Sunday, September 18, 2011

சோம்பேறித்தனம் கூடாது

* எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
* முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.
* இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.
* சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.
* காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.

No comments:

Post a Comment