Tuesday, April 30, 2013

நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!





ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம்.
பைரவ ருத்ராய
 - பயங்கரமான ருத்ரன்
மகா ருத்ராய - பெரிய ருத்ரன்
கால ருத்ராய - கால வடிவான ருத்ரன்
கல்பாந்த ருத்ராய - கால முடிவான ருத்ரன்
வீர ருத்ராய - வீர ருத்ரன்
ருத்ர ருத்ராய - ருத்ரர்களில் பெரிய ருத்ரன்
கோர ருத்ராய - பயமுறுத்தும் ருத்ரன்
அகோர ருத்ராய - பயங்கரமில்லாத ருத்ரன்
மார்த்தாண்ட ருத்ராய - ஒளிவீசும் ருத்ரன்
அண்ட ருத்ராய - முட்டை வடிவ அகில ருத்ரன்
ப்ரஹ்மாண்ட ருத்ராய - மிகப்பெரிய அகில ருத்ரன்
சண்ட ருத்ராய - ஆவேசமான ருத்ரன்
ப்ரசண்ட ருத்ராய - மிக ஆவேசமான ருத்ரன்
தண்ட ருத்ராய - தண்டனையான ருத்ரன்
சூர ருத்ராய - பலம் பொருந்திய ருத்ரன்
வீர ருத்ராய - வீரனான ருத்ரன்
பவ ருத்ராய - பிறப்பிறப்புச் சுழலான ருத்ரன்
பீம ருத்ராய - வியப்புக்குரிய ருத்ரன்
அதல ருத்ராய - கீழ் உலகங்களின் முதலான அதல உலக ருத்ரன்
விதல ருத்ராய - இரண்டாவதான விதல உலக ருத்ரன்
சுதல ருத்ராய - மூன்றாவதான சுதல உலக ருத்ரன்
மஹாதல ருத்ராய - நான்காவதான மஹாதல உலக ருத்ரன்
ரசாதல ருத்ராய - ஐந்தாவதான ரசாதல உலக ருத்ரன்
தளாதல ருத்ராய - ஆறாவதான தலாதல உலக ருத்ரன்
பாதாள ருத்ராய - ஏழாவதான பாதாள உலக ருத்ரன்
நமோ நம: - போற்றி போற்றி
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்
சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
(அடுத்து வருவது ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தின் பகுதி)
நம: சோமாய ச - உமையுடன் கூடியவனுக்கு வணக்கம்
ருத்ராய ச - அழுகையைத் தருபவனுக்கும் வணக்கம்
நம: தாம்ராய ச - தாமிர நிறம் கொண்டவனுக்கு வணக்கம்
அருணாய ச - சிவந்த நிறம் கொண்ட சிவனுக்கும் வணக்கம்
நம: சங்காய ச - மகிழ்ச்சியைத் தருபவனுக்கு வணக்கம்
பசுபதயௌ ச - எல்லா உயிர்களின் உரிமையாளனுக்கும் வணக்கம்
நம உக்ராய ச - உக்கிரமானவனுக்கு வணக்கம்
பீமாய ச - பயமுறுத்துபவனுக்கும் வணக்கம்
நமோ அக்ரேவதாய ச - அருகில் இருந்து அழிப்பவனுக்கு வணக்கம்
தூரேவதாய ச - தூரத்தில் இருந்து வதைப்பவனுக்கும் வணக்கம்
நமோ ஹந்த்ரே ச - அழிப்பவனுக்கு வணக்கம்
ஹனீயசே ச - அனைத்தையும் அழிப்பவனுக்கும் வணக்கம்
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ - பசுமையான முடி கொண்ட மரங்களாக இருப்பவனுக்கு வணக்கம்
நம ஸ்தாராய - தாரக மந்திரமான ஓம்காரமானவனுக்கு வணக்கம்
நம: சம்பவே ச - அனைத்து இன்பத்திற்கும் பிறப்பிடமானவனுக்கு வணக்கம்
மயோ பவே ச - இம்மையும் மறுமையும் ஆனவனுக்கு வணக்கம்
நம: சங்கராய ச - இயல்பாகவே இன்பத்தைத் தருபவனுக்கு வணக்கம்
மயஸ்கராய ச நம: - பேரின்பத்தை மறுமையில் தருபவனுக்கும் வணக்கம்
சிவாய ச - மங்கல வடிவான சிவனுக்கு வணக்கம்
சிவதராய ச - எல்லோரையும் விட மங்கலமானவனுக்கு வணக்கம்
(ஸ்ரீருத்ர மந்திரப் பகுதி முடிந்தது)
அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே
பூரணா - முழுமையானவனே
ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே
சத்ய தேவ - உண்மைக்கடவுளே
தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே
வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே
யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே
நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே
துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே
சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே
சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே
ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே
சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே
புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே
த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே
வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே
மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே
பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே
பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
கால - காலமே
த்ரிகால - மூன்று காலமே
நேத்ர - கண்ணே
த்ரிநேத்ர - முக்கண்ணனே
சூல - சூலனே
த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே
சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே
திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே
மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான்
நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான்
கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன்
நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன்
ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)
சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே
டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்
சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

Thursday, April 25, 2013

உணர்வில் உணவின் தாக்கம்

[lalo3.jpg]

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நில சுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோ நானக் கை தேடி வந்து கேட்கலானார்.
“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”
“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால் பாயி லாலோவுடன் தங்கினேன்”
லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?”
“அவசியம் தெரிய வேண்டுமா ?”
“ஆம்”
“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும் பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.

மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”


“அன்பிற்குரிய பாகோ உன்னை அவமானப் படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.

குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர்.அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.
இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?
பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.
(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது

வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது

(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி )
உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)'

என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.
ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.
துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.
ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.
குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. 

நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.

Monday, April 8, 2013

அந்த ஒலி ஓம்

ஒரு கால கட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணுக்கூறுகள் ஒன்று சேர்ந்து  
( H2 +O2 = H2O ) என்ற ஒரு நீர் அணுக்கருவாக மாறின.

இப்படி பல கோடிக்கணக்கான நீர் அணுக்கள் ஒன்று சேர்ந்த மழை மேகங்கள் என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியினை அடைந்தது . பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியின் மீது பெய்யத் தொடங்கியது.
இப்படித்தான் பூமி உண்டான காலத்தில் , பிற்காலத்தில் பூமியில் உண்டாகப் போகும்   தாவர இனங்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆதாரமான தண்ணீர் என்ற ஒன்று உண்டாகியது. 

இப்படி பெய்யும்  மழையின் நீரானது பூமியினை நெருங்க முடியாதபடி, அதாவது மழை நீரானது பூமியினை நெருங்கும் முன்பே ஆவியாகி விடும் அளவிற்கு  பூமியானது  கடுமையான நெருப்புக் கோளமாக இருந்தது.

மழை நீர் பூமியினை தொடவே பல ஆயிரம் ஆண்டுகள்  ஆயிற்று.
இப்படி தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக பூமி குளிர்ந்து ஒரு கடின தன்மையினை அடையலாயிற்று . பூமியின் மேல் ஓட்டின் ஆழம் 40 கிலோ மீட்டர் வரை சென்றது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் பெய்த மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால்  சூழப்பட்டும், மீது ஒரு பங்கு நிலப் பரப்பகவும்  நீருக்கு  மேல் தோன்றியது.

ஒரு வழியாக பூமியின்  மீது பெய்த மழை நின்றது. இருட்டும் மறைந்தது. சூரியனின்  ஒளியும், வெப்பமும் பூமியின் மீது விழுந்தது. அந்த காலத்தில் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்து விழுந்து கொண்டே இருந்த விண்கற்களின் வெடிப்பால் ஏற்பட்ட ஒலிகளும் மற்றும் உலகம் சுற்றுவதால் ஏற்பட்ட ஒலியினையும் தவிர வேறு ஒலிகள் என்பது ஒன்று இல்லாமலே உலகம் முழவதும் ஒரே நிசப்தமாக இருந்தது.
ஒன்று அசையும்போது அதிலிருந்து ஒரு ஒலியும் உண்டாகும் என்பது இயற்கைக் கோட்பாடு.
அந்த ஒலி ஓம் என்று ஒலித்தது என்று ஆன்மீகம் கருதுகிறது. 

அப்போது பூமியில் மலைத்தொடர்கள், எரிமலைகள், வெந்நீர் ஊற்றுகள், நதிகள் என்று பல  உண்டாகியிருந்தன.
மலைகளில் இருந்து பல நீர் ஓடைகள் தோன்றி சமவெளியில் நதியாகப் பாய்ந்து முடிவில் கடலில் கலந்தன.  மலைகளில் உண்டான நதியானது அது வரும் வழியில் உள்ள பாறை களையும் அடித்துக் கொண்டு வரும்போது அவைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறி மணலாகவும் , வண்டல் மண்ணாகவும் மாறியது.
                                        அதனால் நதியின் ஓரங்களில் விவசாய நிலங்கள் உண்டாயின.
பல எரி மலைகளின் அடியில் உள்ள வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக திரவ நிலையில் இருந்தமக்மா என்ற எரிமலையில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்தது. இந்த குழம்பானது நன்கு பக்கங்களிலும்  ஒழுகி ஓடின. எரிமலையின் சாம்பல்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரையிலும் சென்று படிந்தன.
 இந்த எரிமலையின் சாம்பல் விவசாயத்திற்கு ஏற்ற உரமாக மாறியது.
அந்த காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அதிக அளவில் எரிமலைகள் இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவைகளில் பல வெடித்துச் சிதறி மறைந்து விட்டது.
பூமியின் சுழற்சியின் வேகம் மற்றும்  சூரிய வெப்பம் குறைவின் காரணமாகவும் அந்த பகுதிகளில் கடுமையான குளிர்ச்சி நிலை ஏற்பட்டு அதனால் அந்த பகுதிகளில் இருந்த தண்ணீரானது பனிமலைகளாக  உறைந்திருந்தன