Saturday, September 17, 2011

தியானம் செய்வது எப்படி?


  
ஒருவன் இடைவிடாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை மந்திரத்தை ஜபிக்கும்போது, அவனுடைய மனம் தானாகவே வலிமையடைந்து, தியானத்தில் மூழ்குகிறது. இறுதியில் குண்டலினி சக்தி அவனிடம் விழித்தெழுகிறது. தூய்மையான மனம் படைத்தவர்கள் தியானம் செய்யும்போது, அவர்கள் ஜெபிக்கும் மந்திரம் தானாகவே எந்தவித முயற்சியும் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்து கொப்பளித்து பொங்குகிறது. யார் இந்த நிலையை அடைகிறார்களோ அவர்கள் ஜபத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

* எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி, நல்லுணர்வுகளை உருவாக்க தியானம் ஒரு சிறந்த வழி. ஆழ்ந்த தியானம் என்பது முதலில் சிரமமாகத் தோன்றினால், கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தையே ஜபம் செய்யுங்கள். நாளடைவில் ஜபம் செய்யும் நிலையே தியான நிலைக்கு மாறி, மனதை ஒருமுகப்படுத்த வாய்ப்பு கிட்டும். அப்படியும் மனம் அடங்காவிட்டால், மனத்தூய்மை ஏற்படுவதற்கு வழி பிறக்கும்.

* மலர்களை கையில் எடுத்து முகர்ந்து பார்க்காவிட்டாலும், அவற்றின் மணம் நம் நாசியை எட்டுகிறது. சந்தனத்தை அரைத்தாலே நம் கையிலும் சந்தன மணம் கமழ்கிறது. அதைப்போலவே ஜபம் செய்தாலே தியானநிலைக்கு அது மூலாதார சாதனையாக அமைந்துவிடுகிறது. ஜபமானாலும், தியானமானாலும் நம்பிக்கையோடு, பரிசுத்தமான உள்ளத்தோடு, தீவிர வைராக்கியத்தோடு செய்ய வேண்டும்.

* மந்திரம் உடலை தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தை ஜபிப்பதால் மனிதன் தூய்மையடைகிறான்.

No comments:

Post a Comment