Tuesday, October 9, 2012

கன்மாவை அனுபவி....ஆணவத்தை அழி,..மாயையை விலக்கு .....

இறுதியாக ஞானம் மலர்கின்ற ஒவ்வொரு சாதகரின் வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்த களமாக ஆன்மீக வரலாற்றின் பக்கங்களில் விவரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிறவிகளிலும் மனிதன் அனுபவிக்கின்ற நிகழ்வுகளுக்கு உட்பட்டு ஞானம் அடைகின்ற காலம் வாய்க்கிறது.....

கன்மாவை அனுபவி.

ஆணவத்தை அழி 
மாயையை விலக்கு 

என்பதே  முனிபுங்கவர்களின் கொள்கையாகும். அந்த வழியிலே ஞானம் அடைகின்ற பாதை ,அடையப் படுகின்ற பாதை சீராக ,தெளிவாகவே  இருக்கிறது.  ஆன்ம ஞானம் அடைகின்ற சாதர்களுக்கு இப்பிரபஞ்சமே ஆன்மாவின் பிரதி பலிப்பாக தெரிவதால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் ஒன்றாக தோன்றுகிறது. 

எனவே இதுவரை தாங்கள் தர்மத்தின் பொருட்டு மேற்கொண்ட பணியால் விளைந்த புண்ணியத்தையும் இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து நான் அல்ல ,எல்லாம் நீயே என்ற சரணாகதி நிலைக்கு ஞானிகள் வந்துவிடுகின்றனர்.

தஞ்சை பெரிய கோவிலை பற்றி விவரிக்கும்போது எவ்வாறு மாமன்னர் ராஜ ராஜ சோழனைப் பற்றி கூறாமல் இருக்க முடியாதே அதைப் போல நமது காசி விஸ்வநாதர் திருக்கோவிலை பற்றி விவரிக்கும்போது கிருஷ்ணனைப் பற்றி சிறிது விவரித்தே ஆக வேண்டும். அந்த வகையிலே தான்

கடலின் பரப்பை எவ்வாறு கைகளால் விளக்க முடியாதே அதே போன்று இறைவனின் சிறப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நீக்க மற எங்கும், எவ்வுயிரிலும் சத் சித் ஆனந்த சொரூபியாய் இறைவன் குடிகொண்டிருந்தாலும், இப்பரந்த பூவுலகின் சில இடங்களில் தான் அவனுடைய அருட் கடாட்சம் பரவி நிற்கிறது.  அவ்வாறு நிற்கக் காரணம் என்னவென்றால் அது குருமார்களின் பிரார்த்தனையினால் மட்டுமே ஆகும். 

 உண்மை ஞானம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவாய் காணக்கூடியது. சாதி, இனம், மதம், மொழி, என்ற பேதங்களை விடுத்து அனைவரையும் வேறுபாடு நீங்கி அரவணைத்துக் கொள்ளும். ஒரு சாதகன் ஞான வாயிலை மிதிக்கத் தொடங்கும்போதே இத்தகைய பண்புகள் அவனிடம் குடிகொண்டிருக்கும். 

எந்த பணியினை ஒருவர் மேற்கொல்கிராரோ அதற்கு ஏற்ப அந்தப் பணியானது அவரது கன்மாவை அனுசரித்து ஏற்றத் தாழ்வுகளை காண்கிறது. 

தொன்று தொட்டு வந்த பாண்டிய மன்னர்களின் காலத்தில் சீரும் , சிறப்புடன் விளங்கி வந்த நமது ஆலயம் காலம் செல்லச் செல்ல மிகவும் சிதிலம் அடைந்து கேட்பாரற்ற நிலைக்கு வந்தது. பின்புவந்த தலைமுறைக்கும் அந்த ஆலயத்தை பற்றி சிறப்பித்துச் சொல்ல பெரியோர்கள் இல்லாமல் போனதால்தான் இந்த நிலை நிகழ்ந்து வந்தது.

அரசர்கள் அனைவரும் இவ்வாலயத்திற்கு  பல்வேறு பூசைகளும் நிகழும் வண்ணம் நிலபுலன்களையும், வாரிசுதாரர் வழியாக பொறுப்பாளர்களையும் நியமித்து விட்டுச் சென்றனர். அப்படி இருந்தும் இந்த நிலைக்கு ஆலயம் சென்றதற்கு வினைப் பயனோ அல்லது அதை ஏற்று நடத்தியவர்களின் விதிப் பயனே என்று தெரியவில்லை.

பண்புகளால் முழுமையான மனிதத்துவம் பெற்ற ஒருவரால் , விலங்கு நிலை மனோபாவம் கொண்ட மனிதர்களை சமாளிப்பது ஒரு கலை என்று கூட கூறலாம்.

 
ஒவ்வொரு பிறவிகளிலும் நிகழ்கின்ற அனுபவத்தால் மனித மனம் முன்னேறுமே தவிர, ஞானிகளின் அடி பற்றி தர்மத்தின் வழி நிற்கும் பாக்கியம் பெரும்பாலோனருக்கு கிடைப்பதில்லை.   நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும் நமது ஆழ்ந்த தேடல் இல்லாமல்  கன்மா மனிதர்களின் கண்ணை மறைக்கிறது.


அகங்காரத்தின் விளைவாக நல்லவர்களையும், தீயவர்களையும் ஒரு சேர பார்க்கும் மனோ நிலை மனிதனுக்கு இயல்பாக வந்தமைகிறது.

தர்மம் என்பது மனித மனத்தின் இயல்பாக இருக்க வேண்டும்.   

வேறுபாடுகள் அற்று சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பது ஞானிகளின்  நோக்கம்.

எங்கே அஞ்ஞானம் இருக்கிறதோ அங்கேதான் ஞானத்தின் தேவை அதிகரிக்கிறது.


 

No comments:

Post a Comment