Thursday, July 10, 2014

காயத்ரி.. குண வளர்ச்சி... பரிணாம உயர்வு


காயத்ரி சாதனை ஒருவனது சூஷ்ம உடலில் எப்படி செயல் புரிகிறது?குணவளர்ச்சி மூலம், காயத்ரி மந்திர அலைகள் ஒருவனில் குறித்த குணவளர்ச்சியினை உண்டு பண்ணக்கூடியவை. ஒருவனது தமோ, ரஜோ, சத்துவ குணங்களை படிப்படியாக உருமாற்றியமைத்து ஒருவனது பரிணமத்தினை அதிகரிக்கிறது. உதாரணமாக தமோ குணம் நிறைந்த ஒருவன் காயத்ரி சாதனையினை ஆரம்பிக்கின்றான் எனில் அவனில் ரஜோகுணம் படிப்படியாக வளர ஆரம்பிக்கும். சோம்பித்திரிந்தவன் உற்சாகமாக வேலையில் ஈடுபட ஆரம்பிப்பான். அதுபோல் ரஜோகுணம் மிகுந்தவனுக்கு சத்துவ குணம் வளர ஆரம்பிக்கும். இறைசாதனை, பொறுமை என்பன செய்யக்கூடிய பக்குவம் வளர ஆரம்பிக்கும். 
காயத்ரியின் மூன்று பாதங்களும் சரஸ்வதி,மஹா லட்சுமி, காளி ஆகிய மூன்று சக்திகளை குறிக்கும். சரஸ்வதி ஞான சக்தியாக யோகிகள், முனிவர்களில், தத்துவ ஞானிகளிடம் காணப்படும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்க்குபவள், அதாவது இவர்கள் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அதுபோல் பெற்ற சமூக சீர்திருத்தவாதிகள், செல்வந்தர்கள், புத்தி ஜீவிகள் என்பவர்கள் மஹா லட்சுமியின் அருள் பெற்றவர்கள். பௌதீக விஞ்ஞானிகள் காளியின் அருள் பெற்றவர்கள், அதாவது பிரபஞ்ச சக்தியின் குறைத்த அலைவேக சக்தியினை தம்மில் கவர்ந்து செயற்படுத்த கூடிய வழிமுறையினை ஏதோ ஒரு முறையில் அறிந்தவர்கள். 
இந்த மூன்று அம்சங்களும் ஒருவருக்கு சரியாக அமையும் போதுதான் வாழ்வு பூரணமடைகிறது, அதாவது ஒருவருக்கு ஆன்ம வாழ்க்கை, புத்தி/மனோமய வாழ்க்கை, பௌதீக வாழ்க்கை ஆகிய மூன்றும் சரியாக வளர்ச்சியுறும் போதுதான அவனது பரிணாமம் உயர ஆரம்பிக்கிறது. இதனை ஒருவருடைய கர்மம், சூழல், தன்மை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற விகிதத்தில் வளர்ச்சியுற செய்யும் அரிய சாதனமே காயத்ரி சாதனை.  
அனைவரும் காயத்ரி சாதனை செய்வோம்!

No comments:

Post a Comment