Friday, July 25, 2014

மனம்....


இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒருதவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும்இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்துதான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார்.ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.
மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.
நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (sub unconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை.

Saturday, July 12, 2014

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...

ஆறுபடை வீடுகள்
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்ச்சோலை
இவைகளே ஆறுபடை வீடுகள்.
ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள்
அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.
1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை
மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.
ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

Thursday, July 10, 2014

காயத்ரி.. குண வளர்ச்சி... பரிணாம உயர்வு


காயத்ரி சாதனை ஒருவனது சூஷ்ம உடலில் எப்படி செயல் புரிகிறது?குணவளர்ச்சி மூலம், காயத்ரி மந்திர அலைகள் ஒருவனில் குறித்த குணவளர்ச்சியினை உண்டு பண்ணக்கூடியவை. ஒருவனது தமோ, ரஜோ, சத்துவ குணங்களை படிப்படியாக உருமாற்றியமைத்து ஒருவனது பரிணமத்தினை அதிகரிக்கிறது. உதாரணமாக தமோ குணம் நிறைந்த ஒருவன் காயத்ரி சாதனையினை ஆரம்பிக்கின்றான் எனில் அவனில் ரஜோகுணம் படிப்படியாக வளர ஆரம்பிக்கும். சோம்பித்திரிந்தவன் உற்சாகமாக வேலையில் ஈடுபட ஆரம்பிப்பான். அதுபோல் ரஜோகுணம் மிகுந்தவனுக்கு சத்துவ குணம் வளர ஆரம்பிக்கும். இறைசாதனை, பொறுமை என்பன செய்யக்கூடிய பக்குவம் வளர ஆரம்பிக்கும். 
காயத்ரியின் மூன்று பாதங்களும் சரஸ்வதி,மஹா லட்சுமி, காளி ஆகிய மூன்று சக்திகளை குறிக்கும். சரஸ்வதி ஞான சக்தியாக யோகிகள், முனிவர்களில், தத்துவ ஞானிகளிடம் காணப்படும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்க்குபவள், அதாவது இவர்கள் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அதுபோல் பெற்ற சமூக சீர்திருத்தவாதிகள், செல்வந்தர்கள், புத்தி ஜீவிகள் என்பவர்கள் மஹா லட்சுமியின் அருள் பெற்றவர்கள். பௌதீக விஞ்ஞானிகள் காளியின் அருள் பெற்றவர்கள், அதாவது பிரபஞ்ச சக்தியின் குறைத்த அலைவேக சக்தியினை தம்மில் கவர்ந்து செயற்படுத்த கூடிய வழிமுறையினை ஏதோ ஒரு முறையில் அறிந்தவர்கள். 
இந்த மூன்று அம்சங்களும் ஒருவருக்கு சரியாக அமையும் போதுதான் வாழ்வு பூரணமடைகிறது, அதாவது ஒருவருக்கு ஆன்ம வாழ்க்கை, புத்தி/மனோமய வாழ்க்கை, பௌதீக வாழ்க்கை ஆகிய மூன்றும் சரியாக வளர்ச்சியுறும் போதுதான அவனது பரிணாமம் உயர ஆரம்பிக்கிறது. இதனை ஒருவருடைய கர்மம், சூழல், தன்மை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற விகிதத்தில் வளர்ச்சியுற செய்யும் அரிய சாதனமே காயத்ரி சாதனை.  
அனைவரும் காயத்ரி சாதனை செய்வோம்!

Wednesday, July 9, 2014

குறள் பற்றி அறிஞர்களின் கருத்துகள்...

திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் திரிக்குறள் என்பதாகும்.
இதன் மூல நூல் மூவர் மொழியாக அழைக்கப்படும் திரிபேத வாக்கியமாகும்.
இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள்.
இது பாலி மொழியில் இயற்றப்பட்டதாகும்.
தன்மபீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது.
இதன் வழி நூலே திருக்குறளாகும்.
திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரம தேவர்.
மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.
சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம்.
இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம்
குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம்
சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால்.
பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது.
பின்னரே மற்ற நீதி நூல்கள் தோன்றின.
பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால் தான் அவருக்கு நான் முகன் என்று பெயர்.
தமிழில் தோன்றிய முதல் நீதி நூலும் அதுவே.
வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும்.
வள்ளுவர் வடநூல் சார்பு மிக்கவர். அவர் வைதீகச் சார்புடையவராதலின் தென்புலத்தார், இல்வாழ்வான் ஆகிய குறட்கள் மூலம் பஞ்சம காயறங்களினை ஈண்டொழுகக் கூறினார்.
ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும்.
மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
”ஆதி பகவன் அருமறை ஓதுமின்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.
”ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்
சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ” என்றும் சித்தர் கூறியுள்ளார்.
ஆக புத்தமதக்கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே.
வள்ளுவர் ஒரு பௌத்தரே!
காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் –வள்ளுவர் ஒரு வைதீகரே!