Sunday, September 18, 2011

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!



* மனிதர்களில் யாரிடமாவது அன்பினைச் செலுத்தினால் அதற்காக நாம் துன்பப் பட்டே ஆக வேண்டும். எவன் தன் அன்பினை முழுமையாக கடவுளுக்குத் தருகிறானோ அவனே உண்மையில் பாக்கியவான். இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் என்பதே கிடையாது.
* கவலைப்படாதீர்கள்! அலைபாயும் மனதை அடக்கும் வலிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைநாமத்தை விடாது ஜபித்து வருபவர்களால் மட்டுமே புலன்களை கட்டுப்படுத்த முடியும்.
* கடமைகள் எவ்வளவு இருந்தாலும், பணிச்சுமை உங்களை எப்படி அழுத்தினாலும் இறைவழிபாட்டினைத் தவற விடாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வழிபாடு செய்வதை முக்கிய கடமையாகக் கொள்ளுங்கள்.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தது கிடையாது. அப்பொருளை கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகி விடும். * உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்கு படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள்.

 

No comments:

Post a Comment