Sunday, September 18, 2011

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும்போது, அப்பொருட்களின் நிலையில்லாத தன்மையை நினைவில் கொள்ளுங்கள். என்றும் நிலையான இறைவனின் புனிதத்திருவடிகளில் அடைக்கலம் அடையுங்கள்.
* பலவிதமான எண்ணங்களையும் மனதில் எண்ணிக் குழப்பம் கொள்ளாதீர்கள். ஒரே ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே சிறந்தது. எதிர்மறையான சிந்தனைகளை தொடர்ந்து எண்ணினால் நம் மன ஆற்றல்கள் சிதறடிக்கப்படுகின்றன.
* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. ஒருவன் தன் குறைகளை உணரத் தொடங்கினால் மற்றவர்களிடம் குறைகளைக் காண முடியாது.
* அலை பாய்வது மனத்தின் இயல்பே. அம்மனத்தைக் கட்டுப்படுத்துவதில் இறைநாமங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இறைவனின் திருநாமங்கள் நம் புலன்களை விட ஆற்றல் கொண்டவை. நமக்கு என்றென்றும் நிலையாக இருக்கின்ற உண்மையான சொந்தம் கடவுள் ஒருவர் மட்டுமே.
* எதைச் சாப்பிட்டாலும் முதலில் கடவுளுக்கு அதை நிவேதனம் செய்ய வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்த உணவை உண்பவர்களின் உடலும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன.

No comments:

Post a Comment