Tuesday, August 19, 2014

ஆலயதத்துவம்......

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையின் 13வது அத்தியாயத்தில் (‘க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோகம்’) அருச்சுனனிடம் கூறும்போது “உடலே க்ஷேத்ரம். இதை அறிகிறவன் க்ஷேத்ரக்ஞன். அந்த க்ஷேத்ரக்ஞனும் நானே. இதை உணர்வதே ஞானம்” என்கிறார். “அதாவது நம் உடல் ஓர் ஆலயம். அதனுள் உறையும் ஆத்மா இறைவனே” என்று உரையாசிரியர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்தாக இந்த விளக்கத்தை விரிவுபடுத்திப் பார்ப்போம்.
ஆன்மா லயித்திருக்கும் இடம் ஆலயம். அந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே ஆலயதத்துவம். பகவான் உலகம் என்ற அண்டத்தைப் படைத்தது போலவே உடல் என்ற பிண்டத்தையும் படைத்திருப்பதால் அண்ட, பிண்ட தத்துவங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த உண்மையைக் கண்டறிந்தவர்கள் யோகிகள். அவர்கள் தான் போகிகளுக்கும், ரோகிகளுக்கும் வேத, ஆகம சாஸ்திரங்களை விளக்கி வைத்து நாமும் புரிந்து கொள்ள வழி செய்தவர்கள் (யோகி - ஒருவேளை உண்பவன், போகி - இருவேளை உண்பவன், ரோகி - பல முறை உண்பவன் ஆதலால் வியாதிகளுக்கும், துன்பங்களுக்கும் அடிமைப்பட்டவன்)
யோகிகள் உணவுக் கட்டுப்பாடுள்ளவர்கள் என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்தி தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள். அதன் பயனால் யோகபலம் பெற்றவர்கள். எதையும் செய்யவும் உணரவும் சக்தி பெற்றவர்கள். குறிப்பாக, ‘லம்பிகா’ என்ற யோகப் பயிற்சியினால், நாக்கினை இருபுருவங்களுக்கும் மத்தியில் செலுத்தி அங்கிருந்து பெருகும் அமிர்தபானத்தைப் பருகுவதால் அவர்களுக்குப் பசி, தாகம் இருக்காது. புருவமத்தியில் (லலாடம்) தவமியற்றுவர்களே இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள். உடலின் காமகூடத்தில் ஏற்படும் வீரியங்களை உடலின் மேல்நோக்கிச்செலுத்தி, உடலெங்கும் பரவச் செய்து கிடைக்கும் பேரின்பத்தை நன்கு உணர்ந்தவர்கள். ஆதலால், சிற்றின்பத்தை ஒதுக்கி, சரீரபலம், மனோபலம் ஆகியவற்றினால் உடலுள்ளிருக்கும் ஆத்மா, பரமாத்மாவுடன் கலந்து காலம் கழிவதே தெரியாமல் இறையுணர்வாகிய இன்பத்திலேயே திளைத்தவர்கள். ஆதிசங்கரர், இவர்களை “ஊர்த்துவரேதசர்கள்’ என்கிறார்.
வீரிய விந்துகளை வெளியே செலுத்துவதால் (சங்கினி நாடிமூலம்) கிடைப்பது சிற்றின்பம். இதற்கு மற்றவரின் உதவியும் தேவை. சிற்றின்பர்களுக்கு பசியும், தாகமும் இருந்து கொண்டே இருப்பதால் மனக்கட்டுப்பாடு இருப்பதில்லை. சரீரபலம் குறையும். இவர்களுக்கு ஆன்மபலம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த யோகிகள் அவர்களுக்கு மனபலம் ஏற்பட ஆலயங்களை எழுப்பினார்கள் என்பதே காலம் காட்டும் வரலாறு. அதற்கு பிண்டதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு எளிதில் பழகி தொடர்ந்து ஆலயவழிபாடு செய்வதால் இறையின்பம் காண வழி செய்து கொடுத்தனர்.
ஆலயம்: மனித ஆகிருதியாகிய பிண்டம் - இது அடிப்படை
அதில் கால்கள் - முன் கோபுர(ங்கள்)ம்
பாதப்படலங்கள் - கோபுரத்தின் பக்கங்கள்
பாதங்களின் இடைவெளி - கோபுரவாயில்
குதம் - பலிபீடம்குஹ்யம் (ரகசிய இடம்) - துவஜஸ்தம்பம் (எ) கொடிமரம்
அண்டகோசம் - வாகனங்கள்
வயிறு - மணிமண்டபம்
தொப்புள் - மணிமண்டபத்திலுள்ள மணி
மார்பு - மகாமண்டபம்
கழுத்து - அர்த்தமண்டபம்
தோள்கள் - உட்பிராகாரங்கள்
கைகள் - வெளிப்பிராகாரங்கள்
விலாப்புறங்கள்/கைகளுக்குள்ள இடைவெளி - இவையும் வெளிப்பிராகாரங்கள்
செவிகள் - பிராகாரப் பலகணிகள் (நுழைவாயில்கள்)
முகம் - ‘அந்தராளம்’ (எ) முன்மண்டபம் (மூலஸ்தானத்திற்குமுன்)
கண்கள் - கர்ப்பக்கிரக நிலைத்தூண்கள்மூக்கு - அவற்றின் மேலுள்ள கல்
தலை - கர்ப்பக்கிரகம்
ஆயிரம் இதழ்கொண்ட தாமரரை - விமானம்
ஆத்மா - விமானத்தின் கீழேயுள்ள விக்ரஹம்
இருதயக்கமலம் - ஆலயத்தடாகம்
இடையும் அதன் வலம், இடப் பக்கங்களும் - பின்னும் பக்கங்களில் உள்ள கோபுரங்களும்
எலும்புகள் - சுவர்களின் கற்கள்
நரம்புகள் - கல்தூண்கள்
மாமிசப்பகுதி - சுண்ணாம்பு/சிமெண்ட் கலவைகள்
ரஸம், ரத்தம், மாமிசம், மேதஸ் - (உடலில் கொழுப்பு,) எலும்பு, மஜ்ஜை, சுக்லம் (கண்ணின் வெள்ளைப்பகுதி) என்ற ஏழு தாதுக்களும் - ஏழு மதிற் சுவர்கள்
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்ற ஐந்து கோசங்கள் - ஐந்து மதில்களையும்
ஸ்தூல - ஸுக்ஷ்ம - காரணசரீரங்கள் - மூன்று மதில்களையும்
ஒரேமதில் இருந்தால் இந்த அத்தனை தத்துவங்களுமே அதில் அடங்கி விட்டதாகவும் அறிய வேண்டும். சிலயோகிகள், இறைவனின் நிற்கும் திருக்கோலமே கோபுர வடிவம் என்றும் அதைச்சார்ந்த ஆலயத்தை இறைவனின் சயன(படுத்த)க் கோலமாகவும் கூறுவர். ‘கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்’ என்று கூறியதன் உண்மை இதுதானே?
பூஜை செய்யும்போது (க்ஷோடச) பதினாறு வகை உபசாரம் செய்வதை பஞ்ச பூத. சம்பந்தமானவை என்பதையும் அறியவும்.
1. பூமி - நைவேத்தியம்
2. நீர் - ஸ்நானம்
3. நெருப்பு - தீபம்
4. காற்று - சாமரம்
5. ஆகாயம் - மணிஓசை
ஏனெனில் இவை யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஈசன் எவ்வடிவிலுள்ளான் என்பதைக் கூற முடியாது என்றாலும் மனித வடிவில் வழிபடுவது ஏன்? அதற்கு ஒரே காரணம், மனித இனத்தின் மனம், தன்னைப் போன்ற வடிவத்தை ஆதரித்து எளிதாக ஏற்றுக் கொள்கின்றது. (மானைக் காட்டியே மானைப்பிடிப்பது போல்) அதனால்தானோ ஸ்ரீராமன், புத்தர், சங்கரர், ஸ்ரீராமகிருஷ்ணபரம ஹம்சர், இயேசு நாதர், முகமது நபி போன்ற அவதார புருஷர்கள் மனித வடிவில் வந்தனர்? குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் செய்யும்போது அருச்சுனனுக்கு விஸ்வரூபம் எடுத்து தரிசனம் காட்டிய போது அதைக் காண ஞானக்கண் பெற்றும் கூட, பவந்து பகவானை மீண்டும் மனித வடிவிற்குத் திரும்பிவரப் பிரார்த்தனை செய்தான்.
ஆதலால் இறைவனின் உண்மையான திருவுருவத்தைக் காண நம்மால் இயலாது என்பதே நிதர்சனம். வேறு பல வடிவங்களிலும் நம்மால் காண இயலாது. நினைத்துப் பார்க்கவும் மனம் இடம்தராது.
“கண்ணுறும் வடிவத்திலேயே கடவுள் உளன்” என்று நினைத்தலே இறைவன் நாம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது தெளிவாகிறது. யோகிகள், நமக்குக் காட்டிய பக்தி மார்க்கமே ஆலய வழிபாடு மூலம் தான். பக்தியற்ற இறை வழிபாடு உயிரற்ற உடலுக்குச் சமம்.

Sunday, August 17, 2014

'நாராயணா' நாம மகிமை...

சதா "நாராயணா நாராயணா" என்று உச்சரித்துக்கொண்டு திரியும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கே.. அதன் மகிமையை அறிய வேண்டும் என்னும் ஆவல் வந்தது. நாராயணனான மஹாவிஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றபொழுது.. "உங்கள் திருநாமத்தின் மகிமைதான் என்ன? இதை உலகறியச் சொல்ல வேண்டாமா" என்று கேட்டார் நாரதர்.

"அப்படியா! பூலோகத்தில் ஏதாவதொரு துல்லிய ஜீவனிடம் என் நாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. பூலோகம் இறங்கி வந்தார் நாரதர். சேற்றில் நெளிந்து கொண்டிருந்த பழுவைக் கண்டார். அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்று இருமுறை சொல்ல.. புழு துடிதுடித்து மரணம் அடைந்தது. நாரதர் அதைக் கண்டு திகைத்தார்.! அடுத்த முறை பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நடந்தவற்றைக் கூறினார்.

"அப்படியா.. பூலோகத்திற்குச் செல். அங்கு ஒரு பட்டாம்பூச்சி மலர் மீது அமர்வதைக் காண்பாய். அதனிடமும் என் திருநாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. நாரதரும் அப்படிப் பூவில் அமரும் பட்டாம்பூச்சியைக் கண்டு.. அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்றார். சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி.. திடீரென்று இறந்த வீழ்ந்தது. திரும்ப பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நாரதர் நடந்ததைக் கூறினார். "ஓ பட்டாம்பூச்சியும் மாய்ந்ததோ! சஞ்சலம் வேண்டாம் நாரதா. குட்டி மான் பால்குடித்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். அதன் செவியில் என் நாமத்தை ஒதுவாயாக" என்று கூறி அனுப்பி வைத்தார்.

நாரதரும் அப்படியொரு மான் குட்டி பால் குடிப்பதைக் கண்டபோது அதன் அருகில் சென்று.. தயக்கத்துடன் "நாராயணா நாராயணா" என்றார். அடுத்த கணம் அந்தக் குட்டிமான்.. துள்ளி எழுந்த வேகத்திலேயே வீழ்ந்து மடிந்தது. நாரதர் திடுக்கிட்டார். திரும்பவும் பகவானைத் தரிசிக்கப் போன பொழுது "பகவானே! புழு இறந்தது.. பட்டாம்பூச்சியும் மாய்ந்தது.. மான்குட்டியும் மடிந்தது. இதென்ன அபச்சாரம் மாதவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"அதற்குள் மனம் தளர்ந்தால் எப்படி? ஒரு பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் காண்பாய். அதனிடம் சென்று என் நாமத்தை உச்சரிப்பாயாக" எனக் கூறி அனுப்பி வைத்தார். பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் கண்ட நாரதர்.. இந்தப் பசுக்கன்றும் இறந்துவிடுமோ என்று பயந்தார். அதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணியவாறு பசுக்கன்றின் காதில் "நாராயணா நாராயணா" என்றார். பசுக்கன்றும் தொப்பென வீழ்ந்து இறந்தது. இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினார் நாரதர். பிறகு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாராயணனிடம் சென்றார்.

"பகவானே! காக்கும் கர்த்தாவாகிய உங்கள் திருநாமம் இப்படிச் சம்ஹாரத்தில் முடிவது என்ன சோதனை சுவாமி" என்று கேட்டார். "பிரம்மபுத்திரா.. அதற்குள் அவசரப்படுகிறாயே! காசிராஜன் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அங்கு கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. நீ அந்த சிசவிடம் சென்று.." என்று சொல்லி முடிக்க முன் நாரதர் குறுக்கிட்டார். "சுவாமி.. என்னை கலகப் பிரியன் என்று தான் சொல்வார்கள். என்னை கொலைகாரன் பட்டத்துடன் உலவவிட திருவுளமோ" என்றவாறு தன் அதிருப்தியைத் தெரிவித்தார். "நாரதா! இந்த ஒரு தடவை மட்டும் அந்தக் குழந்தையின் செவியில் எமது நாமத்தை சொல்லி வருவாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

காசிராஜன் அரண்மனையில் நடந்த பிறந்ததின விழாவிற்கு நாரதர் சென்றார். "சுவாமி.. என் குமாரன் பிறந்த நாளில் தாங்கள் எழுந்தருளியது எங்கள் தவப்பயன். என் மைந்தன் பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க ஆசி கூறுங்கள்" என்று கூறியவாறே நாரதரை வரவேற்றார் காசிமன்னன். தயக்கத்துடன் குழந்தையின் காதில் "நாராயணா நாராயணா" என்று ஓதினார் நாரதர். என்ன ஆச்சரியம்.. குழந்தை பேச ஆரம்பித்ததைக் கேட்டு திகைப்படைந்தார். "மகரிஷி.., தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நாராயண நாமத்தின் மகிமை இன்னுமா புரியவில்லை? என்று கேட்டது குழந்தை. " குழந்தாய் விபரமாகச் சொல்" என்றார் நாரதர்.

"ஆரம்பத்தில் புழுவாய் இருந்தேன். அப்பொழுது உங்கள் நாராயண மந்திரம்என்னைப் பட்டாம்பூச்சி ஆக்கியது. அதேபோல்.. மானாகி, பசுவாகி இப்பொழுது கிடைத்தற்கரிய மானிட பிறவி அடைந்ததும் அதே நாராயண மந்திர மகிமையால் தான்" என்று கூறியது குழ்ந்தை. நாராயண மந்திரத்தின் மகிமையைப் பரிந்து கொண்ட நாரதர்.. குழந்தையை வாழ்த்திவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.

சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள்!


கர்மா! இது ஒரு மிகப்பெரிய உண்மை. இதை சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள். பல இடங்களிலும் இதை தெளிவாக சொல்லி போய் இருக்கிறார்கள். கர்மாவுக்கு பலம் சேர்ப்பதே நம்முடைய எண்ணங்கள், அதீதமான ஆசைகள், நிறைவேறாத ஆசைகளினால் மிஞ்சும் வாசனைகள் போன்றவைதான். இறைவனுக்கு நாடகத்தை நடத்த நிறைய கதா பாத்திரங்கள் தேவை. மனிதர்கள் தங்களை இகபர பொருட்களில் ஆசைகளுக்கு அடிமை படுத்திக்கொண்டு , இறைவனுக்கு, அவன் வேலையை எளிதாக்குகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நண்பருடன் கலந்துரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை கீழே தருகிறேன். புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
"இந்த மனிதர்கள் போகிற போக்கை பார்த்தால், இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லையே! அத்தனை பேரும் பதவி, பொருள், பணம், நிலம் என்பதில் தான் குறியாக ஓடுகிறார்கள். வாழ மறந்து விடுகின்றனரே!".
"சரிதான்! ஆனால், தாங்கள் அடைவதை அனுபவிப்பது தான் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தான் வாழ்கிறார்களே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் வாழ மறக்கவில்லையே. ஆனால் அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லையே. அது தான் இறைவன் நடத்தும் நாடகம். "

"நீங்கள் சொல்கிற படி பார்த்தால், நிறைய பேர்கள் எதை நம்புகிறார்களோ அதுவே வாழ்க்கை என்று ஆகிவிடுகிறதே"
"ஆமாம், இந்த உலகத்தில் அப்படி தானே ஜீவிதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், ஏன் நாம் உண்ணும் உணவு கூட, மற்றவர்களால் தான் நிச்சயிக்கபடுகிறது. . நம் முன்னால் வீசி எறியப்படுகிற பொருள் சார்ந்த வாழ்க்கையை வேண்டாம், இது எனக்கு தேவை இல்லை என்று விலக்குகிற மனநிலை எத்தனை பேருக்கு இருக்கிறது? பொருள் சார்ந்த நிலையை வேண்டாம் என்று வைத்து, இறை அருள் சார்ந்த வாழ்க்கை தான் எனக்கு வேண்டும் என்று எத்தனை பேரால் தீர்மானிக்க முடிகிறது?"

"உண்மை தான்! ஆனால் எத்தனை பேரால் இறை சார்ந்த வாழ்க்கையை வாழ முடிகிறது. இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்."

"அதில் உள்ள மர்மத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியவில்லை. அதனால் தான் பொறுமை இழக்கிறான். அமானுஷ்யம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தான். அதில் இருக்கும் த்ரில் தனிதான். ஆனால் வெற்றி பெறாமல் இருப்பது எதனால் என்று ஒரு முறை தீர விசாரித்தால் உண்மை விளங்கும். வெற்றி பெற நினைப்பவர் மனதில் இறை மீது நிலைத்த நம்பிக்கை இன்மையே காரணம்."
"உண்மை! அப்படியானால் நீங்கள் சொல்ல வருவதென்ன?"
"நீங்கள் கேட்டீர்களே "இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்"

இதற்கு பின் சில விஷயங்கள் இருக்கிறது.
மனிதனை படைத்தாகிவிட்டது. நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரின் நடத்தை இன்னொருவருக்கு பாடமாக இருக்கட்டும் என்று இறைவன் பல லீலைகளை நடத்துகிறான். அவன் கையில் பலவித கயிறு இருக்கிறது. உதாரணமாக கோயில் உண்டியலில் போட தந்த காசை நீங்கள், அவனிடம் இல்லாத காசா! இதை போட்டுத்தான் அவன் வாழவேண்டுமா என்று நினைத்து, அதை கொண்டு போய் வியாபாரம் பண்ணி நன்றாக இருந்தால், அதையும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் மேலும் மேலும் வளர வழி வகை செய்து உங்களை மிக உயரத்தில் ஏற்றி உட்கர்த்துவான். அப்படி உட்கார்ந்த நீங்கள் "ஆஹா! நம் முயற்ச்சியால் இத்தனை தூரம் ஏறி வந்து விட்டோம்" என்று நினைக்கும் போது, மேலிருந்து ஒரேடியாக கீழே தள்ளிவிட்டு உங்கள் கதையை முடிப்பான். ஏன்? உங்கள் கர்மாவில் கொஞ்சம் புண்ணியம் இருந்திருக்கும். அதன் பயனாக உங்களை மேலே ஏற்றி விட்டு தான் ஆகா வேண்டும். அந்த கணக்கு சரியான பின், உங்கள் கெட்ட கர்மா வின் கணக்கு சரி பார்க்க படும். குறுகிய உயரத்தில் இருந்தால் அடி படாது, சின்ன காயத்துடன் போய் விடும். உயரத்தில் இருந்து விழ்ந்தால் தான் கணக்கை முடிக்க முடியும். இதை மறைமுகமாககூட நாம் உணருவதில்லை. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை புரிந்துகொள்ளும் சக்தி இறையை நாடாமல் எப்படி மனிதனுக்கு தெரிய வரும்? அதற்கும் அவன் அருள் வேண்டுமே. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தான் ஞானியாக ஆகிறார்கள். இதை எல்லாம் நீயே வைத்துக்கொள் என்கிறார்கள். ஞானத்தை கொடு, இவற்றில் பற்றை அறுத்தெறி என்று இறையிடமே வேண்டுகிறார்கள். அந்த இறையே நம்மை பார்த்து பயப்படவேண்டும். "என்னடா இது, இவனுக்கு இத்தனை வாய்ப்பை கொடுத்தும் அதை அவன் பற்றாமல் இருக்கிறானே என்று யோச்கிக்க வைக்க வேண்டும்." அப்படி நாம் நேர்மையாக இருந்தால் இறை முன் கூட நெஞ்சு நிமிர்த்தி நிற்கலாம். ரகசியமாக இறையிடம் வேண்ட வேண்டாம். பிறரை கெடுத்தோம் என்கிற நிலை வராது. நம்மை கண்டாலே இறையே யோசிக்கும். ஏன், ஒரு நாள் கூட நாம் மனம் புலம்ப வேண்டிய நிலை வராது. நான் என்கிற கர்வம் அறவே ஒழிந்துவிடும். என்னுடையது எதுவம் இல்லை. எல்லாம் உன்னுடையது என்கிற பலமான அஸ்திவாரம் உருவாகும். அதுவே முன்னேற்றத்தின் முதல் படி. இதை தெளிவாக புரிந்து கொண்டால், நடக்கிற நாடகம் மிக நன்றாக எல்லாருக்கும் புரியும். புரியாத நிலையில் உருவாகும் குழப்பம் தான் தவறுகளை செய்ய வைக்கிறது"

"இறை நாடகத்தை நடத்த ஆசை படட்டும். நீங்கள் தெளிவடைந்து விலகி நில்லுங்கள். நீங்கள் கரை ஏறலாம். உங்களுக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பார். அது அவர் தலை எழுத்து. அவரும் புரிந்து கொண்டு விலகி விட்டால், வேறு ஒருவர் அவர் இடத்தை பிடிப்பார். இது தான் கால சக்ரம். சாட்சி பூதம், வேறு விதத்தில் சொல்வதானால், "நடப்பதெல்லாம் நாராயணன் செயல்" என்று பெரியவர்கள் சொல்லி போனது - நாராயணனை "காக்கும்" கடவுளாக அவர்கள் அறிந்ததால்.
உங்களுக்கு புரிந்ததா இந்த கலந்துரையாடல்? இல்லை என்றால் கால் இல்லாத ஒருவரையும், நன்றாக இருக்கும் உங்கள் கால்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்பொழுது புரியும்!

Saturday, August 16, 2014

பூவும் புன்னகையும்..!


ஒரு நாள் புத்தபிரான் தம் கையில் ஒரு மலரை ஏந்தியவாறு வந்து கொண்டு இருந்தார். அதை கண்ட சீடர்கள் மலரைபற்றி  ஏதாவது தாங்கள் கூற வேண்டும் என குருநாதர் எதிர்பார்கிறார் என்று நினைத்தனர். எனவே ஒரு சீடர் மலரைப்பற்றி ஒரு  பிரசங்கம்  செய்தார். இன்னொருவர் கவிதை பாடினார். மற்றவர் கதை சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கற்பனா சக்தியை வெளியிட்டனர்.
       
ஆனால், மகாகாஷ்யபர் என்ற சீடர் மட்டும் பூவை பார்த்து விட்டு ஒரு புன்னகையுடன் மெளனமாக இருந்தார். 
புத்தர் கூறினார் "இறைவனையும் இயற்கையையும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அவை அனுபவித்து உணர வேண்டியவை."

Thursday, August 7, 2014

பில்வாஷ்டகம்..

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.
கோடிகன்யாமஹாதானம் கில பர்வத - கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.
காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.
ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.
உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.
தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்.

Tuesday, August 5, 2014

தஷிணாமூர்த்தி வழிபாடு..

தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.
அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.
இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.
ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.
ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..

"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"

தஷிணாமூர்த்தி காயத்ரி..


"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்||"