Wednesday, June 12, 2013

நாம் எடுக்கும் ஒரு சிறு கூடுதல் முயற்சி‏

நாம் எடுக்கும் ஒரு சிறு கூடுதல் முயற்சி நமக்கும் நம் சுற்றத்திற்கும் மிகுந்த இன்பத்தை கொடுக்கும்.

1. ஒரு குறுகிய சாலைக்குள் இரு வண்டிகள் நுழைய முற்படும் போது முன்னே செல்ல அனுமதித்தவரை பார்த்து நன்றி சொல்லி புன்னகிப்பது..

2. சமைத்த உணவை மேஜை மீது வைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமால் அதை அன்போடு பரிமாறிக் கொடுப்பது..

3. நம் அன்புக்குரியவர் செய்த தவறை நினைத்து வருந்தும் நேரத்தில் அ...வரை உடனே மன்னித்து அணைத்துக் கொள்வது..

4. நாம் எதிர்ப்பார்க்கும் விடங்களை மற்றவருக்கு கொடுத்து மகிழ்வது..

5. 'மன்னிக்கவும்', ' நன்றி' இந்த வார்த்தைகளை அலுவலகத்தில் மட்டும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் வீட்டிலும் உபயோகிப்பது.

6. வீட்டையும் குழந்தையும் உங்களையும் அரவணைத்து பார்த்துக் கொள்ளும் உங்கள் துணைவியை மனதார அங்கீகரிப்பது..

7. முகநூலில் நல்ல பதிவை 'LIKE' செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு பின்னூட்டம் (comment) செய்து மற்ற நண்பர்களுக்கும் பகிர்வது

No comments:

Post a Comment