Wednesday, March 26, 2014

கற்பூர தீபாராதனையின் உட் பொருள் என்ன?

மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகத்திலுள்ள காற்றுஒளி இலகுவாக உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும்.அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடை பெறும் போது 

இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப் பிளம்பான 
இறைவனை நாம்காணலாம்இதேபோல்,எண்ணங்கள்,சிந்தனைகள்என்று சதா அலைபாயும் எங்கள்உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான்.அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடிஇருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள 
இறைவனாக காணலாம் என்பதையே கற்ர தீப ஆராதனை உணர்த்துகிறது.

கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு,பூரணமாய் கரைந்து 

காணாமல் போகிறதுஅதுபோல இறைஇன்ப ஒளியில்,அதாவது பூரண சோதியாகிய
இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகி விடவே பிறப்பெடுத்துள்ளோம் என்னும்
தத்துவத்தையும் கற்பூர தீபம் எங்களுக்குஉணர்த்துகிறது.
இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்பணித்து மன  நிறைவடையாமல் தன்னையே 

ர்ப்பணிப்பதையே அதாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே கற்பூர 
தீபாராதனையும்அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதாரவிந்தங்களில்
 நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறதுஇதையே,
" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"

என் கிறார்தாயுமானவர்.

No comments:

Post a Comment