Saturday, September 17, 2011

பொறுமைதான் சிறந்த பண்பு

* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன
ஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.
* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி
அறியத் தொடங்குவது தான்.
* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு
ஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.

No comments:

Post a Comment