Wednesday, March 26, 2014

கற்பூர தீபாராதனையின் உட் பொருள் என்ன?

மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகத்திலுள்ள காற்றுஒளி இலகுவாக உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும்.அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடை பெறும் போது 

இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப் பிளம்பான 
இறைவனை நாம்காணலாம்இதேபோல்,எண்ணங்கள்,சிந்தனைகள்என்று சதா அலைபாயும் எங்கள்உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடிஇருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள 
இறைவனாக காணலாம் என்பதையே கற்ர தீப ஆராதனை உணர்த்துகிறது.

கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு,பூரணமாய் கரைந்து 

காணாமல் போகிறதுஅதுபோல இறைஇன்ப ஒளியில்,அதாவது பூரண சோதியாகிய
இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகி விடவே பிறப்பெடுத்துள்ளோம் என்னும்
தத்துவத்தையும் கற்பூர தீபம் எங்களுக்குஉணர்த்துகிறது.
இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்பணித்து மன  நிறைவடையாமல் தன்னையே 

ர்ப்பணிப்பதையே அதாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே கற்பூர 
தீபாராதனையும்அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதாரவிந்தங்களில்
 நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறதுஇதையே,
" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"

என் கிறார்தாயுமானவர்.

Tuesday, March 4, 2014

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தின் பொருள்

அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
இதன் பொருள் வருமாறு;
அருணாம்: உதிக்கின்ற சூரியன்
கருணா: கருணை
தரங்கிதாக்ஷீம் - கண்களில் இருந்து வெளிப்படும் அலைகள், கருணை அலைகளை அள்ளி வீசும் கண்களையுடையவள் தேவி.
த்ருத - ஆதரவு
பாஷா - பாசக்கயிறு
அங்குஷ - அங்குசம்
புஷ்ப - மலர்
பாண - அம்புகளை (மலர்களை அம்புகளாக கொண்டவள்)
சாபாம் - வில்
அணிமாதிபி ராவ்ருதாம் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்யா, ஈசத்வ, வசித்வ சித்திகளை சூழ உள்ளவள்.
மயூகை - ஒளிக்கற்றை
அஹ - நான்
மித்யேவ - விரும்பும்
விபாவயே - பேரின்பம்
பவாநீம் - பவானி, லலிதா சஹஸ்ர நாமத்தில் 112 வது நாமம்.
இந்த ஸ்லோகத்தின் பொருள் வருமாறு: நான் பவானியை தியானிக்கிறேன், உயர்ந்த பேரின்பவடிவானவள், உதிக்கின்ற சூரியனின் நிறத்தை ஒத்த, இது முன்னைய ஸ்லோகத்தில் அவளது சிவப்பு நிறத்தினை உறுதி செய்கிறது. அவளது கருணை அலைகளை வீசுகிறது. இந்த தியான ஸ்லோகத்தில் நான்கு கைகளை உடையவளாக கருதப்படுகிறது. பின்னிரு கைகளிலும் பாசமும் அங்குசத்தினை கொண்டிருக்கிறாள். முன்னிரு கைகளிலும் கரும்பு வில்லும் மலர் அம்புகளையும் கொண்டிருக்கிறாள். இந்த இந்த ஆயுதங்கள் பற்றிய விபரமான புரிதல்கள் சஹஸ்ர நாம உரையில் தரப்பட்டுள்ளன. இவை நான்கும் தேவியினுடைய நான்கு பிரதான உதவியாளர்களை குறிப்பன. அஷ்டமா சித்திகள் அவளைச் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு சித்தியும் ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படுகின்றன. நான் உயர்ந்த ஆனந்தமும் ஒளிக்கற்றை போன்ற உருவமும் உடைய பவானி என்ற ரூபத்தினை தியானிக்கிறேன்