Friday, October 18, 2013

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டேபோகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும்,உண்மையாகவும்பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல்தடுக்கியது.உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில்தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.

Tuesday, October 8, 2013

அலைந்து திரியும் மனது

மனதைப் பற்றிப் பேசாத ஆன்மீகமே இருக்க முடியாது. எல்லாம் அங்கிருந்தே தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. சிலர் குரங்கு என்பர். வேறு சிலர் 'பாதரசம்' என்பர். இன்னும் சிலர் அதை பேயாய் வருணிப்பர். மனம் அறுத்தலே ஆன்மீகத்தின் முதலும் முடிவுமாகும். வழிபாடுகளின் நோக்கமே புலனடக்கம் தான். மனமடங்க இது முதற்படி. இதை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும் முழுமையானது ஆகாது.
விடாமல் பலவாறான பூஜைகளையும் விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஒருவன் இறைப்பற்று உள்ளவனா? கபீர் சிரிக்கிறார்.

விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
(அக்குமணி = ஜெபமாலை ; செம்மந்திரம் = ஜெபத்திற்க்கென உபதேசமான மந்திரம்)
( இது செபமாகாது என்னும் வகையில் கபீர் தோஹாவை நிறைவு செய்திருப்பினும் கேலியை சற்று தூக்கலாக்க வேண்டி நவில்வரே என்ற இகழ்ச்சி ஏ காரம் கையாளப்பட்டுள்ளது)


{ இதை சரியல்ல என்று நினப்பவர்களுக்கு, மாற்று :
விரலில் உருளுமே மணியக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனமங்கு, இவர் செய்வதும் இங்கே செபமன்று
}
இது நமது தினசரி அனுபவம். பத்து நிமிடமாவது ஒருமுக சிந்தையில் கடவுளை துதிக்க முடியாமல், நமக்களித்துள்ள நல்லவிஷயங்களுக்கு நன்றி கூறாமல் செபமென்ற பெயரிலமர்ந்து கொண்டு இல்லாத பொருட்களுக்கு மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருப்போம். வெளிப் பார்வைக்கு, பிறருக்கு, நாம் வேண்டுமானால் பக்திமான்களாக காட்சியளிக்கலாம். ஆனால் மஹான்கள் நமது மனதை படம் பிடித்து விடுகின்றனர்.

நாமதேவர் ஒரு பெரிய மனிதரின் வீட்டிற்கு விஜயம் செய்தார். அவரோ பூஜையில் மும்முரமாய் இருந்தார். இவரை கண்டுக்கொள்ளவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்த அவர் உபசாரமாக "வந்து வெகு நேரமாகி விட்டதா?" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ! அதற்கு அவர், "ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே ! பூஜை முழுவதும், வராமல் போய் விட்ட வண்ணானைப் பற்றியும் மாற்று ஏற்பாடுகள் பற்றியுமே அவர் சிந்தனை திரிந்தது. அதை சர்வ சாதாரணமாக வெளிக்கொணர்ந்தார் நாமதேவர். இத்தகையவர் அன்றும் இன்றும் என்றும் உண்டு. பின் கபீரும் சிரிக்காமல் என்ன செய்வார்?

இன்னும் சிலர் நோன்புகள் நேர்ந்து, பாத யாத்திரை செய்து, முடி களைந்து நேர்த்திக் கடன் செலுத்துவதிலேயே கடவுளை திருப்தி செய்ய முயலுவர். இவர்களைக் கண்டு கபீருக்கு அலுப்புத் தட்டுகிறது.

சிகைசெய்த பாவ மென்ன, மழிப்ப ரதை நூ றுமுறை
சிறுமை தனைம ழியாரோ, மனக்கண் வளரும் நூறுவகை
(சிகை = தலைமுடி)

முண்டனம் செய்தே தினங்கள் கழிந்தன காணுவா ரில்லை இராமனை
இராம நாமம் சொல்லியும் என்ன, மனதில் கிளைக்குதே வேறுவினை

(முண்டனம் = தலை சிரைத்தல்)இதைப் படித்த உடனே நம் நினைவுக்கு வருவது திருக்குறளில் " மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்ற குறள் தான். உலகம் என்பதை 'ஊர் வாய்' என்று கொள்ள முடியுமா ? கற்புக்கரசியான சீதையினுள்ளும் குற்றம் கண்டது 'ஊர் வாய்'. உலகம் என்பது, ஆகையால், சான்றோர் சொன்ன வழி என்றே பொருள் கொள்ள வேண்டும். அதனினும் சிறப்பு தன் எண்ணங்களை தானே பரிசோதித்துக் கொள்ளுவது.
நம் மனதில் ஒவ்வொரு கணமும் தோன்றிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே- நமக்கு உண்டாகும் இலாப நஷ்ட கணக்குகளாகவே- இருக்கும். சுயநல எண்ணங்களே எல்லா வகையான சிறுமைகளுக்கும் மூல காரணமாகிறது. இவைகளை கவனித்து களைந்தாலே மனம் தூய்மையடைந்து இறைவனிடம், அதாவது முக்தி நிலைக்கு, அழைத்துச் சென்று விடும். "சித்த ஷோதகம் முக்தி சாதகம்" என்று மகான் ரமணர் தமது 'உபதேச சார'த்தில் இரத்தின சுருக்கமாக உரைக்கிறார். வள்ளுவரும் இரமணரும் சொன்னதை சற்றே கிண்டல் முறையில் 'தலைமுடிக்கென' பரிந்து கூறுவது போல் கபீரும் கூறுகிறார்.

கபீர் உபதேசம் பெற்ற மந்திரம் ராம நாமம். ஆனால் அவர் நிர்குண உபாசகராகவே இருந்தார். அதாவது கடவுளின் எல்லையற்ற தன்மையினால் அவன் அருவானவன் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதை மனதில் வைத்து (அதாவது ராமனை உருவக் கடவுளாகக் காணாது) அவரது ஈரடியை அருவ கோட்பாட்டிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டினால் கீழ்கண்ட முறையில் மொழி பெயர்க்கலாம்.

முண்டனம் செய்தே நாட்கள் கழிந்தன, முட்டினா ரில்லை மூவா முதல்வனை
முணங்கும் மந்திரந் தானென் செய்யும், முடக்கவு மில்லை மறுகும் மனந்தனை


(முட்டுதல் =பற்றிக்கொள்ளுதல் ; மூவா முதல்வன் = கடவுள் ; மறுகுதல் = உலாவுதல், சுழலுதல் ; முடக்கு = செயலிழக்கச் செய்தல்) அப்படியானால் கபீர் பூஜை விரதங்கள் செபம் எல்லாவற்றையும் தேவையற்றவை என்கிறாரா? கண்டிப்பாக இல்லை. அவைகள் மனதை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் பயனைத் தராத போது அர்த்தமற்றவை ஆகின்றன என்றே சுட்டிக் காட்டுகிறார். ஈடுபட்டுள்ள செயலின் உண்மையானப் பொருளுணர்ந்து செய்யவே வற்புறுத்துகிறார்.

கபீரின் கனிமொழிகள்!

துயரில் துய்வர் அவன் நாமம் உயர்வில் உன்ன மறந்தனர்
உயர்விலும் உன்னுவராயின் துயரின் சாயலும் தொலையுமே
மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாதுரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்
குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று
ஓங்கி உயர்ந்து விட்டாலென்னே ஈச்சந்தரு போலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைதரு பழமே
தீயவன் ஒருவன் எங்கே தேடிக் கண்டிலேன் இங்கே -
தேடிக்கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே
பொறு மனமே பொறு காலத்தேதான் நிகழும் யாவும் -
நூறு குடம் நீரே இறைப்பினும் பருவத்தே தான் பழுக்கும் பழம்
திருகும் அரவை எந்திரம் கண்டு கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே தப்பிய தினைகள் இலையே
நவில்வீர் நயமுடனே, தானடங்கி தனுவடக்கி,
தம்மன் பர்தம் உள்ளங் குளிரும் உரைகளே
துவைப்பவன் ஆசான், துணி சீடன், திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறை கூட்டி ஒளிரும் சிவமேயாம்
அளப்பிலா நூல் பல தெரிந்து ஆன பண்டிதர் எவரும் இல்லை
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே
நானிருந்த போது அரி இல்லை, அரி வந்தபின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளி வந்த பின்னே இருளங்கு இல்லை
சிகை செய்த பாவமென், மழிப்பரதை நூறு முறை
சிறுமைதனை மழியாரோ, மனக்கண் வளரும் நூறு வகை
நாளையென்பதை இன்றே செய்மின், இன்றென்பதை இப்பொழுதே
நொடியில் வருமே ஊழி, செய்வது பின் நீ எப்பொழுது
விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுதே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ
ஒன்றே எனில் சரியன்று, இரெண்டென்று உரைப்பின் தவறேயாம்
சொல்லற்று மொழிவான் கபீர், அது என்றும் எதுவோ அதுவேயாம்
செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளைய காண்பரா , காலன் கிடத்தும் இடம் கண்டு
சிந்தையைத் தின்னும் கவலைப் பேய், மரந் தின்னும் சிதல் அன்னே
எந்தையே தீர்வேயிலாப் பிணியிது, பேதை மருத்துவன் செய்வது மென்னே
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் வெந் தழலே
உள்ளுள் உறைவான் ஈசன், விழிப்பரோ உணர்வில் இவரே
கபீர் மனது நிர்மலம் ஆனது தூய கங்கை நீர் போலே- கபீர்
கபீரெனக் குழைந்தே அரி, திரிவான் இவன் பின்னே பின்னே
எமக்கு இத்தனை அருள்வாய் ஈசா, எமை சார்ந்த குடி நலம் கா
யாமும் பசித்திராமலும் அடியார் பசித்துச் செல்லாதிருக்கவுந் தா

Saturday, October 5, 2013

இன்று யுகபுருஷர் மகான் யோகி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம். அவரது பாதங்களை வணங்கித் துதிப்போமாக.

திருப்பாத சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

அரவிந்தர் பள்ளிச் சிறுவனாக
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

சிறையிலிருந்து வெளிவந்த பின்…
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

யோகி ஸ்ரீ அரவிந்தர்
இந்தக் கண்களை உற்றுப் பாருங்கள் அதில்தான் எவ்வளவு ஒளி…
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா
மகா யோகியாக உயர்ந்த பின் உடல் எப்படிப் பொன்னொளி வீசுகிறது!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

Thursday, October 3, 2013

நம்மில் [நம்முள்] நடக்கும் விந்தை

நம்மில்  [நம்முள்] நடக்கும் விந்தை   முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு மையம் உண்டு. நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே  மூலாதாரம்  சுவாதிட்டானம்,  மணிபூரகம்,  அனாகதம், விசுத்தி,  ஆக்ஞை,  சகஸ்ராரம்  எனப்படும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு. சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம். மூலாதாரம் 600  காலை ----06.00--06.40 வரை சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை அனாகதம்  6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை. மொத்தம் 21.600 இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.


 முதுகெலும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உச்சந்தலையில் இருந்து முதுகெலும்பின் அடிப்பாகம் வரை ஏழு
ஆதாரச் சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு
மையம் உண்டு.
நாடி நரம்புகளும்,முடுகெலும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே
மூலாதாரம்
சுவாதிட்டானம்,
மணிபூரகம்,
அனாகதம்,
விசுத்தி,
ஆக்ஞை,
சகஸ்ராரம்
எனப்படும்.
ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.
சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600 காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம் 6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன
ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு
வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப
மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.

Tuesday, October 1, 2013

"உலக உயிர்வணக்கம்"


பாடல் :
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
 கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
 ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
 நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
பொருள் :
கார்மேகம் சூழ்ந்து , மழை நீர் தந்து, இந்த உலக உயிர்களை
காக்கும் வான மண்டலம் எந்த மாசும் இல்லாமல் வாழ்க!.

இந்த பூமியில் மனிதர்களாக பிறந்து ,வாழ்ந்து , என்னை
உருவாக்கி , உயிர்  தந்து , வாழ்க்கை  தந்து மறைந்து ,
வான் உலகில் 'பிறவியில்லாப் பெருவாழ்வு' பெற்று , மிகப் பெரிய தவத்தன்மை பெற்ற என் தாய் , தந்தை ,வம்சாவழி
முன்னோர்கள் வாழ்க!.
இந்த பூமியில் தன்னுயிர் போல் நாட்டையும் , தன் நாட்டு
மக்களையும்  பசி , பஞ்சம், இல்லாமல் நீதி , நேர்மை , கொண்டு
ஆட்சி செய்யும் , நல்ல ஆட்சி நிர்வாகம்  செய்யும் அரசர்கள்,
நிர்வாகிகள் வாழ்க!.
எனக்கு  பூரண ஞானம் அறிய செய்து , உலகினையும் , உலக
மக்களையும் , உலக சமுதாயத்தை புரிய செய்து, இந்த பிறவியில் நான் யார் ?. என்பதை அறிய செய்து
உலகத்தையும் , இந்த சமுதாய விதிகளை அறிய செய்து ,
நன்மை , தீமை , உண்மை ,பொய் , என அனைத்தையும்
பகுத்து அறியும்  அறிவான 'ஆறாவது அறிவை' அறியும் படி
செய்து , இந்தப் பிறவியில்  எனக்கு எது நல்லது ?. எது கெட்டது என்ற விபரங்களை போதித்து ,என்னையும் தங்கள்
சீடனாக ஏற்று பூரண ஞானத்தை  போதித்து  வரும் என்
குருமார்கள் வாழ்க !.
இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்கள் , பசு முதலான  அனைத்து சீவ ராசிகளும் வாழ்க! .
இந்த உலகில் பிறந்து தேசத்திற்கும் , மக்களுக்கும் தொண்டு
செய்து வாழ்ந்து அமரத்துவம்  பெற்று , இன்றும் தான்  செய்த
நற்செயல்களால், மக்கள் மனதில்  வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஞானிகள் , மகான்கள் , தலைவர்கள் , பெரியோர்கள் 
நாமம் வாழ்க!.
உலக மக்களுக்கு  உண்மை ஞானம் , உலகைப்பற்றிய
விழிப்புணர்வு  போதித்த சித்தர்களும் , ரிஷிகளும் ,
முனிவர்களும்  வாழ்க !.
நான் , நீ , ஜாதி ,மதம் , என பேதம்  பிரிவினை  பாராமல் உலக
உயிர்களை , மனிதர்களை , சீவன்களை ஒன்று போல் நேசித்து  வாழும் ஞான பெரியார்கள் , வழிகாட்டிகள்  வாழ்க!  வாழ்க!  வாழ்க!. 

தெய்வீக கதைகள்.....


எல்லாம் நன்மைக்கே!
அரண்மனையில் மன்னர் ஆர்வமுடன் மந்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பழம் ஒன்றை நறுக்க கத்தி எடுக்க, தவறுதலாக கையில் பட்டு ரத்தம் வந்தது. அதைக் கண்ட மந்திரி, "எல்லாம் நன்மைக்கே' என்றார் இயல்புடன்.
மன்னர் கோபத்தில், ""என்ன உளறுகிறீர்?'' என கத்தினார். 
""ஆம்! மன்னா! வேலைக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, தாங்கள் இப்படி கையை நறுக்கி கொண்டால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எல்லாம் நன்மைக்காக!'' என்றார் மந்திரி. 
கொந்தளித்த மன்னர், "" உளறிக் கொட்டும் இவரைச் சிறையில் அடையுங்கள்'' என்று உத்தரவிட்டார். அமைதி தேடி, குதிரையுடன்
தனியாளாகக் காட்டுக்குப் புறப்பட்டார் மன்னர்.
அங்கு காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டார்.
காளி வழிபாடு செய்யும் அவர்கள், மன்னரை நரபலி கொடுக்க எண்ணி மரத்தில் கட்டி வைத்தனர்.
காட்டுவாசிகளின் தலைவன், மன்னரின் ரத்தக் காயம் கண்டு, ""குறையுள்ள இவனைக் காளிக்கு பலி கொடுப்பது நல்லதல்ல'' என்று அவிழ்த்து விட்டான். மன்னர் அரண்மனை திரும்பினார்.
மந்திரியைக் கண்டு நடந்ததை தெரிவித்தார். 
""மந்திரியாரே! நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. குற்றம் செய்யாத உங்களைச் சிறையில் அடைத்து விட்டேனே'' என்று வருந்தினார். 
""எல்லாம் நன்மைக்கே மன்னா! நானும் வந்திருந்தால் நிலைமை என்னாகும்? காட்டுவாசிகளிடம் நான் அல்லவா சிக்கியிருப்பேன். அதற்காகவே என்னை சிறையில் அடைத்து விட்டீர்கள்!'' என்றார் மந்திரி. 
மந்திரியின் மந்திரச் சொல்லை மன்னரும் அன்று முதல் உச்சரிக்கத் தொடங்கினார்.

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்

தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் முதலிய திருமுறைகள் பாடப் பட்ட ராகங்களின் தமிழ்ப் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்ட பழைய பண்களின் பெயர்களை நாம் மீண்டும் உயிர்ப்பிப்பது தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.
சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற் பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப் பட்டதும் ஒப்பு நோக்கத் தக்கது.
பழந் தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–
செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.
பழைப பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ் கண்ட பட்டியல் காட்டும்:–
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா
தேவார மூவர் ஊர் ஊராகச் சென்ற போது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப் படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.
கோவில்களிலும் காலை, உச்சிக்காலம், மாலை, இரவு/ அர்த்தசாமம் என்று ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பண் (ராகம்) பாடப் பட்டது. நாதசுரம் அல்லது வாய்ப்பாட்டு மூலம் இது நிகழ்ந்தது.

Monday, September 30, 2013

தன்ணுணர்வின் கதை – ஓஷோவின் கதை

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது.
நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு.
அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.
அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.
நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.
அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள்.
அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.
அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.
நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.
திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.
நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.
இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.
அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.
நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.
திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.
அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.
நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.
திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான் தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான்.
நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக் கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக் கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.
திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.
திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான்.
நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.
திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்பு தான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.
நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும் போது, வேறு யாருடைய வீட்டிற்குள் இரவில் நுழையும் போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும் போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார்.
திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.
நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான்.
நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.
அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.
நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.

Friday, September 20, 2013

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

 இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி
(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)
சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாப விமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக் கொள்கிறது சக்வி.
கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.
உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ் ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப் பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாத போது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.
ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.
அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.
இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்...

.......தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

Thursday, September 12, 2013

மறு பிறவி

 இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?
இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?
இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.
அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!
யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது! ஞானமடைய
இதுவே வழி!
நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!
ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!
வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!
மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!
 "மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!
அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!
வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!
துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!
பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!
குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.
 "மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!

Monday, September 9, 2013

ஆன்மீகத்தில் ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

 
ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.
சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.
மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.
குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

Wednesday, September 4, 2013

ஓம் நமசிவாய ஓம்


அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!...
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி!

Monday, September 2, 2013

சிவபெருமானின் குரு ஒரு பதிவு....


பொதுவாக நம் எல்லோருக்கும் குரு எப்படி அவசியமோ அதுபோல் தான் தெய்வத்துக்கும் குரு அவசியம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் தெய்வத்துக்கு தேவை இல்லை , இருந்தாலும், தெய்வமே தனக்கு என்று சொன்னால் அந்த குருவின் பெருமையை நாம் புரிந்துகொள்ள சொல்லப்பட்டதாகும் .
ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது , பார்வதி தேவி , சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள் .
சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், க்ருஹப்ரவேசம் செய்யணுமே ., அதற்காக , தனது வீட்டு ஐயரை கூப்பிட வேண்டும் அல்லவா. அது போல் தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான் .
ராவணன் வந்து க்ருஹப்ரவேசத்தை தடபுடலாக செய்தான் .சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவ பக்தன் மூன்று உலகிலும் இல்லையே.
காரியங்கள் முடிந்தன. இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா. அதற்காக, ராவணனை சிவ பெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன் , தாங்கள் தானே கொடுக்க வேண்டும்,கொடுங்கள் என்றான். அதற்க்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு , என்று சொன்னவுடன், ராவணன் கேட்டான், எது கேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எது வேண்டுமானாலும் கேள் என்றான்.
அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு க்ருகப்ப்ரவேச தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். இது எப்படி இருக்கு மக்களே ,பாருங்கள். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான் இலங்கை ஆகும்.  அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக் கொண்டான்.

Thursday, August 22, 2013

ஒரு வாலைப்பெண்

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப் பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.

அப்பாடல்:

“முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே”
இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின்
(சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை,
கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை)
பெயர்களிருக்கின்றன. ஆனால், இவற்றின் கருத்து வேறுவிதமானது.
கருத்தைப் பார்ப்போம்.
பல துறைகளையுமுடைய வெள்ளிமலைக்குத் (சுல் + நாகம் – வெள்ளிமலை)
தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய குதிரை
(கொக்கு – குதிரை) மீது வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடி
போன்ற அழகையுடையாள், அசைந்து மார்புக்கட்டை அவிழ்த்து விட்டாள்.
நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கருப்புவில்லை
உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து,
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.
இதே போன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார். அவர் ஊர்களின்
பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள்ள ஏழு நாட்களையும்
ஒழுங்காக அமைத்துப் பாடுகிறார். தமிழ்நாட்டில் “தளசிங்கமாலை” என்ற
நூலிலுள்ளது அப்பாடல்.
“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே”
இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,
தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக
தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்
தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.
இதில் ஒரு கிழமையின் ஏழு நாட்களும், ஒழுங்காக வந்துள்ளமை
காண்க. இது “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் குறையச்
சுட்டும் பாடலாகும்.
இவ்வகைச் செய்யுள்களை “நாமாந்திரிகை” என்னும் யாப்பு
வகையில் அடக்குவர்.

Saturday, August 17, 2013

இறைவனிடம் சேர்க்கும் மதம் எது?

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று 'எந்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றில் என்னை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மதம் எது என எப்படிக் கண்டறிவது?' எனக் கேட்டான். அவர் அவனை ஆற்றங்கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் 'அடுத்த கரைக்குப் போக படகு தயார் செய். அங்கு உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார்.
அவன் தயார் செய்து காட்டிய ஒவ்வொரு படகுக்கும் ஏதோ ஒரு குறை கூறி ஒதுக்கித் தள்ளினார் குரு. சீடனுக்கோ எப்படியாவது அடுத்த கரைக்குப் போய் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு! பொறுமை இழந்த அவன் ஏதோ ஒரு படகில் ஏறிக்கொண்டு மறுகரைக்குச் சென்றான். அங்கு அவன் கேள்விக்கு விடை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை. குருவிடம் வந்து மீண்டும் கேட்டான்.
அவர் சொன்னார், 'உனக்கு உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குப் போயாக வேண்டும் என்ற உத்வேகத்தான் முக்கியமாக இருந்ததே தவிர மறுகரைக்குக் கொண்டு போகும் படகு முக்கியமாகப் படவில்லை. மேலும், மறுகரைக்குப் போவதுதான் முக்கியமே தவிர படகு முக்கியமல்ல. அதே போல் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரந்தான் முக்கியமே தவிர பின்பற்றும் மதம் முக்கியமல்ல. எந்தப் படகும் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும். எந்த மதமும் இறைவனிடம் கொண்டு சேர்க்கும். 
சீடன் உண்மையை உணர்ந்தான்.

Friday, August 16, 2013

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.
"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.
"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.
நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.
"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.
நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.
"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.
"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.
கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக சித்தர்களாலும்,முனிவர்களாலும்,ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி,மந்திரம்,அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலை  களினால்  மனித குலம் இன்று வரை மனம் ,உடல் ,வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்  கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.

நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை.அவை ராகு,கேது,சனி ஆகும்.இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான் தான்.

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.இறை வனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால் தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.

பனிரெண்டு இராசிகளில் உள்ள இராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு இராசி களின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி,அஷ்டம சனி,போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி,பண முடக்கம்,வம்பு சண்டை,வழக்குகள்,அனைத்திலும் சந்தேக மனப் பாண்மை,மனப் பிரம்மை,விரக்தி,தொழில் முன்னேற்றமின்மை,எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோயில் களுக்குச் சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டும்,அர்ச்சனை, அபிசேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள்.இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழி முறைகள் வகுத்துள்ளனர்.

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  
இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள்தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

சித்தர் நெறி

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை!

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று!
ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்காவா!
ஞானத்தின் மிக்கார் நரனின் மிக்கார்! என்ற திருமந்திரம்.
"ஞானத்தைக் காட்டிலும் மிகச் சிறந்த நெறி நாட்டில் இல்லை; ஞானத்தைப் போதிக்காத சமயத்தாலும் நன்மை இல்லை;ஞானத்தைப் போல் மிகச் சிறந்த வழி முக்திக்கு வேறெதுவும் நல்காது; ஞானத்தைத் தழுவாத மனிதன் நல்மனிதனாகான்" என்பது திருமூலர் வாக்கு.

Why a Guru is necessary for Thiruvadi meditation?

Seeing the God inside you is the Ultimate enlightenment.

Get initiation or dhekshai from the Guru and do meditation with opened eyes. Doing meditation you can reach your soul or MeiPorul, which is the Geo Center of your head.
Only the dhekshai can make you to feel the sensation in your eyes during the dhekshai itself. Upadesham is making the shishya to know the secret. Upa means 2. Dhesam means place. Eyes are the 2 places. Upadesam is about 2 eyes.
Guru is a powerful person who can take off your imprints. Only he can penetrate your eyes with his eye power and can reach your soul and initiate. The role of Guru is so Divine and powerful. This type of initiation through eyes is called as Nayana Dhekshai. Nayana means Eyes.
Seek a Guru to show your soul.

Wednesday, August 14, 2013

இருட்டறையில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி போன்றவர் குரு....

 
குரு ஒரு மனிதனாக அல்லது ஏனைய மற்ற பொருளாக இருக்கலாம். நவீன காலத்தில் குரு என்பவர் தன்னை தனது நிலையை உயர்வான அலங்காரத்தால் அலங்கரித்து கொண்டு மக்களை மாறாத மயக்கத்தில் வைப்பவரகவே இருக்கிறார்கள்.
மனிதனுக்கு மட்டுமே குரு அவசியம். காரணம், மனிதன் இயல்பான அறிவுடன் அணைத்து செயல்களையும் செய்ய முடிந்தவன் இல்லை. மேலும் அவனால் அடுத்தவருடன் உறவாட மொழி மற்றும் சடுங்கு முறைகள் பல நடைமுறை செய்யப்பட்டு உள்ளது .
ஒருவரின் அறியாமையை போக்கும் ஒருவரே குரு. அதே சமயத்தில் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது சாத்தியம் இல்லை. பலதரப்பட்ட கோணமுடன் பல வகைகளில் வாழ்தலின் அம்சம் இருப்பதால் எல்லா வகைகளிலும் ஒருவர் ஒருவருக்கு உதவ முடியாது. குருவும் எதாவது ஒரு வகையில் அறியாமையுடன் இருக்க வைப்புகள் அதிகம்.
நமக்கு எதைக் குறித்து போதிய தெளிவு இல்லையோ அதை குறித்து நமக்கு போதிக்கும் ஒருவர் குரு. ஆனால் அதை குறித்த அரை குறை அறிவுடன் அவர் இருக்கிறார் என்றால் நாமும் போதிய தெளிவை அவரால் அடைய முடிவது இல்லை. எனவே,உண்மையான அறிவுத் தெளிவு பெற்ற ஒருவரை குருவாக அடைவது அவசியம். 
தனது புரிதலை அடுத்தவருக்கு உரிமையாக்கி தருபவரே குரு. குரு என்பது ஒரு வேடமோ, சடங்கோ,அலங்காரமோ, போதனையோ, விளம்பரமோ இல்லை.
எல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை, எதுவும் அறியாதவர் யாரும் இல்லை. எனவே, குரு அனைத்தும் அறிந்தவராகவோ, சிடர் எதுவும் அறியாதவரகவோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. 
இன்றைய உலகில் பலதரப்பட்ட துறைகள் வந்தவண்ணம் உள்ளது. புதிய கண்டுபிடுப்புகள், புதிய கருவிகள் என்று நித்தம் புதுமைகள் பிறந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவைகள் மட்டும் நிறைவான வாழ்வை தர முடியாது. எனவே உலக இயக்கத்திற்கு அடிப்படையான காரணம் அறிந்து இன்புறுவது மனிதனுக்கு நல்லது. 
அவ்வகையில் தன்னை அறிந்து தனக்கு மூலம் எது என்பதை அறிந்து அதை அறியும் கலை அறிந்து போதிக்கும் ஒருவரை குரு என்பது சரியானதாக இருக்கும்.