Wednesday, August 31, 2011

தாயைத் தந்தையை வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக...!

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக,
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்
திருமகன்(திருமகள்) நான் பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருகுருவின் அருள்பெறவே
திருமானின் அருள்பெறவே
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
தினம் தினம் வணங்குகின்றோம்
தாய்பூமியில் தவமிருந்தே
தரணிதனில் பக்குவத்தை
தன் உணர்வின் பொக்கிஷமாய்
தழைத்தோங்கும் உயர் ஞானமுடன்
தக்கதொரு செயலுருவாய்
திக்கெட்டும் சத்தியத்தின் சக்தி நிலை
திகழ்ந்தோடும் வளர்ச்சியில் யாம்
திகழ்ந்திடவே அருள் செய்வீர்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்


No comments:

Post a Comment