Wednesday, May 21, 2014

இன்றே நல்ல நாள் தான் - சின்மயானந்தர்

!



வாழ்வில் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்றோ முற்றிலும் விலகி விட வேண்டும் என்றோ ஆன்மிகம் போதிக்கவில்லை. செல்வம் நமக்கு தகாதது அல்ல. அதை மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்று தணியாத ஆசை தான் கூடாது. சேர்த்த செல்வத்தை நல்ல முறையில் சமூகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றே ஆன்மிகம் வலியுறுத்துகிறது. பொறுப்பினை இறுகப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாக தொங்கக்கூடாது. ஜனகர் சக்ரவர்த்தியாக இருந்தாலும், அரண்மனையிலே வாழ்ந்தாலும், மனதை எதிலும் ஒட்டாத வகையில் ஞானமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார். இதனால் தான் அவரை ராஜா என அழைக்காமல், "ராஜ ரிஷி' என்று அழைத்தனர். ராமனுக்கு மாமனாராகும் தகுதியே இதனால் தான் கிடைத்தது. ஞானமார்க்கத்தில் எப்படி நுழைவது என்று கேட்காதீர்கள். உடனே முயற்சியைத் தொடங்குங்கள். ஆரம்பித்தால் தானாகவே ஞானம் மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிடும். இன்றை விடச் சிறந்த நாள் வேறு இல்லை. பலரும் ஓய்வு பெறும் வயது வரை காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கத் தேவையில்லை. அப்போது வேறு பல சங்கடங்கள் குறுக்கிடக்கூடும். ஆன்மிக வழியில் செல்ல விரும்புபவர்கள் எளியமுறையில் இயன்றவரை முயற்சிகளைப் படிப்படியாக பின்பற்றத் தொடங்குவதே சிறந்தது

No comments:

Post a Comment