Friday, October 15, 2010

அன்பே சிவம்

உலகயியலுடன் எங்களை இணைப்பதும் அன்புதான். இறைவனின் திருவடியை அடைய வைப்பதும் அன்பு தான் என்பதை ஒவ்வொரு மானிடனும் நினைந்து ஒழுகினால் உலகமே அன்பு மயமாகி விடும்.  அன்பு மயமாக எண்ணத்திலும், விருப்பத்திலும், சொல்லிலும், செயலிலும் நாம் ஆகி விடுவோமானால் நாம் உலகத் துன்பத்தினின்றும் விடுதலை பெற்று உண்மை இன்பத்தை நுகரும் பெரு வாழ்வு பெறுவோம்.
" அன்பே சிவம்"  "ஜீவ சேவையே சிவ சேவை"  "மானிட சேவையே மகேஷ்வர சேவை"  என்கிற குறிக்கோள் கலந்த எண்ணம் எங்கள் எல்லோருக்கும் வரவேண்டும்.  சிவனுக்கு என் சேவை முழுதுமாக சமர்ப்பணம்.

.   

No comments:

Post a Comment