Wednesday, October 5, 2011

நம் வீட்டின் வரலாறு.இன்னுமொரு பகுதி உங்களுக்காக..

 பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, (தாது உப்புகள் போன்றவைகள்) கரைத்து நீர்ம நிலையில் , தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.
சூரிய ஒளியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள்,  காளான்கள் போன்றவைகளும் , நீர்ம நிலையில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.
இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.
இப்படி நீரிலும், நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும், சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.
பிறகு இந்த தாவரங்கள்  அழிந்து , மக்கி  மண்ணில் மறைந்தன . இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின.  இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும், நீரிலும் , தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.
முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு செடி, கொடிகளாகவும், மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து , காய்த்து, கனிந்து , அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி, அவைகள் மறுபடியும் நீரிலும், நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன.  இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது.
இந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு  வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது  அதிக அளவு கரியமில வாயுதான்  காற்று மண்டலத்தில் இருந்தது.  அதனால் தாவர இனங்கள்  பகலில்  கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு  பிராண வாயுவை வெளியிட்டன. இரவில்  பிராண வாயுவை எடுத்துக் கொண்டு  கரியமில வாயுவை வெளியிட்டன.  இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது.
இந்தவிதமான பூமியானது சுமார் 40 ,000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது . என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த  ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற "ஓம்" ஒலியாகும்.
பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு  பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று  அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே
அந்த பரம்பொருளான இறைவன் ஆவான் .
பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும்  இறைவனின் சங்கல்பம் ஆகும்



Saturday, October 1, 2011

நாம் வாழும் வீடு பற்றி ..

நம்முடைய சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உண்டாகின . 
மகா வெடிப்பின் போது சிதறிய மிகச் சிறிய பொருட்கள் எல்லாம் 
விண் கற்களாக மாறி அண்டவெளியில் சுற்றி வர ஆரம்பித்தன. 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன், வெள்ளி என்ற இரண்டு கோள்களும், பூமிக்கு வெளிப் புறத்தில்செவ்வாய்,வியாழன், சனி, யுரேனஸ் , நெப்டியூன் , ப்ளூட்டோ என்ற கோள்களும் உண்டாயின. 
  வெள்ளியும், யுரேனசும், தவிர மற்ற கோள்கள் எல்லாம் இடமிருந்து வலமாகநீள்வட்டப் பாதையில் தன்னைதானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஆரம்பித்தன. 
சனி, சனி, யுரேனஸ் , நெப்டியூன் ,ஆகிய கோள்கள் வெறும் வாயுக்களால் ஆனவைகள் ஆகும். புதனும், வெள்ளியும் சூரியனுக்கு வெகு அருகில் உள்ளதால் அவை கொந்தளிப்பான கோள்கள் ஆகும். 
                        வியாழனின் மையப் பகுதி மட்டும் சிறிது கெட்டியானது .ஒவ்வொரு கோளுக்கும் என்று ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது. 
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு செயல்களை இந்த மின்காந்த சக்தியால் தான்  நடத்தப்படுகின்றன . ஈதர் (Ether ) என்ற அண்டவெளி எங்கும் வியாபித்துள்ள பொருளின் அடித்தளத்தில் இருந்து தான் அதனை ஆற்றல்களும் செயல்படுகின்றன. 
               பூமி உண்டான பொழுதே சந்திரனும், பூமியிலிருந்து 3 .84 லட்சம் கி.மீ தூரத்தில் உண்டாயிற்று. அது தனிக் கோளாக உருவாக முடியாத நிலையில் அதன் நிறைக்கும், பரிமாணத்திற்கும் ஏற்ப பூமியினைச் சுற்றி வரும் உபகிரகமாக  சந்திரன் உருவாயிற்று . இது தன் அச்சில் தன்னைத்தானே , அதே சமயம் பூமியின் சுற்றுப் பாதையில் , பூமியுடன் சேர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்கிறது. 
பூமியின் துணைக்கோளான சந்திரன் சூரிய ஒளியினை பூமிக்கு பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி போன்றது தான்.  பூமியானது தான் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. 
பூமியின் சுழற்சி (speed ) வேகத்தின் காரணமாக பூமியனாது சுருங்கி அதன்மேல் பாகம் சிறிது கடின தன்மையினை அடைய துவங்கியது .   அதனால் பூமியானது கமலா ஆரஞ்சுப் பழத்தைப் போல மேலும் கீழும் சிறிது தட்டையான  உருண்டை வடிவம் அடைய ஆரம்பித்தது. இப்படி அமைந்த பூமியின் மேல்பகுதி ( North Pole ) என்றும் கீழ் பகுதி  தென்பகுதி ( South Pole ) என்றும் உண்டாயிற்று. இப்படி இரண்டு துருவங்கள் உண்டானதால்  பூமியானது ஒரு காந்த மண்டலம் என்று ஆகியது.
அப்போது பூமியின் மீது இருந்த அதீதமான வெப்பத்தின் காரணமாக பூமியில் இருந்த வாயு அணுக்கள் எல்லாம் ஆவி ரூபமாக மேலே சென்றது.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்ட சுழற்சியின் வேகம் (Speed ) காரணமாக பூமியினைச் சுற்றி அடர்த்தியாக இருந்த கரியமில வாயும் ( carbon dioxid ) மற்றும் அண்டவெளியில் இருந்த மற்ற பல வாயுக்களும் சேர்ந்து  காற்று மண்டலம் என்பது பூமிக்கு மேல் 10 கி . மீ  உயரம் வரை உண்டாயிற்று. பூமி சுழல்வதால் ,(Earth Gravity ) காற்று மண்டலமானது பூமியினை விட்டு விலகிப் போகாமல் பூமியைச் சுற்றி படர்ந்தன.