Monday, September 19, 2011

துக்காராம் பற்றிய ஒரு குறிப்பு

பண்டரி பக்தர்களில் மிகவும் முக்கியமானவர் துக்காராம். இன்றும் தமிழ்நாட்டில் அவருடைய பெயரைக் கொண்ட தெருக்களும், பஜனை மடங்களும் காணப்படுகின்றன. அவர் பாடிய பாடல்களை மகாராஷ்டிர அரசு, அரசுடைமையாக்கியுள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். நாமதேவர் என்ற பக்தர்தான் மீண்டும் துக்காராமாக வந்தார் என்று பல பக்தர்களின் நம்பிக்கை. இருபத்திரண்டு வயது வரை தங்கள் குடும்பம் நடத்திவந்த வியாபாரத் தொழிலையே பார்த்து வந்தார் துக்காராம். ஷாஜஹான் ஆட்சி முடிந்தது ஒளரங்கசீப்பின் ஆட்சி ஆரம்பித்த காலம் அது. அப்பொழுது மராட்டிய மாநிலத்தில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. எந்த அளவுக்குத் தெரியுமா ? இறந்த பிணத்தை மனிதர்கள் உண்டார்கள். தங்கள் குழந்தைகளையும் உணவின் பொருட்டு விற்க ஆரம்பித்தார்கள். சுமார் இரண்டு வருட காலத்துக்கு மழையே இல்லை. கோரமான பஞ்சம் தாண்டவமாடியது. அந்த சமயத்தில்தான் துக்காரமுடைய மனைவி வியாதியினால் பீடிக்கப்பட்டு காலகாதியை அடைந்திருந்தார். தன் வாழ்வில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரம், நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் எல்லாம் சேர்ந்து மஹா புருஷரான துக்காராமின் வைராக்கியத்தை அதிகப்படுத்தியது. எப்பொழுதும் தனிமையை நாடினார். தன் கிராமத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மலையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கலானார். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை போன்ற புனித நூல்களின் பாராயணத்தில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலை அவருடைய போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. குடும்பம், வியாபாரம் எல்லாம் அவருக்கு இரண்டாவதாகப் போய்விட்டதால், அதற்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இறைவனை நேருக்கு நேர் காண வேண்டும். என்ற வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இறைவனை அடைய நான்கு ஸ முக்கியம் என்பார் அவர்.
என்ன நான்கு ஸ என்கிறீர்களா ? ஸத்குரு, ஸத்ஸங்கம், ஸாஸ்திரம், ஸகுண பக்தி என்பதே அவை. குருவைத் தேடினார். பலரும் குருவாக தங்களைக் கருதிக் கொண்டார்கள். அல்லது குருவாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். உன்னிடம் உண்மை பூரணமாக இருக்குமானால், உன்னால் உண்மையை மட்டுமே ஏற்க முடியும். அதனால்தான் சுவாமி விவேகானந்தரால் ராமகிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் குருவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்தினத்தைப் பரிசோதிக்கத் தெரிந்தவன், போலி வைரங்களைத் தள்ளி உண்மையான வைரத்தை எப்படிக் கண்டுபிடிப்பானோ, அப்படி துக்காராமால் போலிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உத்தம உண்மையான குரு, அவருக்கு தியானத்தில் தரிசனம் கொடுத்தார். தன் கரகமலத்தை துக்காராமின் தலையில் வைத்து, விட்டலனின் மூல மந்திரத்தைக் காதில் உபதேசமும் செய்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய்விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ, அதுபோல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்தபிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே, அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது, ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம்போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க, தாங்கள் அருள்செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மகான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன்மூலம் அறியலாம்.

தீமைக்கெல்லாம் காரணம் பணம்



தீமைக்கெல்லாம் காரணம் பணம்* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.
* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.
* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.
* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.
* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.
* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?
* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.

Sunday, September 18, 2011

ஒளவையார் பெருமை

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி

"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

மனதை கட

நாட்டில் சுந்தரானந்தர் எனும் ஒருவர் மாயாவி போல் மாயங்கள் நிகழ்த்துவதாக அமைச்சர் வாயிலாக கேள்விப்பட்ட மன்னன் அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை.
செருக்குகள் இருவிதம்:
ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள். பாண்டிய மன்னனிடம் அதிகாரச் செருக்கிருந்தது.கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது.

ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு 'நான்' அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது.

அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார்.
''உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.''
''அதற்கு..?''
''நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.''
''இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா
ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?''
''அது... அது... அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது அவர் உத்தரவு.''
''அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள். எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை.
'நான்' என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ...''
''மாயாவியே... நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?''
''என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்!  போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு...''
சுந்தரானந்தர் போட்ட போடு _ அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர். மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். 'ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை' என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை.
ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான்.
இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார்.


சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம் அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான்.
இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார்.
அதுவும் அப்பிரதட்சணமாய்....! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..!
அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது.
அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.
''நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?'' அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான்.
''தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளொளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை... முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை... இவர்கள் கூட சாதிக்கலாம்.''
''நம்ப முடியாது இதை... அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே
படைத்திருக்கிறான்...''
'உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.''
''எதை வைத்து இதை நான் நம்புவேன்?''
''வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்...'' _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது!
''தவசீலரே... இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்.... அப்பொழுது நான் நம்புகிறேன்.''_ அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.
''பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..'' _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது.
அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி
உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது.
பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார்.
சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது.
தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.
பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.
கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக்
கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான்.
ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென எடுத்துக் கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.
இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்...

மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி 'பூக்கொட்டாரம்' போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.

பயமில்லாதவர் யார்?



* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.
* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.
* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.
* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.
* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

பிறரைப் பழித்துப் பேசாதீர்



* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.   
* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.
* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

மழை பெய்வது யாருக்காக?



பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும்.   துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.                நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர்.  நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.

பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

தேனீயைப் பாருங்கள்



* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.
* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.
* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.
* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன். 

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும்போது, அப்பொருட்களின் நிலையில்லாத தன்மையை நினைவில் கொள்ளுங்கள். என்றும் நிலையான இறைவனின் புனிதத்திருவடிகளில் அடைக்கலம் அடையுங்கள்.
* பலவிதமான எண்ணங்களையும் மனதில் எண்ணிக் குழப்பம் கொள்ளாதீர்கள். ஒரே ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே சிறந்தது. எதிர்மறையான சிந்தனைகளை தொடர்ந்து எண்ணினால் நம் மன ஆற்றல்கள் சிதறடிக்கப்படுகின்றன.
* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. ஒருவன் தன் குறைகளை உணரத் தொடங்கினால் மற்றவர்களிடம் குறைகளைக் காண முடியாது.
* அலை பாய்வது மனத்தின் இயல்பே. அம்மனத்தைக் கட்டுப்படுத்துவதில் இறைநாமங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இறைவனின் திருநாமங்கள் நம் புலன்களை விட ஆற்றல் கொண்டவை. நமக்கு என்றென்றும் நிலையாக இருக்கின்ற உண்மையான சொந்தம் கடவுள் ஒருவர் மட்டுமே.
* எதைச் சாப்பிட்டாலும் முதலில் கடவுளுக்கு அதை நிவேதனம் செய்ய வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்த உணவை உண்பவர்களின் உடலும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன.

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

 யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்
தொடங்கினால் அதுவே கடைசியில் உங்கள் இயல்பாகிவிடும்.
* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்
இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.
* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.
* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள் பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்
சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய பலன் நம்மை வந்தடையும்.
* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம் கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.
 

துடைப்பத்துக்கு மரியாதை கொடு



* அனைவருக்கும் அவரவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். துடைப்பமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதையைத் தரவேண்டும். எல்லா வேலைகளையும் பக்திபூர்வமாகச் செய்ய வேண்டும்.
* எதைச் சாப்பிட்டாலும், முதலில் அதைக் கடவுளுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும். கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யாத எதையும் உண்ணக்கூடாது.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து அமைவதில்லை. அப்பொருளை எவ்வளவு அன்புடன் கொடுக்கின்றனர். என்பதைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு உயரும்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல. நம் மனமும் கெட்டுவிடும். அதனால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். அதனால் நாம் நம் கடமையில் முழுமையாக நம்மை இணைத்துக் கொண்டு ஆர்வமுடன் செயல்படவேண்டும்.
* துன்பங்களால் நொந்து வருந்துபவர்கள் தங்கள் உள்ளங்களை இறைவனிடம் திறந்து காட்டுங்கள். ""இறைவா! எனக்கு அமைதி கொடு!'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

சோம்பேறித்தனம் கூடாது

* எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
* முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.
* இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.
* சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.
* காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.

ஏற்றத்தாழ்வற்ற நிலை



ஆன்மிக சாதனை என்பது இறைவனின் தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்குவதாகும். இறைவனிடம் அடைக்கலம் புகுபவனுக்கு, விதி தன் கைகளினாலேயே தான் எழுதியதை அழித்து விடுகிறது. உலகியல் வாழ்க்கையில் மக்களுக்கு மிக ஆழ்ந்த பற்று இருக்கிறது. பலரில் ஓரிருவரே இந்தப் பற்றில் இருந்து விடுபடுகின்றனர். அதிக பற்று கொண்டவன் வாழ்வில் சலனப்பட்டு வருந்துகிறான். செடியில் இருந்து பறிக்கப்பட்டு விட்டால், இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் மலர் பெருமை கொள்கிறது. இல்லாவிட்டால், செடியில் இருந்து வாடி உயிர் விடுவதையே அது பெருமையாகக் கருதுகிறது. செடியில் பூத்த மலரினை இறைவனுக்கு அர்ச்சிப்பது போல, வாழ்க்கையை ஆண்டவனுக்காக அர்ப்பணித்தல் மட்டுமே பயனுள்ள வாழ்வாகும். இல்லாவிட்டால் வாழ்வதில் அர்த்தமில்லை. பணக்காரன் தன் பணத்தால் இறைவனை வழிபடும் அடியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஏழையோ, இறைவனது திருநாமத்தைத் திரும்பத்திரும்ப ஜபிப்பதன் மூலம் அவரை வழிபட வேண்டும். அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும். அன்பில் பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல. 

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!



* மனிதர்களில் யாரிடமாவது அன்பினைச் செலுத்தினால் அதற்காக நாம் துன்பப் பட்டே ஆக வேண்டும். எவன் தன் அன்பினை முழுமையாக கடவுளுக்குத் தருகிறானோ அவனே உண்மையில் பாக்கியவான். இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் என்பதே கிடையாது.
* கவலைப்படாதீர்கள்! அலைபாயும் மனதை அடக்கும் வலிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைநாமத்தை விடாது ஜபித்து வருபவர்களால் மட்டுமே புலன்களை கட்டுப்படுத்த முடியும்.
* கடமைகள் எவ்வளவு இருந்தாலும், பணிச்சுமை உங்களை எப்படி அழுத்தினாலும் இறைவழிபாட்டினைத் தவற விடாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வழிபாடு செய்வதை முக்கிய கடமையாகக் கொள்ளுங்கள்.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தது கிடையாது. அப்பொருளை கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகி விடும். * உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்கு படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள்.

 

கடவுள் நமக்கு உறவினர்

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு  சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத் தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,  நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்
தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை
நெருங்குகிறான்.

இதயத்தைத் திறந்து காட்டு


ஒருவர் எங்கிருந்தோ உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அவரே கடவுள். அவரை எப்போதும் மறக்காதே. அவருடன் உள்ள தொடர்பு மட்டுமே என்றும் நிலையானது. மற்றவையெல்லாம் அழிந்துவிடக் கூடியவையே. இந்த கலியுகத்தில் மனதால் செய்யும் பாவங்கள் பாவமே அல்ல. எனவே, வேண்டாத கவலையிலிருந்து விடுபடுவாயாக. வேண்டாத பயங்களை வளர்த்துக் கொண்டு உன் வாழ்நாட்களை வீணடித்து விடாதே. உனக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும் பாலத்தின் அடியில் ஓடும் வெள்ளம் போல் ஓடிவிடும். அதனால் உன் துன்பங்களுக்குள் உன்னை மூழ்கடித்து வருத்திக் கொள்ளாதே. தினந்தோறும் செய்ய வேண்டிய கடமையைச் சிறிது நேரமாவது மனஒருமைப்பாட்டுடன் செய்தாலும் போதும். நீ உன் பிறவிப் பயனை பெற்றவனாவாய். துக்கத்தில் வருந்தினால் உன் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டு. எனக்கு மனஅமைதி தந்தருள்வாய் என்று கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய் . நிச்சயம் மனஅமைதி பெறுவாய்.
பிறரிடம் குற்றம் காணும் ஒருமனிதன் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்வான். ஆனால், மனத்தூய்மை உடையவனோ எல்லாவற்றிலுமே தூய்மையைக் காண்பான்.

தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்


நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற வேண்டும்.

Saturday, September 17, 2011

நல்லது நடக்குமென நம்புங்கள்

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.

பொறுமைதான் சிறந்த பண்பு

* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன
ஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.
* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி
அறியத் தொடங்குவது தான்.
* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு
ஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.

எல்லாம் விளையாட்டே



* இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததாகவே உலகம் இருக்கிறது. துன்பமில்லா விட்டால் இன்பத்தை ரசிக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். எல்லா மக்களும் ஒரே நேரத்தில் இன்பத்துடன் இருக்க வேண்டும் என்பது இயலாத ஒன்றாகும். எங்கும் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்திற்கே மதிப்பிருக்காது. மதிப்பில்லாத போது இன்பத்தை பெற விரும்பும் முயற்சியும் இல்லாமல் போய்விடும்.
* இறைவன் ஒருவனே நமக்கு நிரந்தரமான உறவு. மற்ற உறவுகளெல்லாம் நிலையில்லாதவை. இருப்பதுபோலத் தோன்றி பாதியிலேயே மறைந்து விடும். இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். நாம் அவரைப் புரிந்து கொள்வதில் காட்டும் தீவிர தன்மைக்கு ஏற்பவே அவரை அறிந்து கொள்ள முடியும்.
* வீட்டில் மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும் போது அன்றைய விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர வேண்டும். குறிப்பாக நம் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும். முன்பு எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கிறோம் என்ற சுயசிந்தனையினால் நம் வாழ்வில் சரியான பாதை எதுவென்ற தெளிவு ஏற்படும்.
* மரணத்தைக் கண்ட மனிதன் அழுகிறான். ஆனால், மகான்கள் மரணத்தைக் கண்டு சிரிப்பார்கள். ஏனெனில் உண்மையை உணர்ந்தவனுக்கு எல்லாம் விளையாட்டே என்பது நன்கு தெரியும். 

நீங்கள் ஒரு திறமைசாலியா?




* கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை நினைத்து மனம் கலங்காதீர்கள். அது நம்மை விட்டு சென்றுவிட்ட ஒன்று. அதை நினைத்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.
* நாம் மட்டும் சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில் அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்.
* உங்களுக்கு ஒரு திறமையோ, செல்வமோ அல்லது எந்த சிறப்புத்தன்மை இருந்தாலும், அந்த ஆற்றல்வளத்தை பிறர் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை நமக்கு அதை வழங்கி இருக்கிறது.
* ஒரு மனிதன் அன்றாடம் தன் கடமையாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்
களுக்கும் நன்மையைத் தரும். இதனால் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.கடமையைச் செய்வதில் தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும்.
* ஒருவன் தன் கடமைகளை அக்கறையுடன் செய்யும் போது அற்ப நினைவுகள் அவனை தீண்டுவதில்லை. எந்த வேலையும் செய்யாமல் மனிதன் உட்கார்ந்திருந்தால் பலவகையான பயனற்ற எண்ணங்களும், தீய பண்புகளும் அவன் மனதில் புகுந்து விடும்.

கட்டாய தியானம் வேண்டாம்

* உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் இறைவனுடைய கருணை எப்போதும் பொழிந்து கொண்டிருக்கிறது. கருணையைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. தியானத்தை ஒழுங்காகச் செய். இறைவனின் எல்லையற்ற கருணையைப் புரிந்து கொள்வாய். உண்மை அன்பையே கடவுள் விரும்புகிறார்.

* தியானம் செய்ய முடியவில்லை என்றால் ஜபம் செய். ஜபத்தின் வாயிலாகவும் அனுபூதியடையலாம். பாராயணம் தியானம் செய்யும் மனநிலை வருமானால் நல்லது. கட்டாயப்படுத்திக்கொண்டு தியானம் செய்யாதே.

* காற்று எவ்வாறு மெழுகுவர்த்தியின் சுடரை அலைக்கழிக்கிறதோ அதுபோல ஆசைகள் நம் மனத்தை அலைக்கழிக்கின்றன.

*மனிதனுடைய புத்தி நிலையற்றது. இது ஆணியின் பிரிக்கு ஒப்பானது. ஒரு பிரி தளர்ந்து விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது.

* அலைபாய்வது மனதின் இயல்பு. இறைவனின் நாமம் பலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாமல் விட்டதற்காக கவலைப்படாதே.

* கணவன், மனைவி, உடல் உட்பட அனைத்தும் மாயை. இவை மாயையின் தளைகள். இந்தத் தளைகளில் இருந்து விடுபடும் வரை உன்னால் பிறவிக் கடலைக் கடந்து மறுகரையை அடைய இயலாது.

* இவ்வுடல் தீக்கிரையாகும் பொழுது மிஞ்சுவது ஒரு பிடிச்சாம்பலே. அழகே வடிவாக விளங்கினாலும், வலிமை நிறைந்ததானாலும் இவ்வுடலின் முடிவு சாம்பலாவது தான். இருப்பினும் மக்கள் இவ்வுடல்மீது எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள்?

* துன்பங்களால் நொந்து கிடக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் திறந்து காட்டு நைந்துருகி கண்ணீர் விட்டு அழுதால், படிப்படியாக நீ அமைதி பெறுவாய்.

பொறுமையே சிறந்த பண்பு


பணம் மனத்தை மாசறச் செய்கிறது. பணத்தில் உம்மை வெகு, அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டீரானால், நீர் அதன் கவர்ச்சிக்குள்ளாவீர், பணத்தின் மோகம் அத்தகையதாகும்.

உலகினில் நீர் காணுகின்ற விபத்துக்கள் யாவற்றிற்கும் பணமே மூலமாகும். பணமானது ஒருவனுடைய மனம் வேறு திசைகளில் விகாரப்படுமாறும் செய்துவிடுகின்றது.

போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறில்லை.

வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.

அஞ்சவேண்டாம்! மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாக சகித்துக் கொள்.

எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்.

ஒருவனிடம் நல்வினை தோன்றும்போது அவனது சிந்தனைகள் இறைவனை நோக்கித் திரும்புகின்றன. தீவினை அவனிடம் தோன்றுமானால் தீய சிந்தனைகளே அவனிடம் எழுகின்றன. இவை அனைத்தும் இறைவனுடைய திருவுளப்படியே நடக்கின்றன.
எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். இறைவனுடைய பாதார விந்தங்களில் மனிதன் தன்னை முழுமையாக அடைக்கலமாக்கும் போது அவனுக்கு எல்லாவற்றையும் இறைவன் அருளுகிறார்.

கண்ணீருடன் பிரார்த்தியுங்கள்


ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தா அமைகிறது? அப்பொருளை எவ்வளவு பக்தியுடனும் அன்புடனும் கொடுக்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு கணிக்கப்படுகிறது.

துக்கத்தில் அடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, எம்பெருமானே! எனக்கு மன அமைதி தந்தருள்வாய் என்று பிரார்த்தியுங்கள்! படிப்படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன், தனது கர்மத்தின் பலனால் அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறந்து மடிகிறான். இது பல தடவைகள் சம்பவிக்கும் விஷயமாகும்.

தூய்மையே உருவான பகவானைத் தவம் புரிந்தாலன்றி அடைய முடியாது. பகவானுக்கு பக்தர்கள் தம்மை ஆத்மார்ப்பணம் செய்து வருவதும், பகவானிடம் பரிபூரணமான நம்பிக்கை கொண்டு வாழ்வதுமே அவர்களுடைய சாதனையாகும்.

உமது விரல்களும், நாக்கும் செயலற்றிருக்க, மனம் பகவத் ஸ்மரணை செய்துகொண்டே இருப்பதை நீர் பிற்பாடு காண்பீர்.

பிரம்ம மார்க்கம் வெகு கடினமானது. நீர் குருதேவரை (ராமகிருஷ்ணர்) பிரார்த்தித்துக் கொள்ளும். அவர் சரியான காலத்தில் பிரம்ம ஞானத்தை உமக்குத் தருவார்.

என்னை நீ ராதையாகவோ அல்லது உன்னுடைய மனத்திற்கு ஏற்கக்கூடிய வேறு எந்த முறையிலோ கொள்ளலாம். உன்னுடைய தாயாராகவோ கூட என்னை நீ கருதினாலும் போதும்.

அகங்காரத்தால் அந்தகர்களான மக்கள் கர்மத்தைப் பொறுத்தமட்டில் தாமே சுதந்திரமான கர்தாக்கள் என நினைக்கின்றனர். அவர்கள் பகவானைச் சார்ந்து இருப்பதில்லை. தம்மை நம்பியிருப்பவரைப் பகவான் ரட்சிக்கிறார்.























































































 

தியானம் செய்வது எப்படி?


  
ஒருவன் இடைவிடாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை மந்திரத்தை ஜபிக்கும்போது, அவனுடைய மனம் தானாகவே வலிமையடைந்து, தியானத்தில் மூழ்குகிறது. இறுதியில் குண்டலினி சக்தி அவனிடம் விழித்தெழுகிறது. தூய்மையான மனம் படைத்தவர்கள் தியானம் செய்யும்போது, அவர்கள் ஜெபிக்கும் மந்திரம் தானாகவே எந்தவித முயற்சியும் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்து கொப்பளித்து பொங்குகிறது. யார் இந்த நிலையை அடைகிறார்களோ அவர்கள் ஜபத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

* எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி, நல்லுணர்வுகளை உருவாக்க தியானம் ஒரு சிறந்த வழி. ஆழ்ந்த தியானம் என்பது முதலில் சிரமமாகத் தோன்றினால், கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தையே ஜபம் செய்யுங்கள். நாளடைவில் ஜபம் செய்யும் நிலையே தியான நிலைக்கு மாறி, மனதை ஒருமுகப்படுத்த வாய்ப்பு கிட்டும். அப்படியும் மனம் அடங்காவிட்டால், மனத்தூய்மை ஏற்படுவதற்கு வழி பிறக்கும்.

* மலர்களை கையில் எடுத்து முகர்ந்து பார்க்காவிட்டாலும், அவற்றின் மணம் நம் நாசியை எட்டுகிறது. சந்தனத்தை அரைத்தாலே நம் கையிலும் சந்தன மணம் கமழ்கிறது. அதைப்போலவே ஜபம் செய்தாலே தியானநிலைக்கு அது மூலாதார சாதனையாக அமைந்துவிடுகிறது. ஜபமானாலும், தியானமானாலும் நம்பிக்கையோடு, பரிசுத்தமான உள்ளத்தோடு, தீவிர வைராக்கியத்தோடு செய்ய வேண்டும்.

* மந்திரம் உடலை தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தை ஜபிப்பதால் மனிதன் தூய்மையடைகிறான்.

இறைவனை நேசிப்பதே புண்ணியம்

* ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும்.
* உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும்.
* எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான்.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான்.
* உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான்.
-

திருப் புகழின் பெருமை

பதினைந்தாவது நூற்றாண்டில் முருக கடவுளை நேருக்கு நேராகத் தரிசித்தவர் அருணகிரிநாத சுவாமிகள். இவர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் மந்திர மயமானவை என்று காஞ்சி மகா சுவாமிகள், தணிகைமணி செங்கல்வராயபிள்ளை, வள்ளிமலை சுவாமிகள், திருப்புகழ் மணி T. M. கிருஷ்ணசுவாமி ஐயர், திருமுருக கிருபானந்தவாரியார், முதலான மகான்கள் எல்லாம் கூறி இருக்கிறார்கள். அப்படிப் பட்ட திருப்புகழ் பாடல்களின் சக்தி அளவில்லாதது. அவற்றில் முக்கியமான திருப்புகழ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கூறிய மகான்கள் எல்லாம் பல முறை இப்பாடலைச் சொல்லி இதன் பெருமையை பறைச்சாற்றி இருக்கிறார்கள்.    
 இதன் பெருமையைச் சொல்லி உபதேசித்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
திருமணம் ஆகாதவர்கள் இப்பாடலை நாற்பத்து எட்டு நாட்கள் தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ ஆறுமுறை பாராயணம் செய்தால், எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சரி, தடைகளாக இருந்தாலும் சரி அவைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பது உறுதி. திருமணம் ஆனவர்கள் இப்பாடலை பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்பது உறுதி.
பாராயணம் செய்யுங்கள் பலனை அடையுங்கள். முருகன் அருள், முன் நிற்கட்டும்.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து     வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்     வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப     மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து     குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த     மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த     அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்     களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த     பெருமாளே.

எண்ணிப்பார்!!!

நீ யாருக்கும் சொந்தமில்லை; யாரும் உனக்குச் சொந்தமில்லை என்பதை நினைவில் கொள்.  இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் ஒரு நாள் திடீர் என்று விட்டு விட வேண்டுமென்பதை நினைத்துப் பார். ஆகையால் இறைவனிடம் இப்போதே அறிமுகப் படுத்திக் கொள்.  தெய்வீக ஞானமென்னும் பலூனில் தினமும் சவாரி செய்து வரப் போகின்ற மரணம் என்னும் சூட்சும யாத்திரைக்கு உன்னைத் தயார் செய்து கொள். மாயையினால் நீ உன்னைச் சதையும் எலும்பும் கூடிய ஒரு  கட்டான உடலாகக் காண்கின்றாய். அது ஒரு துன்பக் கூடமே தவிர வேறல்ல. இடை விடாது தியானம் செய். அதனால் நீ சீக்கிரமே உன்னை எல்லா விதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய். உடலின் கைதியாக இருந்து கொண்டிருப்பதை நிறுத்து.  யோகம் என்னும் ரகசியத் திறவு கோலின் மூலம் பரம்பொருளினுள்  தப்பித்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
 உன் மனத்திலிருந்து பிடிவாதமான சாத்திரக் குப்பைகளைக் களைந்தெறி. நேரடி அனுபவம் எனும் தெளிந்த அறிவைப் பெறு.  உன் ஆற்றல் வாய்ந்த வழிகாட்டுதலுக்கு உன்னைப் பொருத்தமாக்கிக் கொள். வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு குழப்பத்திற்கும் தெய்வீகக் குரலிடம் விடையுண்டு.

நம்மை பெற்றெடுத்த தந்தை மட்டும் தந்தை இல்லை, ஒன்பது பேர்!!!

த‌ந்தை என்றாலே ந‌ம்மைப் பெற்ற‌வ‌ர் ம‌ட்டும்தான். ஆனால் ந‌ம் ப‌ழ‌ந்த‌மிழ் நூல்க‌ள், இன்னும் ஓர் எட்டு பேர்க‌ளைச் சேர்த்து, அவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் த‌ந்தையாக‌வே எண்ணி ம‌ரியாதை செலுத்த‌ வேண்டும் என‌க் கூறுகின்ற‌ன‌.

முத‌ல் த‌ந்தை ‍‍‍‍‍‍‍-‍ பெற்றெடுத்த‌வ‌ர்.
இரண்டாவ‌து த‌ந்தை ‍- ஒரு வேளை, த‌ந்தையை இழந்த‌வ‌ராக‌ இருந்தால்.. ஆத‌ரித்து வ‌ள‌ர்த்த‌வ‌ர்.
மூன்றாம் த‌ந்தை - அன்போடு க‌ல்வியைச் சொல்லிக் கொடுத்த‌வர்.
நான்காம் த‌ந்தை - ஞான உப‌தேச‌ம் செய்த குருநாத‌ர்.
ஐந்தாம் த‌ந்தை - குற்றம் குறைக‌ள் இல்லாம‌ல் நல்ல‌ முறையில் ஆட்சி செய்யும் அர‌ச‌ர்.
ஆறாம் த‌ந்தை ‍- ஆப‌த்து‍ நேரும்போது, "ப‌ய‌ப்ப‌டாதே!" என்று சொல்லி ஆப‌த்திலிருந்து காப்பாற்றித் துய‌ர‌த்தைத் தீர்த்த‌வ‌ர்.
ஏழாம் த‌ந்தை ‍‍‍- (ந‌ம்மிட‌ம்) அன்பு கொண்ட‌ உள்ள‌ம் உடைய‌வ‌ர்.
எட்டாம் த‌ந்தை - ந‌ம‌து ம‌னைவியைப் பெற்றெடுத்த‌வ‌ர்.
ஒன்ப‌தாம் த‌ந்தை - ந‌ம‌து வ‌றுமையைத் தீர்த்த‌வ‌ர்.
இந்த‌ ஒன்ப‌து பேர்க‌ளையும் தின‌ந்தோறும் த‌ந்தையாக‌க் க‌ருதி ம‌ரியாதை செலுத்துவ‌தே நீதியாகும்.

இதைச் சொல்லும் "கும‌ரேச‌ ச‌த‌க‌ம்" ஆறாம் பாட‌ல் இதோ:
த‌வ‌ம‌து செய்தே பெற்றெடுத்த‌வ‌ன் முத‌ற்பிதா
  த‌னை வ‌ள‌ர்த்த‌வ‌ன் ஒரு பிதா
 த‌யையாக‌ வித்தையைச் சாற்றின‌வ‌ன் ஒரு பிதா
  சார்ந்த‌ ச‌ற்குருவொரு பிதா
அவ‌ம் அறுத்து ஆள்கின்ற‌ அர‌சு ஒரு பிதா ந‌ல்ல
  ஆப‌த்து வேளை த‌ன்னில்
 அஞ்ச‌ல் என்று உற்ற‌ துய‌ர் தீர்த்துளோன் ஒரு பிதா
  அன்புள‌ம் உளோன் ஒரு பிதா
க‌வ‌ள‌ம் இடு ம‌னைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
  க‌லி த‌விர்த்த‌வ‌ன் ஒரு பிதா
 காசினியில் இவ‌ரை  நித்த‌ம் பிதாவென்றுள‌ம்
  க‌ருதுவ‌து நீதியாகும்
ம‌வுலித‌னில் ம‌தி அர‌வு புனைவிம‌ல‌ர் உத‌வு சிறு
  ம‌த‌லையென‌ வ‌ரு குருப‌ரா!
 ம‌யிலேறி விளையாடு குக‌னே! புல் வ‌ய‌ல் நீடு
  ம‌லை மேவு கும‌ரேச‌னே!

 

உலக நீதி

உலக நீதி

உலக மக்களுக்குப் பொதுவான நிதிகளைக் கூறுகிறது இந்த உலகநீதி என்னும் இந்த நூல். இதில் 13 ஆசிரிய விருத்தப் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு விருத்தத்திலும் உள்ள ஒவ்வொரு அடியும் ஒரு நீதியைச் சொல்கின்றது. இந்த நூலை இயற்றியவர் உலகநாதர். இந்நூலின் கடைசி செய்யுள் மூலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் முருக பக்தர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது.

காப்பு

உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.
நூல்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 1

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 2

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 3

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 4

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்.
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 5

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே! 6

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே! 7

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 8

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 9

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே! 10

அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் தானே! 11

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 12

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே! 13

Wednesday, September 14, 2011

உலகமே ஒரு சந்தை......

தான் நெய்த துணிகளை சந்தையில் விற்பனை செய்தல் கபீருக்கு வாழ்க்கையின் ஓர் நிர்பந்தம். அப்படி செய்யும் பொழுது புத்திசாலியான வியாபாரி என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறார் இந்த வரிகளில்.

சண்டை குணமுள்ள வியாபாரியிடம் யாரும் ஒதுங்கி செல்லுவர். அதி தோழமையுடன் பழகினாலோ அளவுக்கு அதிகமான சலுகை கோறுவர். இது இன்னொரு வகை இடையூறு. இதை கபீர் ஒரு வியாபாரி என்ற முறையில் பொருள் கொண்டால் மேற்பார்வைக்கு தெரியும் உண்மை.

இதையே அவரது உயர்ந்த ஆன்மீக நிலையை மனதில் வைத்துப் பார்த்தால் ஆழமான இன்னோர் உண்மையும் புலனாகும். இந்த உலகமே ஒரு சந்தைக் கடை. இங்கு வரும் நாம் ஒவ்வொருவரும் பெற விரும்பும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அளவிற்கு அதிகமான பாசமும் அல்லது வெறுப்புணர்ச்சியும் தான் காரணம். இதை ஒதுக்கி வாழத்தெரிந்தாலே எல்லோருக்கும் அமைதிகிட்டும் என்ற உண்மையை உணர்த்துகிறார் கபீர்.
சந்தையில் நின்றான் கபீர் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் நாடிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம்
(வயிரம் : பகை)