கபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந்து கர்மவினைகளின் கோட்பாட்டையும் ஒருங்கே வலியுறுத்தியவர் அவர். கடவுள் ஒருவனே என்றாலும் அவன் எங்கோ வெளியே தனியாக அமர்ந்து ஆட்சி செய்யவில்லை. ஒவ்வொரு ஜீவனிலும் அந்த இறைசக்தியே இலங்குகிறது. முயற்சி செய்வோருக்கு தன்னுள்ளேயே அனுபவ பூர்வமாக உணரக்கூடிய அத்வைத நிலையையும் அவர் அடைந்திருந்தார். இக்கருத்துகளை எதிரொலிக்கும் கபீரின் ஈரடிகளைப் பார்க்கும் முன், தமிழ் நாட்டு ஞானியர் சிலர் இதையே எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
சிவ வாக்கியர் பாடல் ஒன்று
காண வேண்டும் என்று கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமாகுமே
(தாணு =நிலைபேறு, தூண் ; மெய்யுளே தரித்தல் = உடம்புள்ளே உணர்தல் )
பூரண மாலையில் பட்டினத்தடிகள் சொன்னது :
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (733)
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீயிருந்தும்என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே (712)
இறைவனை "கண்ணின் மணி" என்பது சம்பந்தர் தேவாரம் :
கண்ணிடை மணி ஒப்பாய்,பழத்தினில் சுவையொப்பாய்
பண்ணிடை தமிழ் ஒப்பாய் கடுவிருள் சுடரொப்பாய்......
இப்பொழுது கபீரின் எண்ண ஓட்டம் இவர்களோடு எந்த அளவிற்கு இணைந்து போகிறது என்பதைக் காணலாம்.
கண்ணிடை மணி போலும் உள்ளிடை உறைவான் பரமன்
மண்ணிடை அலைவனே எங்கும் தேடி கருதறியா பாமரன்
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் உறை தழலே
உள்ளுள் உறைவான் ஈசன் விழிப்பரோ உணர்வில் இவரே
(சிக்கி முக்கி = ஒரு வித கல். காய்ந்த சருகுகளை சேர்த்து இரண்டு கற்களை ஒன்றுக்கொன்று உரசும் பொழுது தீப்பொறி உண்டாகி அவை தீப்பிடித்துக்கொள்ளும். ஆதிகாலத்து "Leaf Lighter" உள் உள் = உள்ளத்தினுள்ளே )
சிவ வாக்கியர் பாடல் ஒன்று
காண வேண்டும் என்று கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமாகுமே
(தாணு =நிலைபேறு, தூண் ; மெய்யுளே தரித்தல் = உடம்புள்ளே உணர்தல் )
பூரண மாலையில் பட்டினத்தடிகள் சொன்னது :
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (733)
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீயிருந்தும்என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே (712)
இறைவனை "கண்ணின் மணி" என்பது சம்பந்தர் தேவாரம் :
கண்ணிடை மணி ஒப்பாய்,பழத்தினில் சுவையொப்பாய்
பண்ணிடை தமிழ் ஒப்பாய் கடுவிருள் சுடரொப்பாய்......
இப்பொழுது கபீரின் எண்ண ஓட்டம் இவர்களோடு எந்த அளவிற்கு இணைந்து போகிறது என்பதைக் காணலாம்.
கண்ணிடை மணி போலும் உள்ளிடை உறைவான் பரமன்
மண்ணிடை அலைவனே எங்கும் தேடி கருதறியா பாமரன்
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் உறை தழலே
உள்ளுள் உறைவான் ஈசன் விழிப்பரோ உணர்வில் இவரே
(சிக்கி முக்கி = ஒரு வித கல். காய்ந்த சருகுகளை சேர்த்து இரண்டு கற்களை ஒன்றுக்கொன்று உரசும் பொழுது தீப்பொறி உண்டாகி அவை தீப்பிடித்துக்கொள்ளும். ஆதிகாலத்து "Leaf Lighter" உள் உள் = உள்ளத்தினுள்ளே )
No comments:
Post a Comment