Friday, November 26, 2010

தர்ப்பையின் மகிமை...

சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. கிரகண காலங்களில் சேமிக்கும் உணவு பதார்த்தங்கள் இருக்கும் பாத்திரங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் அவை பாதிப்படையாமல் இருக்கும் என்பார்கள்.
அரிதான இடங்களில் மட்டுமே வளரும் புல் வகை தாவரமான தர்ப்பையில் பலவகைகள் உண்டு.
தர்ப்பையால் பவித்திரம் ( மோதிரம் போன்ற வளையம் ) செய்து , ஆண்கள் வலது மோதிர விரலிலும், பெண்கள் இடது மோதிர விரலிலும், அணிந்து கொண்டு சங்கல்பம் செய்த பின்னரே எந்த காரியத்தையும் ஆரம்பிப்பார்கள்.
நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து தான் தரப்பை புல் அரிவார்கள். "தீர்த்தத்தின் மறு ரூபமே தர்ப்பை, தீர்த்தம் வேறு தர்ப்பை வேறல்ல" என்கிறது வேதம். இதற்காக ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது,
விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.
தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.
இதனால்தான் தான் தர்ப்பை விசேடமாக திகழ்கிறதாம்....

Thursday, November 11, 2010

ஸப்த ரிஷிகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்..

சப்தரிஷிகள்
காஸ்யபர்..
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்தாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப: ப்ரசோதயாத்||
அத்ரி..
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்||
பரத்வாஜர்..
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ: ப்ரசோதயாத்||
விஸ்வாமித்ரர்..
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்||
கெளதமர்..
ஓம் மஹா யோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம: ப்ரசோதயாத்||
ஜமதக்னி..
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்||
வசிஷ்டர்..
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்||

Wednesday, November 10, 2010

மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழி முறைகள்

*மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மனதில் உறுதியாக இருங்கள்.
*ஆசைகளை உங்களால் முடிந்தளவு குறையுங்கள்.
*தீய எண்ணங்களில் இருந்து மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
*வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வை நேரானதாக இருக்கட்டும்.
*உங்கள் தினசரி வாழ்கையில் கடவுள் உங்களோடு கூடவே
இருப்பதாக நினையுங்கள்.
*உங்களிடம் இல்லாததைப் பற்றி வருத்தப்படுவதைக் காட்டிலும்
இருப்பவைகளைப் பற்றி பெருமையாக நினையுங்கள். 
*எல்லாவற்றிலும் மேலாக அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக    இருக்க விரும்பினால் அது மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலமே முடியும்.

Tuesday, November 9, 2010

பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.