Wednesday, January 1, 2014

குரு வந்தனம்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே!
தேடிடும் கலை அன்பொடு
தெளிவித்த என் ஈசன்
பாடும் என் நாவில் இசையாய்
படிபவர் என் குருநாதார்
பூவென யான் மலரவும்
போற்ற மணம் தந்தவர்
திரியென இருந்த மதி
தீபமாய் ஒளிர வைத்தார்
விதையென தளிராய் இருந்தேன்
விதைத்திட தளிர்த்தேன் மலர்ந்தேன்
ஆதாரம் குருவே பணிந்தேன்
அனைத்தும் உனக்கு அர்பணித்தேன்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே - பாவன குரு...!

No comments:

Post a Comment