* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் நம் ஆற்றல் வீணாகிவிடும். முயற்சிகளில் முழுவீச்சுடன் ஈடுபட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
* கடவுள் கொடுத்த உடலும், உள்ளமும் நமக்கான சாதனங்கள். அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரமும் நம்மிடம் தான் இருக்கிறது.
* தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், உலக நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களின் பின்னால் செல்ல உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
* பிறருக்காக வாழவேண்டும் என்ற பொது நல உணர்வு கொண்டவர்கள், சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.
* எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொண்டால், ஒவ்வொரு பொருளிலும் புனிதம் நிறைந்திருப்பதை உணர முடியும்.
-
No comments:
Post a Comment