைத் தீர்க்கும் சக்தியுள்ளது. இந்த மரத்தின் கீழ் நிற்கட்டுமே என்பதற்காகத் தான், விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வைத்து, அவரை வணங்க வரும் சாக்கிலாவது நன்மை கிடைக்கட்டுமே என்று சொல்வார்கள். ஒரு சிலர் அரசமரத்தை "அஸ்வத்த நாராயணர்' என்ற பெயரில் வழிபடுகின்றனர். 

தலை குனிந்த கர்வம்....

பாண்டவர்களின் மனைவி  திரௌபதிக்கு கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்று கர்வம் உண்டு. 
வெற்றிக்கு தடையாக இருக்கும் கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார் கண்ணன்.
அப்போது பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசத்தில் இருந்தனர். ஒருநாள் திரௌபதியைத் தேடி வந்தார். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. 
அவள் கண்ணனிடம், ""அண்ணா! துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர், குதிரை, பல்லக்கு என எதையும் காணவில்லையே,'' என்றாள்.
""தங்கையே! உன்னைப் பார்க்கும் ஆவல் உந்தித் தள்ளியது. தங்கை காட்டுக்கு போனாளே, என்ன ஆனாளோ என்று என் அண்ணன் கொஞ்சமாவது என்னைப் பற்றி அக்கறைப் பட்டானா என்று நீ குற்றம் சொல்வாய். அதனால், நடந்தே இங்கே வந்து விட்டேன்,'' என்றார். அதைக் கேட்டு திரௌபதியின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
""கால்கள் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். சரி.. சரி... நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள். உடல் களைப்பு நீங்கும். கால்களுக்கும் இதமாக இருக்கும்,'' என்றாள். 
கண்ணனும் தலையாட்டினார்.
பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி, ஒரு பெரிய கொப்பரையை தூக்கி வந்தான். அதில் வெந்நீர் போட்டால் நூறு பேராவது குளிக்கலாம். அதை ஆற்றில் ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான். அதை அடுப்பாக்கி, 
கொப்பரையை தூக்கி வைத்தான். ஒரு மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். ஆனால், மதியமாகியும் தண்ணீர் சுடவில்லை. கண்ணன் தங்கையிடம், ""அம்மாடி தங்கச்சி... வெந்நீர் என்னாச்சு?'' என்றார். 
திரௌபதி கண்கலங்க, ""அண்ணா! ஏனோ இது கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது,'' என்றாள்.
கண்ணன் பீமனிடம், ""பீமா! அந்த தண்ணீரை கீழே கொட்டு,'' என்றார். பீமனும் கொப்பரையை கவிழ்க்க, உள்ளிருந்து ஒரு தவளை ஓடியது.
""திரௌபதி, விஷயம் இதுதான்! அந்த தவளை சுடு நீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. அதைக் காப்பாற்றவே இப்படி செய்தேன். இப்போது புரிகிறதா? இந்த சாதாரண தவளையின் பக்தி எவ்வளவு பெரியதென்று!'' என்றார். திரௌபதிக்கு சுரீரென உரைத்தது. 
ஆகா! என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேன். இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்தது! ஒரு ஜந்து, கண்ணன் மீது கொண்ட பக்தி காரணமாக உயிர் பிழைத்து ஓடுகிறதே! அதன் பக்தியை என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும்,'' என்று எண்ணி கண்ணீர் வடித்தாள். 
பக்திக்கு கூட கர்வம் கூடாது என்பது புரிகிறதல்லவா!

தெய்வீக கதைகள் 1


அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்ற வயோதிகரிடமிருந்து, இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.ஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூற அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.ஆச்சர்யப்பட்டான் அர்சுன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….!வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?எனக்கும் தெரியவில்லை..?என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…! உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். அதையனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…!இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்….

நீடுழி வாழ்க! " என்பதன் அர்த்தம்:

"நீடுழி வாழ்க' என்பது, ஒரு ஆசிச் சொல். நீடுழி என்றால் எவ்வளவு காலம்... கலியுகம் முடியும் வரையிலா அல்லது இவன் விரும்பும் வரையிலா ... நீண்ட நாள், நீண்ட காலம் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். இதையே,"சதமானம் பவதி' என்பர். இதற்கு பொருள் நூறு வயது வாழ வேண்டும் என்பது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டும் போதுமா... அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம் மூன்றையும் கடவுளிடம் வேண்டச் சொன்னார்கள். ஆரோக்கியமாக இருந்தால் பிறருக்கும், தனக்கும் எவ்வித தொந்தரவும் இருக்காது.
கண் தெரியாமலும், காது கேட்காமலும் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல், எத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்... இவன் எப்போது போவான் என்று தான் வீட்டில் உள்ளோர் அலுத்துக் கொள்வர். "ஐயோ! நான் இப்படி அவதிப்படுகிறேனே... எமன் வரவில்லையே...' என்று, அந்த உயிரும் ஏங்கும். அதனால், ஆரோக்கியம் முக்கியமானது.
அடுத்தது சௌக்கியம்... எல்லாம் இருக்கிறது; தேவையானது கிடைக்கிறது; குறை எதுவுமில்லாத வாழ்க்கை. இது சௌக்கியத்துக்கான அடையாளம். தன் வேலைகளை தானே செய்து கொள்ளும்படியான உடல் நிலை, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய செல்வ நிலை, பிறர் தயவில்லாமல் நாட்களைக் கழிக்கும் நிலை தான் சௌக்கியம்.
அது மட்டுமல்ல, இது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும், இது ஒத்துக் கொள்ளாது என்றில்லாமல், எதை சாப்பிட் டாலும் ஜீரணிக்கும் சக்தி, நல்ல தூக்கம், சுறுசுறுப்பு, இதெல்லாம் இருந்து விட்டால், நீடுழி வாழ்வதில் எந்த வித துன்பமும் இருக்காது.
ஆயுளுடன், ஆரோக்கியம், சவுக்கியம் என்ற இரண்டும் கூடவே இருந்து விட்டால், சுகமாக இருந்து விட்டுப் போய் விடலாம். "ஏதோ கடைசி வரையில் நன்றாகவே இருந்தார். யாருக்கும் எந்த உபத்திரவமுமில்லை. காலம் வந்தது போய் விட்டார்' என்பர். அதனால் தான் பட்டத்ரி, குருவாயூரப்பனிடம், "ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் இம் மூன்றையும் தனக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பக்தர்களுக்கும் கொடு' என்று வேண்டிக் கொண்டார். பகவானும் ஆமோதித்தாராம். மனிதனுக்கு ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் இம்மூன்றுமே வேண்டும். ஏதாவது ஒன்று குறைந்தாலும், பிரயோஜனமில்லை என்று வேண்டினார். இதனாலே தான் வாழ்த்தும் போது "நீடுழி வாழ்க! " என்று சொல் வழக்கானது.

சிவபெருமான் ரிஷபவாகனம் ஏறுதலின் உண்மை

ரிஷபம், தர்மரூபம். அறம் இடபம் எனப் பட்டதற்குக் காரணம் ('வ்ருஷ ஸேசநே' வர்ஷணாத் ஸர்வகாமாநாம் வ்ருஷப: - என்பது சிவதத்துவரகசியம்) நாம் விரும்பியவற்றை யெல்லாம் கொடுப்பதே.
இவ் விதம் அறத்தைத் தமக்கு ஊர்தியாகச் சிவபெருமான் கொண்டருளினார். அவர் அறவழியில் நடப்போர்க்கு அவரவர் விரும்பியவற்றை அருள்பவரென்னும் உண்மையைப் புலப்படுத்துவதாகும்.
அன்றியும் , சிவபெருமான் திரிபுர விஜய ம் செய்த காலத்துத் தேவர்களாற் கற்பிக்கப்பட்ட தேர்  பூமியில் அழுந்தி வேதப் புரவி கற்பிக்கப்பட்ட தேர் பூமியில் அழுந்தி வேதப் புரவி இழுக்க முடியாது இளைத்ததாகத், திருமால் விடை வடிவமாகச் சிவபிரானைத் தாங்கியமை இலிங்க புராணத்தில் கூறப்பட்டது.
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளும்.
'கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே
யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி
தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளி
லிடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ'
(திருவாசகம் திருச்சாழல்) என்றருளியதனாலும் அவ்வுண்மை தெளியப்படும்.

Thursday, September 18, 2014

அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.

அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவ கைச் சமய நெறி’களை சங்கரர் அறிமுகப் படுத்தினார்.
அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம், கொமாரம், காணாபத்யம், சொரம்’ எனப்படுகின்றன. முறையே சிவ பெருமான், திருமால், பராசக்தி, முருகக் கடவுள், விநாயகர், சூரியன் ஆகியோரை முழு முதற்கடவுளராக அறுவகைச் சமயப் பிரிவுகள் வரையறுக்கின்றன.
அந்த வகையில் ‘ஷண் மதம்’ எனப்படும் ஆறு வித வழிபாட்டு நெறிகள் மிகவும் அழகானவை.
ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள்’ என்று எந்தவொரு இநதுவையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம்’ என்று வழி காட்டுகிறது அத்வைதம்.
அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட தெய்வமே மற்ற கடவுளராகவும் வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற உண்மையையும் இந்தச் சித்தாந்தம் சொல்லித் தருகிறது.
இதனால் ஒரே மதத்தில் இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள இன்னொரு கடவுளை இழித்துரைக்கும் பாவத்தையும் தடுக்கிறது.
ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிக ளையும் தானே இயற்றித் தந்தார்.
அவர் பாடாத கடவுளரே இல்லை எனலாம்.

Wednesday, September 17, 2014

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.

சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.
ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.

Tuesday, September 9, 2014

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்...


அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்
சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று
விரதமிருந்து செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்தால் நலம் உண்டாகும்
சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து
சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை
செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து
சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்
சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று
சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை
அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து
வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

Tuesday, August 19, 2014

ஆலயதத்துவம்......

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையின் 13வது அத்தியாயத்தில் (‘க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோகம்’) அருச்சுனனிடம் கூறும்போது “உடலே க்ஷேத்ரம். இதை அறிகிறவன் க்ஷேத்ரக்ஞன். அந்த க்ஷேத்ரக்ஞனும் நானே. இதை உணர்வதே ஞானம்” என்கிறார். “அதாவது நம் உடல் ஓர் ஆலயம். அதனுள் உறையும் ஆத்மா இறைவனே” என்று உரையாசிரியர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்தாக இந்த விளக்கத்தை விரிவுபடுத்திப் பார்ப்போம்.
ஆன்மா லயித்திருக்கும் இடம் ஆலயம். அந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே ஆலயதத்துவம். பகவான் உலகம் என்ற அண்டத்தைப் படைத்தது போலவே உடல் என்ற பிண்டத்தையும் படைத்திருப்பதால் அண்ட, பிண்ட தத்துவங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த உண்மையைக் கண்டறிந்தவர்கள் யோகிகள். அவர்கள் தான் போகிகளுக்கும், ரோகிகளுக்கும் வேத, ஆகம சாஸ்திரங்களை விளக்கி வைத்து நாமும் புரிந்து கொள்ள வழி செய்தவர்கள் (யோகி - ஒருவேளை உண்பவன், போகி - இருவேளை உண்பவன், ரோகி - பல முறை உண்பவன் ஆதலால் வியாதிகளுக்கும், துன்பங்களுக்கும் அடிமைப்பட்டவன்)
யோகிகள் உணவுக் கட்டுப்பாடுள்ளவர்கள் என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்தி தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள். அதன் பயனால் யோகபலம் பெற்றவர்கள். எதையும் செய்யவும் உணரவும் சக்தி பெற்றவர்கள். குறிப்பாக, ‘லம்பிகா’ என்ற யோகப் பயிற்சியினால், நாக்கினை இருபுருவங்களுக்கும் மத்தியில் செலுத்தி அங்கிருந்து பெருகும் அமிர்தபானத்தைப் பருகுவதால் அவர்களுக்குப் பசி, தாகம் இருக்காது. புருவமத்தியில் (லலாடம்) தவமியற்றுவர்களே இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள். உடலின் காமகூடத்தில் ஏற்படும் வீரியங்களை உடலின் மேல்நோக்கிச்செலுத்தி, உடலெங்கும் பரவச் செய்து கிடைக்கும் பேரின்பத்தை நன்கு உணர்ந்தவர்கள். ஆதலால், சிற்றின்பத்தை ஒதுக்கி, சரீரபலம், மனோபலம் ஆகியவற்றினால் உடலுள்ளிருக்கும் ஆத்மா, பரமாத்மாவுடன் கலந்து காலம் கழிவதே தெரியாமல் இறையுணர்வாகிய இன்பத்திலேயே திளைத்தவர்கள். ஆதிசங்கரர், இவர்களை “ஊர்த்துவரேதசர்கள்’ என்கிறார்.
வீரிய விந்துகளை வெளியே செலுத்துவதால் (சங்கினி நாடிமூலம்) கிடைப்பது சிற்றின்பம். இதற்கு மற்றவரின் உதவியும் தேவை. சிற்றின்பர்களுக்கு பசியும், தாகமும் இருந்து கொண்டே இருப்பதால் மனக்கட்டுப்பாடு இருப்பதில்லை. சரீரபலம் குறையும். இவர்களுக்கு ஆன்மபலம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த யோகிகள் அவர்களுக்கு மனபலம் ஏற்பட ஆலயங்களை எழுப்பினார்கள் என்பதே காலம் காட்டும் வரலாறு. அதற்கு பிண்டதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு எளிதில் பழகி தொடர்ந்து ஆலயவழிபாடு செய்வதால் இறையின்பம் காண வழி செய்து கொடுத்தனர்.
ஆலயம்: மனித ஆகிருதியாகிய பிண்டம் - இது அடிப்படை
அதில் கால்கள் - முன் கோபுர(ங்கள்)ம்
பாதப்படலங்கள் - கோபுரத்தின் பக்கங்கள்
பாதங்களின் இடைவெளி - கோபுரவாயில்
குதம் - பலிபீடம்குஹ்யம் (ரகசிய இடம்) - துவஜஸ்தம்பம் (எ) கொடிமரம்
அண்டகோசம் - வாகனங்கள்
வயிறு - மணிமண்டபம்
தொப்புள் - மணிமண்டபத்திலுள்ள மணி
மார்பு - மகாமண்டபம்
கழுத்து - அர்த்தமண்டபம்
தோள்கள் - உட்பிராகாரங்கள்
கைகள் - வெளிப்பிராகாரங்கள்
விலாப்புறங்கள்/கைகளுக்குள்ள இடைவெளி - இவையும் வெளிப்பிராகாரங்கள்
செவிகள் - பிராகாரப் பலகணிகள் (நுழைவாயில்கள்)
முகம் - ‘அந்தராளம்’ (எ) முன்மண்டபம் (மூலஸ்தானத்திற்குமுன்)
கண்கள் - கர்ப்பக்கிரக நிலைத்தூண்கள்மூக்கு - அவற்றின் மேலுள்ள கல்
தலை - கர்ப்பக்கிரகம்
ஆயிரம் இதழ்கொண்ட தாமரரை - விமானம்
ஆத்மா - விமானத்தின் கீழேயுள்ள விக்ரஹம்
இருதயக்கமலம் - ஆலயத்தடாகம்
இடையும் அதன் வலம், இடப் பக்கங்களும் - பின்னும் பக்கங்களில் உள்ள கோபுரங்களும்
எலும்புகள் - சுவர்களின் கற்கள்
நரம்புகள் - கல்தூண்கள்
மாமிசப்பகுதி - சுண்ணாம்பு/சிமெண்ட் கலவைகள்
ரஸம், ரத்தம், மாமிசம், மேதஸ் - (உடலில் கொழுப்பு,) எலும்பு, மஜ்ஜை, சுக்லம் (கண்ணின் வெள்ளைப்பகுதி) என்ற ஏழு தாதுக்களும் - ஏழு மதிற் சுவர்கள்
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்ற ஐந்து கோசங்கள் - ஐந்து மதில்களையும்
ஸ்தூல - ஸுக்ஷ்ம - காரணசரீரங்கள் - மூன்று மதில்களையும்
ஒரேமதில் இருந்தால் இந்த அத்தனை தத்துவங்களுமே அதில் அடங்கி விட்டதாகவும் அறிய வேண்டும். சிலயோகிகள், இறைவனின் நிற்கும் திருக்கோலமே கோபுர வடிவம் என்றும் அதைச்சார்ந்த ஆலயத்தை இறைவனின் சயன(படுத்த)க் கோலமாகவும் கூறுவர். ‘கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்’ என்று கூறியதன் உண்மை இதுதானே?
பூஜை செய்யும்போது (க்ஷோடச) பதினாறு வகை உபசாரம் செய்வதை பஞ்ச பூத. சம்பந்தமானவை என்பதையும் அறியவும்.
1. பூமி - நைவேத்தியம்
2. நீர் - ஸ்நானம்
3. நெருப்பு - தீபம்
4. காற்று - சாமரம்
5. ஆகாயம் - மணிஓசை
ஏனெனில் இவை யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஈசன் எவ்வடிவிலுள்ளான் என்பதைக் கூற முடியாது என்றாலும் மனித வடிவில் வழிபடுவது ஏன்? அதற்கு ஒரே காரணம், மனித இனத்தின் மனம், தன்னைப் போன்ற வடிவத்தை ஆதரித்து எளிதாக ஏற்றுக் கொள்கின்றது. (மானைக் காட்டியே மானைப்பிடிப்பது போல்) அதனால்தானோ ஸ்ரீராமன், புத்தர், சங்கரர், ஸ்ரீராமகிருஷ்ணபரம ஹம்சர், இயேசு நாதர், முகமது நபி போன்ற அவதார புருஷர்கள் மனித வடிவில் வந்தனர்? குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் செய்யும்போது அருச்சுனனுக்கு விஸ்வரூபம் எடுத்து தரிசனம் காட்டிய போது அதைக் காண ஞானக்கண் பெற்றும் கூட, பவந்து பகவானை மீண்டும் மனித வடிவிற்குத் திரும்பிவரப் பிரார்த்தனை செய்தான்.
ஆதலால் இறைவனின் உண்மையான திருவுருவத்தைக் காண நம்மால் இயலாது என்பதே நிதர்சனம். வேறு பல வடிவங்களிலும் நம்மால் காண இயலாது. நினைத்துப் பார்க்கவும் மனம் இடம்தராது.
“கண்ணுறும் வடிவத்திலேயே கடவுள் உளன்” என்று நினைத்தலே இறைவன் நாம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது தெளிவாகிறது. யோகிகள், நமக்குக் காட்டிய பக்தி மார்க்கமே ஆலய வழிபாடு மூலம் தான். பக்தியற்ற இறை வழிபாடு உயிரற்ற உடலுக்குச் சமம்.

Sunday, August 17, 2014

'நாராயணா' நாம மகிமை...

சதா "நாராயணா நாராயணா" என்று உச்சரித்துக்கொண்டு திரியும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கே.. அதன் மகிமையை அறிய வேண்டும் என்னும் ஆவல் வந்தது. நாராயணனான மஹாவிஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றபொழுது.. "உங்கள் திருநாமத்தின் மகிமைதான் என்ன? இதை உலகறியச் சொல்ல வேண்டாமா" என்று கேட்டார் நாரதர்.

"அப்படியா! பூலோகத்தில் ஏதாவதொரு துல்லிய ஜீவனிடம் என் நாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. பூலோகம் இறங்கி வந்தார் நாரதர். சேற்றில் நெளிந்து கொண்டிருந்த பழுவைக் கண்டார். அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்று இருமுறை சொல்ல.. புழு துடிதுடித்து மரணம் அடைந்தது. நாரதர் அதைக் கண்டு திகைத்தார்.! அடுத்த முறை பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நடந்தவற்றைக் கூறினார்.

"அப்படியா.. பூலோகத்திற்குச் செல். அங்கு ஒரு பட்டாம்பூச்சி மலர் மீது அமர்வதைக் காண்பாய். அதனிடமும் என் திருநாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. நாரதரும் அப்படிப் பூவில் அமரும் பட்டாம்பூச்சியைக் கண்டு.. அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்றார். சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி.. திடீரென்று இறந்த வீழ்ந்தது. திரும்ப பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நாரதர் நடந்ததைக் கூறினார். "ஓ பட்டாம்பூச்சியும் மாய்ந்ததோ! சஞ்சலம் வேண்டாம் நாரதா. குட்டி மான் பால்குடித்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். அதன் செவியில் என் நாமத்தை ஒதுவாயாக" என்று கூறி அனுப்பி வைத்தார்.

நாரதரும் அப்படியொரு மான் குட்டி பால் குடிப்பதைக் கண்டபோது அதன் அருகில் சென்று.. தயக்கத்துடன் "நாராயணா நாராயணா" என்றார். அடுத்த கணம் அந்தக் குட்டிமான்.. துள்ளி எழுந்த வேகத்திலேயே வீழ்ந்து மடிந்தது. நாரதர் திடுக்கிட்டார். திரும்பவும் பகவானைத் தரிசிக்கப் போன பொழுது "பகவானே! புழு இறந்தது.. பட்டாம்பூச்சியும் மாய்ந்தது.. மான்குட்டியும் மடிந்தது. இதென்ன அபச்சாரம் மாதவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"அதற்குள் மனம் தளர்ந்தால் எப்படி? ஒரு பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் காண்பாய். அதனிடம் சென்று என் நாமத்தை உச்சரிப்பாயாக" எனக் கூறி அனுப்பி வைத்தார். பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் கண்ட நாரதர்.. இந்தப் பசுக்கன்றும் இறந்துவிடுமோ என்று பயந்தார். அதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணியவாறு பசுக்கன்றின் காதில் "நாராயணா நாராயணா" என்றார். பசுக்கன்றும் தொப்பென வீழ்ந்து இறந்தது. இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினார் நாரதர். பிறகு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாராயணனிடம் சென்றார்.

"பகவானே! காக்கும் கர்த்தாவாகிய உங்கள் திருநாமம் இப்படிச் சம்ஹாரத்தில் முடிவது என்ன சோதனை சுவாமி" என்று கேட்டார். "பிரம்மபுத்திரா.. அதற்குள் அவசரப்படுகிறாயே! காசிராஜன் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அங்கு கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. நீ அந்த சிசவிடம் சென்று.." என்று சொல்லி முடிக்க முன் நாரதர் குறுக்கிட்டார். "சுவாமி.. என்னை கலகப் பிரியன் என்று தான் சொல்வார்கள். என்னை கொலைகாரன் பட்டத்துடன் உலவவிட திருவுளமோ" என்றவாறு தன் அதிருப்தியைத் தெரிவித்தார். "நாரதா! இந்த ஒரு தடவை மட்டும் அந்தக் குழந்தையின் செவியில் எமது நாமத்தை சொல்லி வருவாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

காசிராஜன் அரண்மனையில் நடந்த பிறந்ததின விழாவிற்கு நாரதர் சென்றார். "சுவாமி.. என் குமாரன் பிறந்த நாளில் தாங்கள் எழுந்தருளியது எங்கள் தவப்பயன். என் மைந்தன் பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க ஆசி கூறுங்கள்" என்று கூறியவாறே நாரதரை வரவேற்றார் காசிமன்னன். தயக்கத்துடன் குழந்தையின் காதில் "நாராயணா நாராயணா" என்று ஓதினார் நாரதர். என்ன ஆச்சரியம்.. குழந்தை பேச ஆரம்பித்ததைக் கேட்டு திகைப்படைந்தார். "மகரிஷி.., தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நாராயண நாமத்தின் மகிமை இன்னுமா புரியவில்லை? என்று கேட்டது குழந்தை. " குழந்தாய் விபரமாகச் சொல்" என்றார் நாரதர்.

"ஆரம்பத்தில் புழுவாய் இருந்தேன். அப்பொழுது உங்கள் நாராயண மந்திரம்என்னைப் பட்டாம்பூச்சி ஆக்கியது. அதேபோல்.. மானாகி, பசுவாகி இப்பொழுது கிடைத்தற்கரிய மானிட பிறவி அடைந்ததும் அதே நாராயண மந்திர மகிமையால் தான்" என்று கூறியது குழ்ந்தை. நாராயண மந்திரத்தின் மகிமையைப் பரிந்து கொண்ட நாரதர்.. குழந்தையை வாழ்த்திவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.

சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள்!


கர்மா! இது ஒரு மிகப்பெரிய உண்மை. இதை சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள். பல இடங்களிலும் இதை தெளிவாக சொல்லி போய் இருக்கிறார்கள். கர்மாவுக்கு பலம் சேர்ப்பதே நம்முடைய எண்ணங்கள், அதீதமான ஆசைகள், நிறைவேறாத ஆசைகளினால் மிஞ்சும் வாசனைகள் போன்றவைதான். இறைவனுக்கு நாடகத்தை நடத்த நிறைய கதா பாத்திரங்கள் தேவை. மனிதர்கள் தங்களை இகபர பொருட்களில் ஆசைகளுக்கு அடிமை படுத்திக்கொண்டு , இறைவனுக்கு, அவன் வேலையை எளிதாக்குகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நண்பருடன் கலந்துரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை கீழே தருகிறேன். புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
"இந்த மனிதர்கள் போகிற போக்கை பார்த்தால், இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லையே! அத்தனை பேரும் பதவி, பொருள், பணம், நிலம் என்பதில் தான் குறியாக ஓடுகிறார்கள். வாழ மறந்து விடுகின்றனரே!".
"சரிதான்! ஆனால், தாங்கள் அடைவதை அனுபவிப்பது தான் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தான் வாழ்கிறார்களே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் வாழ மறக்கவில்லையே. ஆனால் அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லையே. அது தான் இறைவன் நடத்தும் நாடகம். "

"நீங்கள் சொல்கிற படி பார்த்தால், நிறைய பேர்கள் எதை நம்புகிறார்களோ அதுவே வாழ்க்கை என்று ஆகிவிடுகிறதே"
"ஆமாம், இந்த உலகத்தில் அப்படி தானே ஜீவிதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், ஏன் நாம் உண்ணும் உணவு கூட, மற்றவர்களால் தான் நிச்சயிக்கபடுகிறது. . நம் முன்னால் வீசி எறியப்படுகிற பொருள் சார்ந்த வாழ்க்கையை வேண்டாம், இது எனக்கு தேவை இல்லை என்று விலக்குகிற மனநிலை எத்தனை பேருக்கு இருக்கிறது? பொருள் சார்ந்த நிலையை வேண்டாம் என்று வைத்து, இறை அருள் சார்ந்த வாழ்க்கை தான் எனக்கு வேண்டும் என்று எத்தனை பேரால் தீர்மானிக்க முடிகிறது?"

"உண்மை தான்! ஆனால் எத்தனை பேரால் இறை சார்ந்த வாழ்க்கையை வாழ முடிகிறது. இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்."

"அதில் உள்ள மர்மத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியவில்லை. அதனால் தான் பொறுமை இழக்கிறான். அமானுஷ்யம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தான். அதில் இருக்கும் த்ரில் தனிதான். ஆனால் வெற்றி பெறாமல் இருப்பது எதனால் என்று ஒரு முறை தீர விசாரித்தால் உண்மை விளங்கும். வெற்றி பெற நினைப்பவர் மனதில் இறை மீது நிலைத்த நம்பிக்கை இன்மையே காரணம்."
"உண்மை! அப்படியானால் நீங்கள் சொல்ல வருவதென்ன?"
"நீங்கள் கேட்டீர்களே "இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்"

இதற்கு பின் சில விஷயங்கள் இருக்கிறது.
மனிதனை படைத்தாகிவிட்டது. நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரின் நடத்தை இன்னொருவருக்கு பாடமாக இருக்கட்டும் என்று இறைவன் பல லீலைகளை நடத்துகிறான். அவன் கையில் பலவித கயிறு இருக்கிறது. உதாரணமாக கோயில் உண்டியலில் போட தந்த காசை நீங்கள், அவனிடம் இல்லாத காசா! இதை போட்டுத்தான் அவன் வாழவேண்டுமா என்று நினைத்து, அதை கொண்டு போய் வியாபாரம் பண்ணி நன்றாக இருந்தால், அதையும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் மேலும் மேலும் வளர வழி வகை செய்து உங்களை மிக உயரத்தில் ஏற்றி உட்கர்த்துவான். அப்படி உட்கார்ந்த நீங்கள் "ஆஹா! நம் முயற்ச்சியால் இத்தனை தூரம் ஏறி வந்து விட்டோம்" என்று நினைக்கும் போது, மேலிருந்து ஒரேடியாக கீழே தள்ளிவிட்டு உங்கள் கதையை முடிப்பான். ஏன்? உங்கள் கர்மாவில் கொஞ்சம் புண்ணியம் இருந்திருக்கும். அதன் பயனாக உங்களை மேலே ஏற்றி விட்டு தான் ஆகா வேண்டும். அந்த கணக்கு சரியான பின், உங்கள் கெட்ட கர்மா வின் கணக்கு சரி பார்க்க படும். குறுகிய உயரத்தில் இருந்தால் அடி படாது, சின்ன காயத்துடன் போய் விடும். உயரத்தில் இருந்து விழ்ந்தால் தான் கணக்கை முடிக்க முடியும். இதை மறைமுகமாககூட நாம் உணருவதில்லை. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை புரிந்துகொள்ளும் சக்தி இறையை நாடாமல் எப்படி மனிதனுக்கு தெரிய வரும்? அதற்கும் அவன் அருள் வேண்டுமே. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தான் ஞானியாக ஆகிறார்கள். இதை எல்லாம் நீயே வைத்துக்கொள் என்கிறார்கள். ஞானத்தை கொடு, இவற்றில் பற்றை அறுத்தெறி என்று இறையிடமே வேண்டுகிறார்கள். அந்த இறையே நம்மை பார்த்து பயப்படவேண்டும். "என்னடா இது, இவனுக்கு இத்தனை வாய்ப்பை கொடுத்தும் அதை அவன் பற்றாமல் இருக்கிறானே என்று யோச்கிக்க வைக்க வேண்டும்." அப்படி நாம் நேர்மையாக இருந்தால் இறை முன் கூட நெஞ்சு நிமிர்த்தி நிற்கலாம். ரகசியமாக இறையிடம் வேண்ட வேண்டாம். பிறரை கெடுத்தோம் என்கிற நிலை வராது. நம்மை கண்டாலே இறையே யோசிக்கும். ஏன், ஒரு நாள் கூட நாம் மனம் புலம்ப வேண்டிய நிலை வராது. நான் என்கிற கர்வம் அறவே ஒழிந்துவிடும். என்னுடையது எதுவம் இல்லை. எல்லாம் உன்னுடையது என்கிற பலமான அஸ்திவாரம் உருவாகும். அதுவே முன்னேற்றத்தின் முதல் படி. இதை தெளிவாக புரிந்து கொண்டால், நடக்கிற நாடகம் மிக நன்றாக எல்லாருக்கும் புரியும். புரியாத நிலையில் உருவாகும் குழப்பம் தான் தவறுகளை செய்ய வைக்கிறது"

"இறை நாடகத்தை நடத்த ஆசை படட்டும். நீங்கள் தெளிவடைந்து விலகி நில்லுங்கள். நீங்கள் கரை ஏறலாம். உங்களுக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பார். அது அவர் தலை எழுத்து. அவரும் புரிந்து கொண்டு விலகி விட்டால், வேறு ஒருவர் அவர் இடத்தை பிடிப்பார். இது தான் கால சக்ரம். சாட்சி பூதம், வேறு விதத்தில் சொல்வதானால், "நடப்பதெல்லாம் நாராயணன் செயல்" என்று பெரியவர்கள் சொல்லி போனது - நாராயணனை "காக்கும்" கடவுளாக அவர்கள் அறிந்ததால்.
உங்களுக்கு புரிந்ததா இந்த கலந்துரையாடல்? இல்லை என்றால் கால் இல்லாத ஒருவரையும், நன்றாக இருக்கும் உங்கள் கால்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்பொழுது புரியும்!

Saturday, August 16, 2014

பூவும் புன்னகையும்..!


ஒரு நாள் புத்தபிரான் தம் கையில் ஒரு மலரை ஏந்தியவாறு வந்து கொண்டு இருந்தார். அதை கண்ட சீடர்கள் மலரைபற்றி  ஏதாவது தாங்கள் கூற வேண்டும் என குருநாதர் எதிர்பார்கிறார் என்று நினைத்தனர். எனவே ஒரு சீடர் மலரைப்பற்றி ஒரு  பிரசங்கம்  செய்தார். இன்னொருவர் கவிதை பாடினார். மற்றவர் கதை சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கற்பனா சக்தியை வெளியிட்டனர்.
       
ஆனால், மகாகாஷ்யபர் என்ற சீடர் மட்டும் பூவை பார்த்து விட்டு ஒரு புன்னகையுடன் மெளனமாக இருந்தார். 
புத்தர் கூறினார் "இறைவனையும் இயற்கையையும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அவை அனுபவித்து உணர வேண்டியவை."

Thursday, August 7, 2014

பில்வாஷ்டகம்..

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.
கோடிகன்யாமஹாதானம் கில பர்வத - கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.
காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.
ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.
உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.
தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்.