Tuesday, August 5, 2014

தஷிணாமூர்த்தி வழிபாடு..

தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.
அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.
இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.
ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.
ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..

"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"

தஷிணாமூர்த்தி காயத்ரி..


"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்||"

No comments:

Post a Comment