Wednesday, July 9, 2014

குறள் பற்றி அறிஞர்களின் கருத்துகள்...

திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் திரிக்குறள் என்பதாகும்.
இதன் மூல நூல் மூவர் மொழியாக அழைக்கப்படும் திரிபேத வாக்கியமாகும்.
இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள்.
இது பாலி மொழியில் இயற்றப்பட்டதாகும்.
தன்மபீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது.
இதன் வழி நூலே திருக்குறளாகும்.
திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரம தேவர்.
மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.
சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம்.
இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம்
குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம்
சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால்.
பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது.
பின்னரே மற்ற நீதி நூல்கள் தோன்றின.
பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால் தான் அவருக்கு நான் முகன் என்று பெயர்.
தமிழில் தோன்றிய முதல் நீதி நூலும் அதுவே.
வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும்.
வள்ளுவர் வடநூல் சார்பு மிக்கவர். அவர் வைதீகச் சார்புடையவராதலின் தென்புலத்தார், இல்வாழ்வான் ஆகிய குறட்கள் மூலம் பஞ்சம காயறங்களினை ஈண்டொழுகக் கூறினார்.
ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும்.
மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
”ஆதி பகவன் அருமறை ஓதுமின்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.
”ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்
சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ” என்றும் சித்தர் கூறியுள்ளார்.
ஆக புத்தமதக்கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே.
வள்ளுவர் ஒரு பௌத்தரே!
காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் –வள்ளுவர் ஒரு வைதீகரே!

No comments:

Post a Comment