Wednesday, April 11, 2012

குருபெருமையைக் கூறும் கபீரின் தோஹாக்கள்....

குருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே
குருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே
கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.
துவைப்பவன் ஆசான் துணிசீடன் திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறைக்கூட்டி ஒளிரும் சிவமேயாம்
( திட்பம் = மன உறுதி : உறை = அழுக்கு அகற்றும் உவர் நீர், மந்திர உறை என்பது மன மாசை அகற்றும் செபமந்திரம் )குருவன்றி ஞானமும் உண்டோ குருவன்றி வருமோ மோக்கம்
குருவன்றி சத்தியம் புரியுமோ குருவன்றி மாயுமோ மும்மலம்
(மோக்கம் = மோட்சம்)ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் மனிதன் தாண்டிச் செல்லவேண்டிய முப்பெரும் தடைகள். இவைகளால் சேர்ந்துள்ள மனமாசை துவைத்து சுத்தம் செய்யும் வல்லமை குரு ஒருவருக்கே உண்டு. துணியை கல்லின் மேல் அடித்து துவைக்க வேண்டும். குரு வைக்கும் ஒவ்வொரு சோதனையும் சீடனுடைய மனவுறுதி என்ற கல்லில் அடிப்பதற்கு ஒப்பாகும். அப்போது அவனுடைய துணைக்கு நிற்பது குரு உபதேசித்த செபமந்திரமே. அதை உறுதியாகப் பிடித்து கொண்டால் மன அழுக்குகள் கரைந்து சத்தியம் அசத்தியம் என்பவனெல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. ஆகவே குருவை விட வேறு யார் ஒரு சாதகனை கரையேற்ற வல்லார் ? சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் ? ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும்? இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுதல் என்பது இல்லாமல் முடியாது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'ஸ்வாமி ராமா'வின் "Life with Himalayan Masters" என்ற புத்தகத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் படியுங்கள். குரு கொடுக்கும் சோதனைகள் புரியும்

No comments:

Post a Comment